Reading Time: < 1 minute கனடாவின் மிசிசாகா பகுதியில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞன் மீது  பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து, படுகாயமடைந்த இளைஞனை பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவமனையில் அனுமதித்தனர். டன்ராஸ் வீதி மற்றும் ஹைன்ஸ் சாலைக்கு அருகிலுள்ள மிசிசாகா சைனீஸ் சென்ரர் பிளாசாவில் உள்ள வங்கியில் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டார். இதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பீல் பிராந்திய பொலிஸார் சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவை சேர்ந்த பெண்ணொருவரிடம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்த மீது 20 பக்கங்கள் கொண்ட முறைப்பாட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாரா ஸ்டெப்னீ லாண்ட்ரே என்ற குறித்த பெண், நித்யானந்தா ஆசிரமத்தில் நிர்வாகியாக செயற்பட்டதுடன், இவர் வெளிநாடுகளின் போதனைகளுக்கு செல்லும் நித்யானந்தாவின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டார். இதனால் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஆன்மிகத்தில் ஈடுபட்டார். இந்து மதத்தின் மீதான ஈர்ப்பால் 2015-ஆம் ஆண்டு பிடதி ஆசிரமத்திற்கு வந்தRead More →

Reading Time: < 1 minute டொரோண்டோவில் தமது தொடரூந்து நிலையங்களில், டிக்கட்டுகள், டோக்கன்கள், மாதாந்த அட்டைகள் போன்றவற்றின் விற்பனைகள் அனைத்தும் இந்த மாதத்துடன் நிறுத்தப்படுமென, TTC அறிவித்துள்ளது. எனினும், TTC அல்லாத விற்பனை நிலையங்களில், அவை தொடர்ந்தும் விற்கப்படும். முழுமையாக PRESTO அட்டைகளின் பாவனையை அமுல்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், டிக்கட்டுகள், டோக்கன்கள் போன்றவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இறுதி நாள் எதுவும் இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் TTC தெரிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute கல்கரியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய, சந்தேக நபர் தொடர்பான வரைபடமொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அத்தோடு, இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். 20 வயதுக்கு இடைப்பட்டவராக கருதப்படும் இந்த சந்தேகநபர், கருப்பு அடத்தியான முடி, சுமார் ஐந்து அடி ஒன்பது அங்குலம் உயரம் கொண்டவரெனவும் எயார் ட்ரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். எயார் ட்ரை பொலிஸாரின் பொது விசாரணை சேவைகள் மற்றும் குற்றக்Read More →

Reading Time: < 1 minute வன்கூவரின் சர்ரே பகுதியில் உள்ள பெரிய வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக சர்ரே தீயணைப்புச் சேவை தெரிவித்துள்ளது. நேற்றுத் திங்கட்கிழமை 9900 தொகுதி- 135 ஏ வீதிப் பகுதிக்கு காலை 10:35 மணிக்கு தீயணைப்பு குழுவினர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்ரே தீயணைப்பு சேவையின் உதவித் தலைவர் டேவிட் பேர்ன்ஸ் கூறுகையில், “நாம் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, கடுமையான தீப்பரவல் இருந்தது. பின்னர்Read More →

Reading Time: < 1 minute நம் நாட்டில் சாதாரண வீடு ஒன்றின் பெறுமதியில் கனடாவில் குட்டித் தீவு ஒன்றையே கொள்வனவு செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சிறிய அறைகளைக் கொண்ட அடுக்குமாடி வீடுகளுக்கான விலைகளே பல மில்லியன் டொலர் கணக்கில் உள்ளதுடன்  வீட்டு வாடகையும் மிக அதிகமாகும். ஆனால் ஆடம்பர வீடு ஒன்றை கொள்வனவு செய்யும், விலைக்கு, கனடாவில் ஒரு தீவையே கொள்வனவு செய்துவிடலாம். நோவா ஸ்கோஷியா (Nova Scotia) என்னும் மாநிலத்திலுள்ள தீவுகளின்Read More →

Reading Time: < 1 minute வடக்கு அல்பேர்ட்டாவில் இடம்பெற்ற கோர விபத்தையடுத்து, வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், வீதியில் வாகனத்தை செலுத்துவோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை 2 இற்கு அருகே உள்ள ரேஞ் வீதி – 9 மைல் க்ரீக் பாலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12:30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர். முடிந்தளவு இந்த வீதியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஸ்லேவ் லேக் பொலிஸார்,Read More →

Reading Time: < 1 minute வன்கூவரில் மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார், தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிரான்வில் வீதிக்கு அருகிலுள்ள நெல்சன் வீதியில் கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்தபோதே, இந்த விபத்து சம்பவித்துள்ளது. வேறு எந்த வாகனங்களும் இந்த விபத்தில், தொடர்பு படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் அதிவேகமாகவே பயணித்ததே, இவ்விபத்துக்கு காரணம் என உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து படுகாயங்களுடன் குறித்த நபர் மீட்கப்பட்ட போதும், அவர்Read More →

Reading Time: < 1 minute சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் அறிமுகப்படுத்தும் 5-ஜி தொழில்நுட்பம் குறித்து கனடாவை அவதானமாக இருக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. குறித்த தொழில்நுட்பம் கனடாவின் புலனாய்வுத் துறைசார் தரவுகளை சேகரிக்கும் வழிவகைகளை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் அமெரிக்காவின் மூத்த சட்டவாளர்கள் நேற்று (சனிக்கிழமை) சர்வதேச பாதுகாப்பு சபையில் எச்சரித்தனர். லிபரல் அரசாங்கம்,  வரவிருக்கும் 5-ஜி வலையமைப்பை உருவாக்க உதவுவதில் இருந்து ஹவாய்  நிறுவனத்தை தடைRead More →

Reading Time: < 1 minute அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திடமிருந்து லிபரல் அரசாங்கம் புதிய அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இதன்படி, நேட்டோ மாநாட்டில் உறுதிப்படுத்தப்பட்டவாறு பாதுகாப்பு செலவீனங்களை கனடா அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ரொபேர்ட் ஓ பிரெய்ன், “கனடா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதம் அளவில் இராணுவ வரவு செலவுத் திட்டங்களை ஒதுக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார் ஹொலிஃபக்ஸ் சர்வதேச பாதுகாப்புRead More →

Reading Time: < 1 minute ஸ்கார்பரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஸ்கார்பரோவில் உள்ள மதுக்கடை ஒன்றுக்கு வெளியே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. லோரன்ஸ் அவென்யூ மற்றும் ஸ்கார்பரோ கோல்ஃப் கிளப் சாலை பகுதியில் உள்ள ஒரு மதுக்கடைக்கு வெளியே சந்தேகநபர்கள் ஒருவரை இலக்குவைத்து இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பானRead More →

Reading Time: < 1 minute காணாமல் போயுள்ள தாயையும் மகனையும் கண்டுபிடிக்க உதவுமாறு, வின்னிபெக் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 34 வயதான மேகன் மில்ஸ் என்ற தாயும், தனது ஆறு மாத மகனுடன் காணமல்போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த தாய் இறுதியாக, கடந்த புதன்கிழமை மாலை வின்னிபெக்கின் வெஸ்ட் எண்ட் பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், ஐந்து அடி ஆறு அங்குலம், சராசரியான உடல் தோற்றம். இளஞ்சிவப்பு, அலை அலையான கூந்தல் மற்றும் சிலRead More →