Reading Time: < 1 minute இலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய எல்லையிலுள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதே எண்ணிக்கையலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னையும் 33 இலங்கையர்களையும் ரொஸ்டொவ்வில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்குRead More →

Reading Time: < 1 minute மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக, குறித்த நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவின் M/s Adani Green Energy Limited இனால் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 07 ஆம் திகதியன்று இடம்பெற்றRead More →

Reading Time: < 1 minute மனிதாபிமான கண்ணிவெடி குறைப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு பாராட்டைப் பெற்றுள்ளது. மனிதாபிமான கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான சர்வதேச மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுடன், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் மற்றும் கண்ணிவெடி நடவடிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்புக் குழு ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடுRead More →

Reading Time: < 1 minute யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார். யாழ் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து புதியRead More →

Reading Time: < 1 minute இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சந்தோஷ் ஜா இன்று காலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சந்தோஷ் ஜாRead More →

Reading Time: < 1 minute ஏப்ரல் மாதத்தில் முதல் 28 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 152 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் 23 ஆயிரத்து 459 பேர் இந்தியாவில் இருந்தும், 13 ஆயிரத்து 878 பேர் ரஷ்யாவில் இருந்தும் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர். இவர்களில் 12 ஆயிரத்து 64 பேர் லண்டனில் இருந்தும் ஏனையவர்கள் மற்றைய நாடுகளில் இருந்தும்Read More →

Reading Time: < 1 minute தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார். கனடா – டொராண்டோவிலுள்ள Toronto Western வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஈழவேந்தன் தனது 72 வது வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதிRead More →

Reading Time: < 1 minute இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்Read More →

Reading Time: < 1 minute தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம்Read More →

Reading Time: < 1 minute சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையில் இதனை தெரிவித்தார். இதன்படி அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளது மீளாய்வின் அடிப்படையில் பணியாளர் மட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுகின்றன. சர்வதேச கடன் மறுசீரமைப்புRead More →

Reading Time: < 1 minute வாழ்நாளில் பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 5 ஆவது இடம் கிடைத்துள்ளது. புதிய இடங்களை ஆராய்வது மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பது யாருக்குத்தான் பிடிக்காது என்ற வகையில் CEO WORLD சஞ்சிகை வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலைத் தொகுத்துள்ளது. அதற்கமைய, 295,000 இக்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள குறித்த பட்டியலில் இலங்கைக்கு 5 ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில்Read More →

Reading Time: < 1 minute ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை மறுதினம் நாட்டிற்கு வருகை தரவுள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிRead More →