Reading Time: < 1 minute கியூபெக்கில் உள்ளவர்கள் புதிய சட்டத்தின் கீழ் கஞ்சாவை சட்டப்பூர்வமாக வாங்க 21 வயது வரை காத்திருக்க வேண்டும் என கூட்டணி அவெனீர் கியூபெக் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டமானது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது. இதுவே நாட்டில் மிக உயர்ந்த வயது எல்லை என கூறப்படுகின்றது. கனடாவின் பிற இடங்களில், ஆல்பர்ட்டாவைத் தவிர, 19 வயதிற்கு அதிகமானவர்களே கஞ்சா வாங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறனர்.Read More →

Reading Time: < 1 minute வடமேற்கு ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், ஐந்துபேர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிளாக் கிரீக் ட்ரைவின் கிழக்கே ட்ரெத்வியூ ட்ரைவ் அருகே கிளியர்வியூ ஹைட்ஸ் பகுதியில் உள்ள தாழ்வான அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு 7:30  அளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதில், இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இரண்டு பெண்களும் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என்றும்Read More →

Reading Time: < 1 minute வின்னிபெக்கின் வடக்கு பகுதியில் கொடுரத் தாக்குதலுக்கு உள்ளான மூன்று வயது குழந்தை, உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சால்டர் மற்றும் சார்ள்ஸ் வீதிகளுக்கு இடையில் உள்ள பிரிட்சார்ட் அவென்யூ பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று (புதன்கிழமை) அதிகாலை 2:30 மணியளவில் இந்த குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டது. இதன்பிறகு உயிராபத்தான நிலையில், அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தற்போது குழந்தை குடும்பத்தினரின் ஆதரவில் இருப்பதாகRead More →

Reading Time: < 1 minute ஹலோவீன் விருந்துபசார நிகழ்வு ஒன்றில் வைத்து 14 வயதுச் சிறுமி ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் 16 மற்றும் 18 வயது பெண்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது இரண்டாம் தர கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்துள்ளனர். வினிப்பெக்கின் Kinver Avenue பகுதியில், கடந்த 26ஆம் திகதி இரவு 10:45 அளவில் இந்தக் கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துச் சம்பவம்Read More →

Reading Time: < 1 minute காவல்துறையினரின் சுற்றுக்காவல் வாகனம் ஒன்றும் மேலும் இருண்டு வாகனங்களும் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மிட்லான்டில், நெடுஞ்சாலை 93 மற்றும் Yonge Street பகுதியில் திங்கட்கிழமை பிற்பல் ஒரு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தின் போது காவல்துறையினரின் வாகனம் ஒன்று கவிழ்ந்து, அதன் முன் கண்ணாடி நெருங்கிய நிலையில், அதற்குள் சிக்குண்ட அதிகாரிகள் வெளியேறுவதற்கு முயற்சித்த வேளையில், அங்கேRead More →

Reading Time: < 1 minute கடந்த பல வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வந்த இந்தியர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் கனடாவிற்கு குடிபெயர்ந்த நிலையில் வீதி விபத்தொன்றில் உயிரிழந்தார். நடைபயிற்சிக்காக கனடாவின் மிஸ்ஸிசாவுகா பகுதிக்கு சென்ற ஜஸ்ஜித் சிங் ஜாஜ் (வயது 73) என்பவரே விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உயிரிழப்பு டுபாய் வாழ் இந்தியர்கள் உட்பட ஏராளமானோரின் துயரில் ஆழ்த்தியுள்ளதாக டுபாய் இந்திய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆறு வழிச் சாலையை கடக்கும் போதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மாணவிகள் சக மாணவர்களின் பாலியல் தொல்லைகளினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொண்டு நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 15 சதவிகித கனேடிய மாணவிகள், சக மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த செய்தி பெற்றோர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடா முழுவதிலும், 14 முதல் 21 வயதுக்குட்பட்ட, 4000 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: 2 minutes கனடாவில் நான்கு பேர் கொல்லப்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் பரபரப்பான பின்னணி தகவல்கள் வௌியாகியுள்ளன. இதுதொடர்பாக இடம்பெற்று வழக்கொன்றில் சாட்சியமளித்துள்ள பிரதிவாதிகள் இருவர், தங்களின் நோக்கம் ஒருவரைக் கொல்வதுதான் என்றும் காட்டிக்கொடுத்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மூவரை கொலை செய்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். Yu Chieh Liao (27) என்ற இளம்பெண் Hanock Afowerk (26) என்ற இளைஞரை சம்பவ தினத்திற்கு முன்தினமான 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து வலியுறுத்தி வரும் பெண்ணியவாதியான மேகன் மர்ஃபி (Meghan Murphy) மூன்றாம் பாலினத்தவர் அல்லது திருநங்கைகள் குறித்து வௌியிட்டுள்ள கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, திருநங்கைகளின் உரிமைகள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கொண்ட குறித்த பெண்ணியவாதி வழங்கிய நிகழ்வை ரத்து செய்ய மறுத்ததற்காக கனேடிய நூலகம் ஒன்றின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. எழுத்தாளரான மேகன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நூலக மண்டபத்தினுள் உரையாற்றிக் கொண்டிருந்த போதுRead More →

Reading Time: < 1 minute ரொரன்ரோவின் வடக்கே வோன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் அமெரிக்கர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கத்தியால் பலமுறை குத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். டெக்ஸாசைச் சேர்ந்த 33 வயதான ஆண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:30 அளவில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்ததை அடுத்து குறித்த இந்தச் சம்பவம் தமது கவனத்திற்கு வந்ததாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minute பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி விட்டு, அவர்களிடம் இருந்து பணம், கடனட்டடை உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிவந்த ஒரு கும்பல் தொடர்பில், கனடா தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில் டூர்ஹம் பிராந்தியம் மற்றும் கல்கரி போன்ற இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை தொடர்பிலான முறைப்பாடுகளை அடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஆறாம் திகதியில் இருந்து இது குறித்து விசாரணைகள்Read More →

Reading Time: < 1 minute ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது..! துளையிடும் பணி நிறுத்தப்பட்டது??? குழந்தை சுர்ஜித் உயிரிழந்ததாக அறிவிப்பு! ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு . குழந்தை சுஜித் வில்சன் உடல் சிதைந்து காணப்படுவதாக பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்! ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததாக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆழ்துளை கிணற்றுக்குள்Read More →

Reading Time: < 1 minute கனேடியர்களை இலக்குவைத்து தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் புதிய பண மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னரும் இவ்வாறு கனேடிய வருமான வரித்துறைக்கான வரிகளை வசூல் செய்வதாக தெரிவித்து கனேடியர்களிடம் இருந்து மில்லியன் கணக்கான டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக காவல்துறையினர் போல் நடித்து மோசடி முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் உள்ளூர் காவல்துறை போல தம்மைக் கூறிக்கொள்ளும் நபர்கள் இவ்வாறு தொலைபேசி ஊடாகRead More →

Reading Time: < 1 minute ரொரன்ரோ மிட்டவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து பாரதூரமான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Yonge Streetற்கு கிழக்கே, Davisville Avenueவில் அமைந்துள்ள குறித்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் 12:30 அளவில் அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைத்ததை அடுத்து அவர்கள் அங்கு விரைந்ததுள்ளனர். தாங்கள் சம்பவRead More →