Reading Time: < 1 minute ரொறன்ரோவில் சில பகுதிகளில் பல மணிநேர உறைபனி மழை அல்லது பனித் துகள்களைக் காணலாம் என கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சுற்றுச் சூழல் திணைக்களம், ரொறன்ரோ நகரத்திற்காக வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையிலேயே, இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமை திங்கட்கிழமை வரை தொடரும் எனவும், திங்கள்கிழமை காலைக்குள் சிலRead More →

Reading Time: < 1 minute லோவர்மெயிண் லேண்ட்டில் கடந்த 30 மணித்தியாலங்களில் மூன்று பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளிலேயே இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மாலை, லாட்னர் ட்ரங்க் வீதி மற்றும் ஹார்வெஸ்ட் டிரைவ் சந்திக்கும் இடத்தில் இடம்பெற்ற விபத்து 30வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோல, வியாழக்கிழமை கிளியர்ப்ரூக் பகுதியில் பிக்கப் டிரக் வாகனமொன்று மோதிய விபத்தில் 40 வயதான பெண் பாதசாரியொருவர் உயிரிழந்தார். புதன்கிழமைRead More →

Reading Time: < 1 minute ஸ்கார்பாரோவில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார், கைதுசெய்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி, பார்மசி அவென்யூ அருகே எல்லெஸ்மியர் வீதிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 20 மாத குழந்தை, தாய் மற்றும் பாட்டி ஆகியோர் மீது வாகனம் மோதியதில் மூவரும் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அக்காரில் பயணித்த 40 வயது மதிக்கதக்க ஒருவரையே தற்போது பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் மீது, உதவி செய்வதைத்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ- மிசிசாகாவில் இரண்டு வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மில்க்ரீக் ட்ரைவ் மற்றும் எரின் மில்ஸ் பார்க்வே பகுதியில், நேற்று (வியாழக்கிழமை) இரவு 9:30 மணிக்கு முன்னதாக இந்த விபத்து சம்பவித்துள்ளது. லொறி மற்றும் ட்ரக் வாகனங்களே இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற பின்னர், லொறி சாரதி சம்பவ இடத்திலேயே தரித்து நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து எவ்வாறுRead More →

Reading Time: < 1 minute வன்கூவர் பிரதான மற்றும் ஹாஸ்ரிங்ஸுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் வெஸ்ற் என்டில் உள்ள ரொப்சன் மற்றும் டென்மன் வீதிப் பகுதியில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minute டொரோண்டோவில் தமிழ் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 28 வயதான தஸ்மி ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக ரொரன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு மிட்லன்ட் அவென்யூ மற்றும் எக்லின்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் கடைசியாக இவர் காணப்பட்டுள்ளனர். 5 அடி உயரமும் 120 பவுண்ட் எடையும் கொண்ட அவரது தலைமுடியின் நிறம் கருப்பு என்று பிரவுன் நிற கண்கள் கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில்Read More →

Reading Time: < 1 minute கிரீன் போரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, ஒட்டாவா பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புளூம் ட்ரைவ் மற்றும் வூட்பரி கிரசன்ட் சந்திப்புக்கு அருகே நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 2:45 அளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோதும், அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் வயது வெளியிடப்படாத நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிரவிசாரணை நடத்திRead More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுக்களின் புதிய தலைவர்களை ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபேர்ட் அமைச்சரவை தேர்வு செய்துள்ளது. சுயாதீன பொலிஸ் மீளாய்வு இயக்குநரின் அலுவலகத்தை மூத்த வழக்கறிஞரான ஸ்டீபன் லீச், தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், ஈராக், ஜோர்ஜியா மற்றும் ரியூனிசியா போன்ற நாடுகளில் ஆளுகை கட்டிடம், நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் பணியாற்றியவர் ஆவார். பொலிஸாருக்கெதிரான பொது முறைப்பாடுகளைRead More →

Reading Time: < 1 minute தாயகத்திலும், மேற்குலக நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரொறன்ரோவில் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. இதில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் திருவுருப்படங்களுக்கு செங்காந்தள் மலர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இவ் அஞ்சலி நிகழ்வில் பெருமளவிலான மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சிறுவயது முதல் வசித்து வந்த பிரபல நடிகரும், மொடலுமான கோட்பிரி காவோ (Godfrey Gao) 35 வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். தைவானில் பிறந்த Godfrey Gao இளம் வயதிலேயே கனடாவின் வான்கூவருக்கு பெற்றோருடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார். கனடாவிலுள்ள கபிலனோ பல்கலைக்கழகத்தில் தனது மேற்கல்வியை நிறைவு செய்து கொண்ட Godfrey Gao பின்னர் மொடலிங் துறை மற்றும் சினிமா துறையில் நுழைந்து பிரபல நடிகராக மாறினார். இந்தநிலையில்Read More →

Reading Time: < 1 minute மாணவர்கள் மீது மனிதக் கழிவை வீசியதாக தெரிவிக்கப்படும் ஒருவரை ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் கடந்த வெள்ளி மற்றும் திங்கட் கிழமைகளில் நடைபெற்ற மூன்று தனித்தனியான சம்பவங்களில் திரவ மனிதக் கழிவை மாணவர்கள் மீது எறிந்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ரொறன்ரோவைச் சேர்ந்த சாமுவேல் ஓபோகு என்ற குறித்த சந்தேகநபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் குயின் ஸ்ட்ரீற் வெஸ்ற் பகுதியில் வைத்து கைதுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் மிசிசாகா பகுதியில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞன் மீது  பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து, படுகாயமடைந்த இளைஞனை பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவமனையில் அனுமதித்தனர். டன்ராஸ் வீதி மற்றும் ஹைன்ஸ் சாலைக்கு அருகிலுள்ள மிசிசாகா சைனீஸ் சென்ரர் பிளாசாவில் உள்ள வங்கியில் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டார். இதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பீல் பிராந்திய பொலிஸார் சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவை சேர்ந்த பெண்ணொருவரிடம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்த மீது 20 பக்கங்கள் கொண்ட முறைப்பாட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாரா ஸ்டெப்னீ லாண்ட்ரே என்ற குறித்த பெண், நித்யானந்தா ஆசிரமத்தில் நிர்வாகியாக செயற்பட்டதுடன், இவர் வெளிநாடுகளின் போதனைகளுக்கு செல்லும் நித்யானந்தாவின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டார். இதனால் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஆன்மிகத்தில் ஈடுபட்டார். இந்து மதத்தின் மீதான ஈர்ப்பால் 2015-ஆம் ஆண்டு பிடதி ஆசிரமத்திற்கு வந்தRead More →