Reading Time: < 1 minute கனடாவின் கியூபேக் மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சர் ஜெனிவிவ் குயில்போல்ட், ஐந்து தடவைகள் போக்குவரத்து விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டமைக்காக போக்குவரத்து அமைச்சர் குயில்போல்ட் மன்னிப்பு கோரியுள்ளார். காரில் பயணம் செய்த போது இருக்கை பட்டிகளை அணியாது பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சமூக ஊடகங்களில் இந்த விடயம் தொடர்பில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் வீதியொன்றில் பயணம் செய்த ட்ரக் வண்டியொன்றிலின் பெட்டிகளிலிருந்து ஐந்து மில்லியன் தேனீக்கள் கீழே வீழ்ந்துள்ளன. தேனீக்களை கொண்டு சென்ற ட்ரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து ரொறன்ரோவின் பேர்லிங்டனில் குயில்ப் வீதியில் இடம்பெற்றுள்ளது. ட்ரக் வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த வீதியில் பயணித்த சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வாகனத்தின் யன்னல்களை திறக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. கீழே வீழ்ந்தRead More →

Reading Time: < 1 minute ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Justin trudeau இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இந்த மாநாடு டெல்லியில், வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. ஜி-20 உச்சி மாநாடு இந்த நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு வருகை தருகிறார் என அதுபற்றியRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஆளும் கட்சியின் ஆதரவில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடொ தலைமையிலான லிபரல் கட்சிக்கான ஆதரவு சரிவடைந்துள்ளது. குறிப்பாக இளம் கனடியர்கள் மத்தியில் லிபரல் கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது. நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கொன்சேவடிவ் கட்சிக்கான ஆதரவு லிபரல் கட்சிக்கான ஆதரவு விடவும் 23 வீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 18 முதல் 29 வயது வரையிலானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒட்டோவாவில் ஓய்வு பெற்ற தம்பதியினருக்கு பேரதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த தம்பதியினர் 55 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளனர். ஜாக்பாட் சீட்டிலிப்பில் இந்த தம்பதியினர் பரிசுத்தொகையை வென்றனர். இந்த மாதம் 11-ம் திகதி நடைபெற்ற சீட்டெடுப்பில் இவர்களுக்கு இந்த பரிசு கிடைக்க பெற்றுள்ளது. கீத் மற்றும் டெப்ரா பாலசெக் ஆகிய தம்பதியினரே இவ்வாறு பரிசு தொகையை வென்றனர். கடந்த சில ஆண்டுகளாக லொத்தர் சீட்டுக்களைRead More →

Reading Time: < 1 minute சீனாவை தளமாகக் கொண்ட முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனமான சினோபெக், இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட அதன் முதல் நிலையத்தில் எரிபொருள் விநியோகம் ஆரமபமாகியுள்ளது. சீன பெட்ரோலிய நிறுவனங்களின் உள்ளூர் துணை நிறுவனமான சினோபெக் லங்கா இன்று (புதன்கிழமை) சந்தை ஊக்குவிப்பு பிரச்சாரத்துடன் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதன்படி பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் விலைக் கழிவோடு எரிபொருள் நிரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கொலை செய்த அவுஸ்திரேலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Tatiana Dokhotaru (34), 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவரது கணவர் ஒரு அவுஸ்திரேலியர். அவரது பெயர் Danny Zayat (28). தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான். மே மாதம் 27ஆம் திகதி, Tatianaவின் உயிரற்ற உடல் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. தன்னை,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பிய பொது சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிஏ 2.86 என்னும் புதிய வகை கோவிட் திரிபு முதல் தடவையாக கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வரும் கோவிட் திரிபுகளில் ஒன்றாக இந்த கோவிட்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒன்பது வயதான டிக் டாக் பிரபலம் அறிய வகை குடல் நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக காத்திருந்து தற்பொழுது பெல்லா தொம்சன் என்ற இந்த சிறுமிக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிறந்தது முதல் குறித்த சிறுமி குடல் உபாதையினால் பாதிக்கப்பட்டு பெரும் அசவுகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார். இந்த சிறுமி டிக் டாக்கில் சுமார் 6.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றார்கள் என்பதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் என்ற போர்வையில் சில மோசடி சம்பவங்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவிற்குள் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு தசாப்த காலத்தில் கனடாவிற்கு வரும் வெளிநாட்டுப் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளது. கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சர்வதேச மாணவர்களின் வருகையானது வெறும் வீட்டுப் பிரச்சினை மட்டுமல்ல என அவர் தெரிவித்துள்ளார். கனடாவின் குடியேற்றக்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் அரசியல் பிரபலமொருவர் தொகுப்பாளராக மாறியுள்ளார். ரொறன்ரோ மாகாண முன்னாள் முதல்வர் ஜோன் டோரி, வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியில் ஈடுபட்டு வருகின்றார். நியூஸ்டாக் என்ற நிகழ்ச்சியை டோரி தொகுத்து அளித்து வருகின்றார். நிகழ்ச்சி தொகுப்பாளராக கடமையாற்றியுள்ள ஜோன் டோரி, கடந்த 2018ம் ஆண்டின் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட்டதனால் இவ்வாறான நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கவில்லை. டோரி ஊடகத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்Read More →

Reading Time: < 1 minute இரண்டு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை, இரண்டு முறை இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை, புற்றுநோய், மாரடைப்பு என அவருக்கு உள்ள பிரச்சினைகளைப் பார்த்தால், அவர் 24 மணி நேரமும் படுக்கையில் படுத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். ஆனால், அந்த 86 வயது கனேடியர், நான்கு வயது சிறுமி ஒருத்தியின் உயிரைக் காப்பாற்றியதால், இன்று அவரை மக்கள் ஹீரோ என புகழ்கிறார்கள். கனடாவின் எட்மண்டனில் வாழ்ந்துவரும் Fred Wasylyshyn (86), தனது mobility scooter உதவியுடன்Read More →

Reading Time: < 1 minute கனடிய மக்களின் ஆயுட்காலத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மக்களின் ஆயுட்காலம் 81.7 வயது ஷகளிலிருந்து 81.6 வயதாக குறைவடைந்துள்ளது. இதேவேளை கனடாவில் இறப்பு வீதமும் ஒரு வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு புள்ளி விபர தகவல்கள் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. குறிப்பாக புற்றுநோய், இருதய நோய், மித மிஞ்சிய அளவில் மருந்து பயன்படுத்துதல் மற்றும் கோவிட் 19 நோய் தொற்றுRead More →

Reading Time: < 1 minute டொரன்டோ உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஆறு மாணவர்கள் 100 வீத சராசரி புள்ளிகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். டொரன்டோ மாவட்ட கத்தோலிக்க பாடசாலை சபையின் நிர்வாகத்தில் இயங்கி வரும் Father John Redmond பாடசாலையில் இவ்வாறு சாதனை படைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத்தில் 8 மாணவர்கள் சிறந்த பெருவேறு பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் ஆறு மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 100 வீத புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்தRead More →