Reading Time: < 1 minute மனிடோபாவில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஊரடங்கு, கட்டம் கட்டமாக தளர்த்தப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 4ஆம் திகதி இதற்கான தளர்வுகள் ஆரம்பமாகும் என மனிடோபா முதல்வர் பிரையன் பாலிஸ்டர் அறிவித்துள்ளார். இந்த முடக்கத்தால் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதனால், இந்த கட்டுப்பாடுகளை எளிதாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் போது,Read More →

Reading Time: < 1 minute இரண்டாம் நிலை மாணவர்களுக்கு மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 9 பில்லியன் டொலர்கள் உதவி தொகைக்கு பொதுச் சபை, அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 22ஆம் திகதி ஆரம்பத்தில் முன்மொழியப் பட்டபடி, தகுதி வாய்ந்த பிந்தைய இடைநிலைக் கல்வி மாணவர்கள் மற்றும் சமீபத்திய பட்டதாரிகள் தங்களது கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை தற்போதைய கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்படுவதைக் கண்டவர்களுக்கு இந்த உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் முதல் ஒகஸ்ட்Read More →

Reading Time: < 1 minute கொவிட்-19 தொற்றுடையவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான இலக்கமுறைத் (டிஜிட்டல்) தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளுக்கான திட்டத்தின் போது கனேடியர்கள் தனியுரிமைக்கு உயர்ந்த மதிப்பு கொடுக்க வேண்டும் என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த முறைமையினை மாகாண மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த நடவடிக்கைகளின் போது, கனேடியர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2,996ஆக உயர்ந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) வெளியான நிலவரப்படி, ஒரேநாளில் 137பேர் உயிரிழந்ததோடு, 1,571பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 51,597பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28,274பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 20,327பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், அதிக பாதிக்கப்பட்ட மாகாணமாக கியூபெக் மாகாணம் பதிவாகியுள்ளது. இதன்படி, கியூபெக் மாகாணத்தில் தற்போது வரை 25,757பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,682பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 5,841பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கையானது, கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80 சதவீதமாகும்.Read More →

Reading Time: < 1 minute கியூபெக்கில் மூன்று முக்கிய துறைகளில் உள்ள வணிகங்கள் மீண்டும் திறக்கப்படுமென, கியூபெக் மாகாண முதல்வர் பிராங்கோயிஸ் லெகால்ட் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தற்போதுள்ள நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கூறுகையில், ‘வணிக வளாகங்களில் இல்லாத சில்லறை கடைகள் (அல்லது வெளிப்புற நுழைவாயில்கள் கொண்ட வணிக வளாகங்களில் உள்ளவை)Read More →

Reading Time: < 1 minute அவசர மற்றும் முதன்மை கவனிப்பு மற்றும் விரைவாக அணுகப்படும் மனநல சிகிச்சைகளுக்காக, விக்டோரியாவில் புதிய அவசர மற்றும் முதன்மை பராமரிப்பு மையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பேவில் திறந்துவைக்கப்பட்டுள்ள குறித்த முதன்மைப் பராமரிப்பு மையம் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. மே மாதத்திற்கு, மருந்தகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஜூன் 1ஆம் திகதிக்குப் பிறகு, இந்த மையம் காலை 8 மணிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2,859ஆக அதிகரித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியான நிலவரப்படி, ஒரேநாளில் 152பேர் உயிரிழந்ததோடு, 1,526பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 50,026பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27,977பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 19,190பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute எல்லா கனேடியர்களுக்கும் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலமாகும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரைடோ காட்டேஜின் முன்புறம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த தொற்றுநோய்களின் போது கற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாக செயற்படுத்தப்படும் சில வேறுபாடுகள் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். வாழ்க்கை சரியாக இருந்ததைப் போலவே திரும்ப வேண்டுமென்றால், அதுRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மூன்று படிநிலைகளாக தளர்த்தப்படும் என ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் மாகாணத்தை மீண்டும் திறக்கும் திட்டம் குறித்து, நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றினார். இதன்போது, ஒன்ராறியோ மாகாணம் ஒன்ராறியோவையும் பொருளாதாரத்தையும் மீண்டும் திறக்க மூன்று கட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். ஒவ்வொரு கட்டமும் இரண்டு முதல் நான்கு வாரங்கள் நீடிக்கும் மற்றும் கொவிட்-19 தொற்றுகளில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால்Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்களின் போது மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், விவாதிப்பதற்கும், நிறைவேற்றுவதற்கும் பொதுச்சபை மீண்டும் கூடவுள்ளது. கொவிட்-19 தொடர்பான சிறப்பு அனைத்து கட்சி குழுவின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டிற்கும் விகிதாசாரமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் புதன்கிழமை வெஸ்ட் பிளாக்கில் நேரில் சந்திக்க உள்ளனர். மத்திய அரசின் வாக்குறுதியளிக்கப்பட்ட இந்த சட்டத்தை பின்னர் நிறைவேற்ற அவர்கள் சபையின் முறையான கூட்டத்திற்குRead More →

Reading Time: < 1 minute எட்மண்டனுக்கு மேற்கே உள்ள புத்தம் புதிய வீடு தீக்கிரையான சம்பவம் குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு 8.30 மணியளவில் ஸ்டோனி சமவெளிக்கு வடக்கே ரேஞ்ச் வீதி 580 மற்றும் டவுன்ஷிப் வீதி 540இற்க்கு அருகில் கிராமப்புற துணைப்பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இந்த தீவிபத்தின் போது எவ்வித உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயங்களோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய வீட்டின் கட்டுமானம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2,707ஆக அதிகரித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) வெளியான நிலவரப்படி, ஒரேநாளில் 147பேர் உயிரிழந்ததோடு, 1,605பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 48,500பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27,525பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 18,268பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் முடங்கி போயுள்ள நியூ பிரன்சுவிக்கில், மீண்டும் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாரம் சில கட்டுப்பாடுகள் தளத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதற்கான உத்தியோகபூர்வ திகதி அறிவிக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. குழிப்பந்தாட்ட மைதானங்கள் மீண்டும் வணிகத்தில் ஈடுபட உள்ளன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வளாக வசதிகளை திறக்கலாம்.Read More →