Reading Time: < 1 minute கனடாவில் மீண்டும் வட்டி வீதங்கள் உயர்த்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி மீண்டும் வட்டி வீதத்தை அதிகரிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். எதிர்வரும் ஜூலை மாதம் மீளவும் வட்டி வீதம் உயர்த்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். வருடாந்த பணவீக்க வீதம் குறிப்பிடத்தக்களவு குறைவடையும் என்ற நிலையிலும் வட்டி வீதம் உயர்த்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணவீக்கம் நான்கு வீதத்தை விடவும் குறைவடையும் என ரீ.டி வங்கியின் பொருளியல்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயின் புகைமண்டலம் வடஅட்லாண்டிக் கடலைத் தாண்டி ஐரோப்பா வரை நீண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் தற்போது கனடாவில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீ மிக மோசமான பதிவு என என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை தெரிவித்துள்ளது. இக் காட்டுத் தீ காரணமாக 160 மில்லியன் டன் கார்பனை வெளியிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. காட்டுத்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒட்டாவா பகுதியின் கான்டனாவில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கான்டனாவில் (Kanata) அமைந்துள்ள கோல்ப் திடல் ஒன்றின் இருந்த இருவர் மீது இவ்வாறு மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்கள் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்னல் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஆபத்தான நிலையில் இந்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. திடீரென ஏற்பட்ட கடுமையான மழை,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பணவீக்கம் தொடாபில் மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கனடாவின் பொருளாதாரம் 3.4 வீதமாக வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எரிபொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் பணவீக்கத்தில் சாதக மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டின் பின்னர் நாட்டில் பதிவான மிகக் குறைந்தளவு பணவீக்கம் மே மாதம் பதிவாகியுள்ளது. எவ்வாறெனினும், உணவுப் பொருட்களின் விலைகளில் இன்னமும் எதிர்பார்க்கப்பட்ட சாதக மாற்றத்தை அவதானிக்கRead More →

Reading Time: < 1 minute அமெரிக்க ஹெச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களில் 10 ஆயிரம் பேர் கனடா நாட்டிற்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையில் பணி அனுமதி (Open Work Permit Stream) எனும் அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் உருவாக்கும் என்று கனடா குடிவரவு அமைச்சர் ஷான் ஃப்ரேஸர் நேற்று அறிவித்தார். இது தொடர்பில் கனடா நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இப்புதிய முடிவின் கீழ் வரும்ம்Read More →

Reading Time: < 1 minute ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பிரித்தானியாவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின்போது இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவும், இலங்கையும் மிகத் தொன்மையான நாகரிகத் தொடர்பு உடையவை எனவும் 1987ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பிறகுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் விற்பனை செய்யப்படும் பிளக்பெர்ரி வகையொன்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட பிளக்பெர்ரி வகைகளில் பக்றீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் குறித்த வகை பெர்ரி பழங்களை சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்படும் பெர்ரி வகைகள் பிரிட்டிஸ் கொலம்பியாவிலும் விற்பனை செய்பய்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பக்டீரியா வகைகளினால் உடலுங்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வாசனை திரவியங்களை திருடிய சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்றாரியோவின் எலியோட் லேக் பகுதியில் கோலோன் மற்றும் பர்வியூம் வகைகளை களவாடிய நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். களவாடப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஆயிரம் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மூன்று பேரைக் கொண்ட கும்பல் ஒன்று இவ்வாறு களவாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக நிலையத்தின் பணியாளர்களை இரண்டு சந்தேக நபர்கள் திசை திருப்பியதாகவும் மூன்றாம் நபர் பொருட்களை களவாடியுள்ளதாகவும்Read More →

Reading Time: < 1 minute கடந்த 13 ஆண்டுகளாக மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் வலது சாரி கட்சிகளின் வசம் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. டொரன்டோ நகரம் மீள் இணைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக பெண் ஒருவர் மேயர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 66 வயதான சோவ் ஆரம்ப முதலே இந்த தேர்தலில் முன்னணி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் 37.2 வீத வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த நாள்Read More →

Reading Time: < 1 minute 500 மில்லியன் டொலர் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது. உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் இணையத்தளத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 700 மில்லியன் டொலர்களில் 200 மில்லியன் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் இணையதளம் தெரிவித்திருந்தது.Read More →

Reading Time: < 1 minute நீர் மூழ்கிக் கப்பல் விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என கனடிய பாதுகாப்பு போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. பிரபல டைட்டானிக் கப்பலின் இடுப்பாடுகளை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளை தாங்கிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று அண்மையில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக குறித்த நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் குறித்த நீர் மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளான விதம் தொடர்பில் விரிவானRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பெண் ஒருவர் தனது வீட்டு நீர்க்கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். கனடாவின் சஸ்கட்டூன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பெருந்தொகை நீர்க்கட்டணப் பட்டியல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தப் பெண்ணின் நீர்க் கட்டணம் 33500 டொலார்கள் என பதிவாகியுள்ளது. நகர நிர்வாகம் தம்மிடம் கொள்ளையடிப்பதாக உணர்வதாக அந்தப் பெண் விசனம் வெளியிட்டுள்ளார். இதனை ஓர் மோசடியாகவே கருத வேண்டுமெனவும், இவ்வளவு பாரிய தொகை கட்டணம் எவருக்கும் வந்திருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் குடியிருப்பு ஒன்றிற்கு தீ மூட்டிய இரண்டு பெண்கள் தேடப்பட்டு வருகின்றனர். ஸ்காப்ரோவின் Clairlea-Birchmount பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பெண்கள் இருவரும் லிப்டில் தீ மூட்டுவதற்கான எரிபொருட்களை எடுத்துச் செல்லும் காட்சி சிசிடிவி காணொளியில் பதிவாகி உள்ளது. குடியிருப்பின் வீடு ஒன்றின் கதவு பகுதியை இந்த பெண்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த தீமூட்டல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 34 வயதானRead More →

Reading Time: < 1 minute உலகின் மிக மோசமான காற்றின் தரத்தை உடைய நகரம் கனடாவில் பதிவாகியுள்ளது. உலகின் பிரதான நகரங்களில் காற்றின் தரம் தொடர்பில் தகவல்கள் நாள்தோறும் திரட்டப்பட்டு பதிவிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் உலகின் மிக மோசமான காற்றின் தரத்தை கொண்ட நகரமாக கனடாவின் மொன்றியால் நகரம் பதிவாகியுள்ளது. காற்றின் தரத்தை அளவீடு செய்வதற்காக பயன்படுத்தப்படும் சுட்டிகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் கனடாவின் மொன்றியால்Read More →