Reading Time: < 1 minute கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு அதிகரித்துள்ளது. Rentals.ca மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகை 1915 டொலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 11.6 வீதமாக வாடகைத் தொகை அதிகரித்துள்ளது. இரண்டுRead More →

Reading Time: < 1 minute கனடிய இரத்த வங்கி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. குறிப்பாக மாற்றுப் பாலின சமூகத்தினரிடம் இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் இரத்த தானம் செய்வது தொடர்பில் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட சட்டங்களுக்காக இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. ஓர் பாலின ஆண்கள் இரத்த தானம் செய்வதற்கு நீண்ட காலமாக கனடாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இரத்த தானம் செய்யக் கூடிய சகல தகுதிகள் இருந்தும் இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் நீதிபதி ஒருவருக்கு எதிராக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. விவசாய சட்டம் தொடர்பிலான நீதிபதியின் தீர்ப்பிற்கு எதிராக இவ்வாறு ஒன்றாரியோ மாகாணம் மேன்முறையீடு செய்துள்ளது. விவசாய சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணானது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி மார்கஸ் கொஹென வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக இவ்வாறு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி தன்னுடைய தீர்ப்பு மூலம் சில தவறுகளை இழைத்துள்ளதாக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கான முதல் அமைதி மாநாட்டில் கனடா இருக்கும் என தெரிவித்துள்ளார். முதல் உலக அமைதி உச்சி மாநாடு சுவிட்சார்லாந்தில் ஜூன் மாதம் 15 -16ஆம் திகதிகளில் முதல் உலக அமைதி உச்சி மாநாடு நடைபெற உள்ளது. சுவிட்சர்லாந்தின் பல ஆண்டுகளில் மிகவும் லட்சிய முயற்சிஇதில் உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்த உச்சிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக 4 வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையால் இந்தியா கனடா உறவும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டையும் இந்தியா மொத்தமாக நிராகரித்தது. இதற்கிடையே ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய மூன்று பேரை கனடா போலீசார்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் தாங்கள் பாதுகாப்பற்ற நிலயை உணர்வதாக யூத மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பிரதான பல்கலைக்கழகங்களில் கற்று வரும் யூத மாணவர்கள் தங்களது அடையாளத்தை மறைத்து வாழ வேண்டியேற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். யூத மாணவர்கள் அணியும் தலையங்கியை (kippot ) தற்பொழுது அணிவதில்லை எனவும் அதற்கு பதிலாக பேஸ்போல் தொப்பி அணிவதாகவும் யூத மாணவர் அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார். யூத மாணவர்கள் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் துன்புறுத்தல்களை எதிர்நோக்கும் பின்னணி உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மார்பகப் புற்று நோய் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் அனைத்து மாகாணங்களும் பிராந்தியங்களும் மார்கப் புற்று நோய் குறித்த பரிசோதனைகளை 40 வயதிலிருந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனடிய புற்று நோய் அமைப்பு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. சில மாகாணங்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடமிருந்து மமாகிராம்ஸ் பரிசோதனை நடத்தப்படுகின்றன. தற்பொழுது அநேகமான பகுதியில் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் மார்கப் புற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. நாடு முழுவதிலும்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவின் தொண்டு நிறுவனமொன்றில் 700000 டொலர் மோசடி செய்ததாக நபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போலியான பற்றுச் சீட்டுக்கள் மற்றும் விலைப்பட்டியல்களை பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. போலி ஆவணங்களை தயாரித்து போலி வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் குறித்த தொண்டு நிறுவனத்தின் பணத்தைப்Read More →

Reading Time: < 1 minute கனடா, ஒரு காலகட்டத்தில், 200,000 அகதிகளை வரவேற்றுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நேற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சம்பவம் தொடர்பான நிகழ்வொன்று கனடாவில் நடைபெற்றது. 1975ஆம் ஆண்டு, வியட்நாம் போர் முடிவடை ந்ததைத் தொடர்ந்து, துன்புறுத்தல் மற்றும் மோசமான வாழ்க்கைச் சூழலுக்குத் தப்பி ஏராளமானோர் வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பல நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள். 1978ஆம் ஆண்டு, அப்படி Hai Hong என்னும் சரக்குக்கப்பலில் கடலில் சிக்கித்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரும் நிதி நெருக்கடி நிலைமையை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒப்பீட்டளவில் வீட்டு உரிமையாளர்களை விடவும் வாடகைக் குடியிருப்பாளர்கள் இந்த நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டு உரிமையாளர்கள் குத்தகைக் கடன் தொகை அதிகரிப்பு காரணமாக எதிர்நோக்கும் நெருக்கடிகளை விடவும் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குத்தகை கடன் பெற்றுக்கொண்டவர்களை விடவும் ஏனைய கடன் பெற்றுக்கொண்டவர்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தொடர்ச்சியாக வாடகைத்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பெண் ஒருவர் தனது கோழி முட்டையின் மூலம் பிரபல்யமாகியுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தின் மாட்டாவா பகுதியில் வசித்து வரும் மெலின்டா கிரியோனின் என்ற பெண் வளர்த்த கோழிகளில் ஒன்று பெரிய முட்டை ஒன்றை இட்டுள்ளது. மெலின்டாவின் கோழிப் பண்ணையில் சுமார் 60 கோழிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றன. வழமையான முட்டையின் அளவினை விடவும் மூன்று மடங்கு பெரிய முட்டையொன்று இடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சாதாரண முட்டை ஒன்றின் எடை 56 கிராம்கள் என்றRead More →

Reading Time: < 1 minute எயார் கனடா விமான சேவை நிறுவனம் தொடர்பில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வட அமெரிக்காவில் இயங்கி வரும் விமான சேவை நிறுவனங்களில் மிகவும் மோசமான விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக எயார் கனடா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் திருப்தி அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள தர வரிசையில் எயார் கனடா விமான சேவை நிறுவனம் பின்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக வகுப்பு முதனிலை பெருளாதார வகுப்பு சேவைகளின் தரம் குறித்து வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.Read More →