Reading Time: < 1 minute கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தலைநகர் ஒட்டாவாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதையடுத்து, பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறியுள்ளார். ஏற்கனவே தனது குழந்தைகளில் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்ததை அடுத்து, அவர் தொலைதூரத்தில் இருந்து தனது பணியை முன்னெடுத்து வந்தார். இந்தநிலையில், போராட்டம் வலுப்பெற்றதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமர் ஜஸ்டீன் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கனடா அரசாங்கம் கொரோனா தடுப்பூசி கட்டாயம் உள்ளிட்டRead More →

Reading Time: < 1 minute கனடா தலைநகர் நோக்கி லொறிகள் ஊர்வலம் சென்றுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லொறி சாரதிகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என ட்ரூடோ நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து, எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான லொறிகள் தலைநகர் நோக்கி ஊர்வலம் சென்றுள்ளது. இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடிக்க வாய்ப்பிருப்பதாக கூறி கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பலRead More →

Reading Time: < 1 minute அமெரிக்காவில் விமானப் பணிப்பெண்ணைத் தவறாக தீண்டியதற்காக கனேடியர் ஒருவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் திகதி கான்கனில் இருந்து மியாமிக்கு சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்iந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் பயணம் செய்த 50 வயதான எனியோ சோகோரோ சயாஸ் (Enio Socorro Zayas) எனும் கனேடியர் விமானப் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் மீதான வழக்கு திங்கட்கிழமை மியாமியில்Read More →

Reading Time: < 1 minute கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். இதுதொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேற்று எனது கொரோனா தொற்று பரிசோதனை முடிவு வந்தது. அதில் எனக்கு தொற்று இல்லையென தெரிந்தது. எனது ரேபிட் கிட் சோதனை முடிவு எதிர்மறையாக வந்தபோதிலும், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன்.Read More →

Reading Time: < 1 minute கனடா அமெரிக்க எல்லையில் நால்வர் கொண்ட இந்திய குடும்பம் பனியில் உறைந்து மரணமடைந்த விவகாரத்தில் இந்திய பொலிசார் 6 பேர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் கடந்த வாரம் நடந்த இச்சம்பவமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவின் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆண்டுதோறும் கனடா எல்லை வழியாக அமெரிக்கா செல்ல முயற்சிக்கின்றனர். மட்டுமின்றி, கனடாவில் குடியேறும் வாய்ப்புகள் இருந்தும்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் புதைக்கப்பட்ட மேலும் 90 பழங்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் “கலாச்சார இனப்படுகொலை” வரலாற்றை அம்பலப்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள், 90 க்கும் மேற்பட்ட “சாத்தியமான” கல்லறைகள் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் உறைவிடப் பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. செவ்வாயன்று, சுமார் 800 பழங்குடி மக்களைக் கொண்ட வில்லியம்ஸ் லேக் ஃபர்ஸ்ட் நேஷன், செயின்ட் ஜோசப்Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் செவ்வாய்க்கிழமை (25-01-2022) 64 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன, செவ்வாய்க்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மூலம் 3,434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை செவ்வாய்க்கிழமை ஒன்ராறியோ வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,008 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 626 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கனடாவில் இன்று முதல் ஆவணப்படுத்தப்பட்ட கொரோனா நோய்த்தொற்றுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன, அந்த நேரத்தில் மாகாணத்தில் ஒருRead More →

Reading Time: 2 minutes நீங்கள் படிப்புக்காக கனடா செல்ல விரும்பினால், இங்கே படிப்பதன் நன்மைகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த படிப்பு இடமாக கனடா பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. குறிப்பாக, வெளிநாட்டில் உள்ள நல்ல கல்லூரிகளில் குறைந்த செலவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களிடையே இது மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கனடாவுக்கு படிக்க வருகிறார்கள். கனடா வெளிநாட்டு மாணவர்களின் விருப்பமானRead More →

Reading Time: < 1 minute ஒண்டாரியோ பாடசாலைகளில், மாணவர் வருகை குறித்த தரவுகள் இன்றுமுதல் மாகாண அரசால் வெளியிடப்படுகின்றன. கோவிட் 19 காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, பாடசாலைக்கு வருகை தராத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் சதவீதம் 30ஐ கடந்தால், அது பெற்றோருக்கு அறியத்தரப்படவுள்ளது. ஒண்டாரியோவின் 4,800க்கும் மேலான பாடசாலைகளில், 3,453 பாடசாலைகள், இன்று முதல்நாளில், தத்தமது பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வரவின்மையை ஒப்படைத்துள்ளன. இவற்றில், டொரோண்டோவில் 72 பாடசாலைகள் அடங்கலாக, மொத்தம், 337 பாடசாலைகளில்,Read More →

Reading Time: < 1 minute கனடா எல்லையில் உறைபனியில் சிக்கி உயிரிழந்த 4 குஜராத்திகள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் ஊடுருவ முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. பல ஏஜண்டுகள் கனடாவில் இருந்து பல நாடுகளைச் சேர்ந்தவர்களைச் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க வைத்து, அவர்களை அமெரிக்காவில் கொண்டுவிடும் வேலையைச் செய்கின்றனர். இவ்வாறு கனடா – அமெரிக்கா எல்லை கடக்கும் பயணம் மிகவும் ஆபத்தானது, இந்த பயணத்தில் பலர் உயிரிழப்பது உண்டு. அமெரிக்கச் சட்ட அமலாக்கப்பிரிவினர் புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் கிழக்கு யொர்க்கில் 15 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் 13 வயது சிறுவன் மீது வழக்குப் பதிந்துள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த 13 வயது சிறுவன் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதால், நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் நேரடியாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது. கடந்த புதன்கிழமை கேம்பிள் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ்த்தள பார்க்கிங் கேரேஜில் துப்பாக்கிச்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பிராம்டனில் குடியிருப்பு ஒன்று தீக்கிரையானதில், தப்பிக்க முடியாமல் உடல் கருகி பலியான மூன்று இளம் சகோதரர்கள் தொடர்பில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிராம்டனில் வியாழக்கிழமை குடியிருப்பு ஒன்று தீக்கிரையானதில், இளம் வயது சகோதரர்கள் மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். ஆனால் மூவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். சம்பவத்தின் போது சிறுவர்களின் தாயார் குடியிருப்பில் இல்லை என தெரிய வந்துள்ளது. தமது இளைய மகளை பகல் நேர காப்பகத்தில்Read More →

Reading Time: 2 minutes மெக்ஸிகோவின் கான்குன் அருகே உள்ள ஹோட்டல் ரிசார்ட்டில் விருந்தினர்களிடையே ஏற்பட்ட தகராறில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கரீபியன் கடற்கரையில் கான்குனுக்கு தெற்கே 70 கிமீ (45 மைல்) தொலைவில் உள்ள சுற்றுலா நகரமான பிளாயா டெல் கார்மெனில் உள்ள ஹோட்டல் எக்ஸ்கேரெட் மெக்ஸிகோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிதாரியின் புகைப்படங்களை பிராந்திய பொலிஸ்துறைத் தலைவர்Read More →

Reading Time: < 1 minute கடும் விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியவில்லை என பெரும்பான்மை கனேடிய மக்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 57% கனேடிய மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியாத அளவுக்கு விலைவாசி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 2019ல் இதேப்போன்றதொறு ஆய்வில் 36% மக்களே அவ்வாறான ஒரு நிலையை எதிர்கொள்வதாக குறிப்பிட்டிருந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வை கனேடிய மக்கள்Read More →