Reading Time: < 1 minute கொலை குற்றச்சாட்டு தொடர்பாக பெண் ஒருவரை, தீவிரமாக தேடி வருவதாக வின்னிபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜோன் பியூஸ்னலின் கொலை தொடர்பாக, ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை 24 வயதுடைய டெய்லர் லாபியர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இக் கொலை சம்பவத்துடன் தொடர்படைய 31 வயதான ஷைலா லீ என்பவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 64 வயதான ஜோன் பியூஸ்னல் என்பவர், டவுன்டவுனுக்கு வடக்கே இசபெல் மற்றும் எலன் வீதிகளுக்குRead More →

Reading Time: < 1 minute எட்மண்டன் பகுதியில் 73 வயதான முதியவரை வாகனத்தில் மோதிவிட்டு சென்ற சாரதியை கைது செய்ய பொலிஸார், தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த குறித்த முதியவர், தற்போது ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது குறித்த வாகன சாரதியை அடையாளங் கண்டு கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5:50 மணியளவில், 102ஆவது வீதியில் உள்ள ஜாஸ்பர்Read More →

Reading Time: < 1 minute சட்டவிரோத குழுக்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிப் பயன்பாடு என்பவற்றைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்காக 54 மில்லியன் டொலர்களை எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒன்ராறியோ மாகாணத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பினை மத்திய குற்றத் தடுப்பு அமைச்சர் பில் பிளையர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒன்றாரியோவில் மேற்கொண்டு வன்முறைகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்குடன் இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளது. துரதிஸ்டவசமாக அண்மையRead More →

Reading Time: < 1 minute டவுன்ரவுன் பகுதியில் அமைந்துள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட அமோனியா கசிவு காரணமாக இருவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர். இலக்கம் 80, சென் ஜோர்ஜ் வீதியில் அமைந்துள்ள லாஸ் மில்லர் இரசாயன ஆய்வுகூடத்திலேயே, இந்த சம்பவம் சம்பவித்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த அந்தக் கட்டிடம் முற்றாக மூடப்பட்டது எனவும், எனினும் அங்குள்ள ஒரு அறையில் மட்டுமே அதன் பாதிப்பு இருந்ததாகவும் ரொறன்ரோ தீயணைப்பு துறை அதிகாரிகள் தகவல்Read More →

Reading Time: < 1 minute சென். கிளாயர் தெற்கு பகுதியில், சுமார் 800 ரொறன்ரோ ஹைட்ரோ வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இந்த தடை இன்று நள்ளிரவு வரையில் நீடிக்கக்கூடும் என்றும் ரொறன்ரோ ஹைட்ரோ நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சென். கிளாயர் தென் மேற்கிலிருந்து பிளட் வீதி வரையிலுமான பகுதிகள், மற்றும் டப்பரின் வீதி கிழக்கிலிருந்து பாத்ரூஸ்ட் வரையிலுமான பகுதிகள் இந்த மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. நிலக்கீழ் விநியோக வழியில் உள்ள சாதனம்Read More →

Reading Time: < 1 minute அஜாக்ஸ் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக, டூர்ஹம் பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பெய்லீ வீதி தெற்கில் அமைந்துள்ள ரம் டயரீஸ் எனப்படும் உணவகத்திற்கு முன்னாள் மோதலில் ஈடுபட்ட ஆண்களையும் பெண்களையும் கொண்ட குழுக்களையே பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது, துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அந்தப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக கிடைத்தRead More →

Reading Time: < 1 minute பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த ஆணின் உடல்நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த கத்திக் குத்து தாக்குதலை நடத்திய சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் குறித்த விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பீல் பிராந்திய பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். பிரதான வீதி வடக்கு மற்றும் தேவாலயRead More →

Reading Time: < 1 minute பாடசாலை வகுப்பறைகளில், கைபேசி பாவனையை கட்டுப்படுத்தும் நடைமுறைகள், வரும் நவம்பர் முதல் ஆரம்பிக்கப்படுமென, ஒண்டாரியோ மாகாண அரசு அறிவித்துள்ளது. எனினும், கல்வி, மருத்துவம் போன்ற அவசியமான தேவைகளுக்காக, கைப்பேசிகளை பயன்படுத்துவது அனுமதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல்களில், 97 வீதமான பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கைபேசி பாவனை வகுப்பறைகளில் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென கூறியிருந்தனர். மாணவர்கள் வகுப்பில் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, சமூக வலைத்தளங்களில் அல்ல என,Read More →

Reading Time: < 1 minute பிரான்ஸ் தம்பதியினருக்கு இழப்பீடு வழங்குமாறு ஏர் கனடா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரான்ஸ் தம்பதியினர் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின் கீழ் ஏர் கனடா நிறுவனம் எதிராக 22 குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். அத்துடன், பிரெஞ்சு மொழி பேசுபவர்களின் மொழி உரிமைகளை ஏர் கனடா நிறுவனம் மீறியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி Martine St-Louis, முறைப்பாடு செய்த இருவரிடமும் மன்னிப்புக் கடிதம்Read More →

Reading Time: < 1 minute நேற்று பிற்பகல் வேளையில் ஸ்காபரோவில் வைத்து பெண் ஒருவரைக் கத்தியால் குத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 23 வயது ஆண் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். Victoria Park Avenue மற்றும் Ellesmere வீதிப் பகுதியில் நேற்று பிற்பகல் 1:25 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள துரித உணவகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்திற்கு இருவரும் சென்றதாகவும், மோதல்கள், வாக்குவாதங்கள் எவையும் இடம்பெறாத நிலையில், குறித்த அந்த நபர்Read More →

Reading Time: < 1 minute மிசிசாகா பகுதியில் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று கடை ஒன்றின் மீது மோதிய சம்பவத்தில் படுகாயமடைந்த 46 வயது பாதசாரி ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Queen Victory Park Avenue மற்றும் Lorne Park வீதிப் பகுதியில் நேற்று முற்பகல் 11:25 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இந்த விபத்தின் போது ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், வாகனம் கடையின் மீது மோதியRead More →

Reading Time: < 1 minute ஹமில்ட்டன் பகுதியில் ஆண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதல் தொடர்பில் பெண் ஒருவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலை 1:30 அளவில், ஹமில்ட்டன் Rebecca Streetஇல் உள்ள கட்டிடம் ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான ஆண் சம்பவ இடத்திலிருந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை ஓரளவு சீரடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம்Read More →

Reading Time: 2 minutes ஜி 7 நாடுகளின் மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் இடம்பெற்றுள்ள ஒளிப்படம் உலகளவில் வைரலாகுவதற்கு அதனை ஔிப்படப்பிடிப்பாளர் எடுத்த கோணமே காரணமாகும். மெலெனியா ட்ரம்ப் – பிரதமர் ட்ருடோவை சாதாரண மேலைத்தேய பாணியில் வரவேற்ற ஒளிப்படமே இவ்வாறு வைரலாகியுள்ளது. பிரான்ஸில் இடம்பெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் பின்னர் முக்கிய பேசுபொருளாகிய குறித்த ஒளிப்படம் ‘கிளிக்’ செய்யப்பட்ட விதம்தான் தற்போதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வீதிவிபத்தொன்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். வின்னிபெக் பொலிஸாரின் தகவலின் படி இந்த சம்பவம் கனடாவின் ஜாவிஸ் அவனியு மற்றும் மனபிலிப்ஸ் தெரு பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில், சின்க்ளேர் தெருவில் வெஸ்ட்பவுண்ட் ஜார்விஸ் மற்றும் லோகன் அவென்யூவில் வடபகுதி மெக்பிலிப்ஸ் வீதிகள் நேற்று வரை மூடப்பட்டிருந்தன. அத்துடன் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் வின்னிபெக் பொலிஸார் தீவிரRead More →