Reading Time: < 1 minute

ஸ்கார்பாரோவில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார், கைதுசெய்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி, பார்மசி அவென்யூ அருகே எல்லெஸ்மியர் வீதிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 20 மாத குழந்தை, தாய் மற்றும் பாட்டி ஆகியோர் மீது வாகனம் மோதியதில் மூவரும் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அக்காரில் பயணித்த 40 வயது மதிக்கதக்க ஒருவரையே தற்போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர் மீது, உதவி செய்வதைத் தடுக்கத் தவறியது, மற்றும் உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதை நிறுத்தத் தவறிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், தகுதிகாண் உத்தரவுக்கு இணங்கத் தவறியது மற்றும் இடைநீக்கத்தின் போது வாகனம் ஓட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன,

எனினும், வாகனத்தை ஓட்டியவர் தப்பியொடிவிட்டார். இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு, தப்பியோடிய ஓட்டுநர், 34 வயதான டெரெக் டிசோசா என அடையாளம் வெளியிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.