Reading Time: < 1 minute

கிரீன் போரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, ஒட்டாவா பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புளூம் ட்ரைவ் மற்றும் வூட்பரி கிரசன்ட் சந்திப்புக்கு அருகே நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 2:45 அளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோதும், அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் வயது வெளியிடப்படாத நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்தோடு, இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், தம்மைத் தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களிடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.