Reading Time: < 1 minute

டொரோண்டோவில் தமிழ் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

28 வயதான தஸ்மி ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக ரொரன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு மிட்லன்ட் அவென்யூ மற்றும் எக்லின்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் கடைசியாக இவர் காணப்பட்டுள்ளனர்.

5 அடி உயரமும் 120 பவுண்ட் எடையும் கொண்ட அவரது தலைமுடியின் நிறம் கருப்பு என்று பிரவுன் நிற கண்கள் கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

தகவல் தெரிந்தவர்கள் 416-808-4100 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.