Reading Time: < 1 minute தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் தொழில் மோசடியில் சிக்கிய இந்திய பெண் ஒருவர் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார். அண்மையில் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு வந்த பெண் ஒருவரே இவ்வாறு மோசடியில் சிக்கியுள்ளார். ரொறன்ரோவைச் சேர்ந்த தேவான்சி பொட்டார் என்ற பெண் 15000 டொலர்களை இழந்துள்ளார். இது ஓர் சிறிய தொகை கிடையாது எனவும், தனது வாழ் நாள் சேமிப்பு எனவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு கனடாவிற்குள் குடியேறிய தேவான்சி தொழில் வாய்ப்புRead More →

Reading Time: < 1 minute கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து ஏர் கனடா விமானம் மூலம் கன்டெய்னர் ஒன்று பியர்சன் சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதில், 400 கிலோ தூய தங்க கட்டிகளும், 2.5 மில்லியன் கனடா டாலரும் இருந்தன. விமானநிலையத்தின் சேமிப்புRead More →

Reading Time: < 1 minute பிரபல நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்ட விடயத்தில், அது தொடர்பில் கனடாவில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 5.00 மணியளவில், மும்பையிலுள்ள நடிகர் சல்மான் கான் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை பொலிசார் இரண்டு பேரைக் கைது செய்துள்ளார்கள். அவர்கள் சல்மான் கானை பயமுறுத்துவதற்காகவே சுட்டதாகவும், அவர்கள் நோக்கம் சல்மான் கானைத் தாக்குவது அல்லRead More →

Reading Time: < 1 minute கனடாவில் 24 வயதான இந்திய மாணவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்வி பயின்று வரும் அரியானா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான சிரங் அன்டில் என்ற மாணவனே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனடாவின் வென்கவெர் நகரில் தங்கி கல்வி பயின்று வரும் சிரங் அன்டில் நேற்று முன் தினம் வென்கவெர் நகரின் கிழக்கு 55வது அவன்யூ பகுதியில்Read More →

Reading Time: < 1 minute கனடா, இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றிவந்த இந்திய அலுவலர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றிவந்த இந்திய அலுவலர்களின் எண்ணிக்கையை கனடா குறைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது கடந்த ஆண்டு இந்தியா 41 கனேடிய தூதரக அலுவலர்களை வெளியேற்றியதன் தொடர்ச்சியான நடவடிக்கை என கருதப்படுகிறது. இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் கனேடியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அதற்கேற்ப இந்தியRead More →

Reading Time: < 1 minute இந்தியா தங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிவந்த கனடா, பின்னர் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுகளைக் கூறியது. தற்போது சீனா மீதும் கனடா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கனடாவின் உளவுத்துறை ஏஜன்சி, 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் தலையிட்டிருக்கக்கூடும் என முதலில் இந்தியா மீதும் பின்னர் பாகிஸ்தான் மீதும் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றில், கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் இந்தியாவின் தலையீடு இல்லை எனRead More →

Reading Time: < 1 minute யாழ்.அனலைதீவில் நிர்மானிக்கப்படவுள்ள சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கான பூமி பூஜை நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் இப் புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minute ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மூவரும் இலங்கை வந்தடைந்தனர். கொழும்பை வந்தடைந்த முருகன், ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் ஆகிய மூவரும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணிநேரம் விசாரணைகளின் பின்னர், அதிகாரிகள் அவர்களை விடுதலை செய்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூவரும் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். இன்று காலை திருச்சிசிறப்பு முகாமில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரம்டனில் வீதியொன்றில் வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். கடந்த புதன்கிழமை பிரம்டனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஈகள்ரிட்ஜ் மற்றும் டோர்பிராம் வீதிகளுக்கு அருகாமையில் வாகமொன்றில் சென்ற நபரை மற்றுமொரு வாகனத்தில் சென்றவர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்துடன் நான்கு இளைஞர்களுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. மோதலில் ஈடுபட்ட 28 வயதான ஆகாஸ்டீப் சிங் மற்றும் 23 வயதான ராமன்பிரீட் மாசியா ஆகியோரை பொலிஸார் அடையாளம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில், சாலை விபத்தொன்றில் பலியான இளைஞர் ஒருவருடைய உடல், 18 நாட்களுக்குப் பின் இந்தியா வந்தடைந்தது. இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Bhador என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Sukhchain Singh (23). கனடாவில் வாழ்ந்துவந்த சிங் காரில் பயணிக்கும்போது அவரது காரும் ட்ரக் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின. படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக அவரது நண்பர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவந்த நிலையில், 18Read More →

Reading Time: < 1 minute இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தரை வழிப் பாலத்தினை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை சார்பில் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது அதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா தலைமையிலான குழுவினருக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் கடந்த 27Read More →

Reading Time: < 1 minute இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார திட்டங்களின் மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு செயலாளர் தலைமையில் புதுடெல்லியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையின் பொருளாதார நிலை சாதாரணமட்டத்தை எட்டியுள்ளமையினால் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minute இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோர் தாய்நாடு திரும்புவதற்கு இலங்கை துணை தூதரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த மூவரும் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ் நாட்டு அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டணைக்குட்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தRead More →