Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 64 ஆயிரத்து196 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு கொரோனா தொற்றினால் இதுவரை ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 960 ஆக பதிவாகியுள்ளது என சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,724 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 45 மரணங்களும் பதிவாகியுள்ளன. அங்கு அதிகளவாக ஒன்ராறியோவில் 2 இலட்சத்து 99 ஆயிரத்து 754 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடுRead More →

Reading Time: < 1 minute ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்மூலம், அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்றுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. அரை மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் குறித்த புதிய தடுப்பூசி நோய்ப்பரவலை எதிர்த்துப் போராடஉதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 66 விகித செயற்திறன் கொண்ட ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசியைRead More →

Reading Time: < 1 minute கோவிட்19 தடுப்பூசி விநியோகங்களை முன்னைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் 643,000 பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை கனடா பெற்றுள்ளது. அத்துடன், மேலதிகமாக இலட்சக்கணக்கான தடுப்பூசிகளை வழங்க நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ள நிலையிலேயே தடுப்பூசி பணிகள் இரட்டிப்பாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தடுப்பூசி விநியோகங்களில் ஏற்பட்ட தாமதத்தால் கனடாவில் தடுப்பூசி போடும் பணிகளில் மந்த நிலை காணப்பட்டது. இந்நிலையில்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் கொவிட்-19 முடக்கநிலைக்குள் நுழைவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தண்டர் பே மாவட்டம் மற்றும் சிம்கோ-முஸ்கோகா மாவட்ட சுகாதார அலகுகள் சாம்பல் நிலை முடக்கநிலைக்குள் நகரும். கொவிட்-19 இன் சமீபத்திய பரவல்கள் மற்றும் சமூக பரவலைக் கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கை மார்ச் 1ஆம் திகதி அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற பிராந்தியங்களும் அவற்றின் வண்ண மண்டலங்களுக்கு வரும்போது ஒரு மாற்றத்தைக் காண்கின்றன என்றும் அரசாங்கம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 252பேர் பாதிக்கப்பட்டதோடு 50பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 61ஆயிரத்து 472பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 915பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 518பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 567பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகRead More →

Reading Time: < 1 minute கியூபெக்கில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமை அடுத்த வாரம் மொன்றியல் பிராந்தியத்தில் ஆரம்பமாகவுள்ளது. வியாழக்கிழமை, கியூபெக் 858 புதிய தொற்றுநோய்களையும், கொவிட் -19 தொடர்பான 16 இறப்புகளையும் பதிவுசெய்துள்ளது. அந்த மாகாணத்தில் 633பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றாரியோவில் 1,138 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. தடுப்பூசி முன்பதிவு முறையைத் தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ளன.பிரிட்டிஷ் கொலம்பியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிளினிக்குகள் பற்றி திங்களன்றுRead More →

Reading Time: < 1 minute ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி மற்றும் இந்தியாவின் சீரம் நிறுவனம் ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஹெல்த் கனடா நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே பல நாடுகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கனடாவிலும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தடவைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளமை மிகவும்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில மூத்த குடிமக்களுக்கு முன்னால், அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. பல அத்தியாவசியத் தொழிலாளர்கள் கோட்பாட்டு ரீதியாக ஒரு கொவிட்-19 நோய்த்தொற்றைக் கையாளச் சிறந்ததவர்களாக இருக்கக்கூடும். முன்பே வெளியிடப்பட்ட எஸ்ஏப்யுவின் ஆய்வில், மக்கள் தொகையில் வயதான உறுப்பினர்களுக்கு முன் தடுப்பூசிகளைக் கொடுப்பது 200,000க்கும் அதிகமான தொற்றுநோய்களைத் தடுக்கும். இது மாகாணத்தை கணக்கான சுகாதாரச் செலவுகள் 500 மில்லியன் டொலருக்கும் அதிகமாக சேமிக்கிறது என்றுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 094பேர் பாதிக்கப்பட்டதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 58ஆயிரத்து 220பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 865பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 338பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 588பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகRead More →

Reading Time: < 1 minute டொரோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பல சர்வதேச பயணிகள் மூன்று நாள் விடுதியில் தனிமைப்படுத்தக் கோரும் புதிய விதிக்கு இணங்க மறுத்துவருவதாக இன்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வாரம் நடைமுறைக்கு வந்த COVID தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற மறுத்தவர்களுக்கு Ontarioவின் விதிமுறைகளின் கீழ் 880 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.Read More →

Reading Time: < 1 minute கனடா பாதுகாப்புப் படை தலைமைப் பதவியில் இருந்து அட்மிரல் ஆர்ட் மெக்டொனால்ட் தானாகவே முன்வந்து விலகியுள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படை தலைமைப் பதவியில் இருந்த அட்மிரல் ஆர்ட் மெக்டொனால்டுக்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணை ஒன்று முன்னெடுக்கபடும் நிலையிலேயே அந்தப் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து கனேடிய படைகளின் தேசிய புலனாய்வு சேவை விசாரணை செய்து வருவதாக சஜ்ஜன்Read More →

Reading Time: < 1 minute நகர தலைமையிலான மற்றும் நகர அனுமதிக்கப்பட்ட அனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்வதாக ரொறொன்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா மற்றும் முக்கிய நிகழ்வு அமைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நகரங்கள் நிர்வகிக்கும் வெளிப்புற தளங்களில் அல்லது வீதிகள், பூங்காக்கள் மற்றும் குடிமைச் சதுக்கங்கள் போன்ற பிற பொது இடங்களில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்து இரண்டாயிரத்து 926பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 55ஆயிரத்து 126பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 21ஆயிரத்து 807பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால்,Read More →

Reading Time: < 1 minute நமக்கு இன்னும் சில தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தேவை என மருத்துவர் தெரசா டாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘செப்டம்பர் மாதத்திற்குள் வலுவான கட்டுப்பாடுகளின் தேவையை குறைக்க முடியும். தடுப்பூசிகள் ஒரு முறை நாம் அறிந்த வாழ்க்கைக்கு திரும்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனென்றால், அதிகமான மக்கள் தடுப்பூசி போடும்போது, மீண்டும் எழுச்சி பெறுவது குறைவு. இப்போது மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் தடுப்பூசிகளிலிருந்து சில பெரிய தாக்கங்களைRead More →