Reading Time: < 1 minute கனடாவில் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அல்பெர்ட்டா மாகாணத்தின் பல சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் பெற்றோருக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்துள்ளன. நிதி நெருக்கடி நிலைமைகளினால் பல்வேறு சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மூட நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அல்பெர்ட்டா சிறுவர் பராமரிப்பு முயற்சியான்மையாளர்கள் என்ற அமைப்பு இந்த பெற்றோருக்கு அறிவித்துள்ளது. மத்திய அசராங்கத்தின் நாளொன்றுக்கு 10 டொலர்கள் என்ற திட்டத்தில் நிலவி வரும் குளறுபடிகள் தொடர்பில் சிறுவர்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் சஸ்கட்ஸ்வான் மாகாணத்தில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுழற்சி முறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட உள்ளது. சஸ்கட்ஸ்வான் ஆசிரியர் ஒன்றியம் இந்தப் போராட்டம் தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பிராம்ப்டன் நகரை சேர்ந்தவர் நிஷான் திந்த் (வயது 18) கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி போலிஸ் நடத்திய விசாரணையில், அவரை மற்றொரு இளைஞர் துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்தது. இதுபற்றிய தகவல் அல்லது வீடியோ காட்சிகள் எதுவும் உள்ளனவா? என விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்டRead More →

Reading Time: < 1 minute தன் கணவர் தனக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த லொட்டரிச்சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ளார் கனேடிய பெண் ஒருவர். கனடாவின் மனித்தோபா மாகாணத்தின் தலைநகரான வின்னிபெகில் வாழும் கிறிஸ்டல் (Krystal McKay), தனது கணவரான லாரன்ஸிடம் (Lawrence Campbell), லொட்டரிச்சீட்டு ஒன்று வாங்கிவரும்படி பல வாரங்களாகவே கூறிக்கொண்டிருக்க, ஒருநாள், கிறிஸ்டலுக்கு பிறந்தநாள் பரிசாக லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் லாரன்ஸ். பிறந்தநாள் பரிசாக வந்த அந்த லொட்டரிச்சீட்டோ, கிறிஸ்டலின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நோயாளர்கள் விபரங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரையில் நோயாளிகள் தொடர்பிலான விபரங்கள் சரியான முறையில் பேணப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுக் கொள்கை அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. எதிர்வரும் 2028ம் ஆண்டளவில் நோயாளர்கள் பற்றிய அனைத்து விபரங்களும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது. இவ்வாடி டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதன் மூலம் சிகிச்சைகளை இலகுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதார சேவை வழங்கும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் வீடு கொள்வனவு செய்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு பிரஜைகள் வீடு கொள்வனவு செய்யும் போது வரி அறவீடு செய்யும் யோசனைக்கு நகர நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ரொறன்ரோ மாநகரசபையின் மேயர், ஒலிவியா சொ இந்த யோசனையை முன்வைத்தார். இந்த முன்மொழிவினை நகர நிர்வாக நிறைவேற்றுக்குழு அங்கீகரித்துள்ளது. வதிவிட நோக்கில் ரொறன்ரோவில் வீடுகளை கொள்வனவு செய்யும வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து வரிRead More →

Reading Time: < 1 minute 2003 மற்றும் 2004 கொரோலா, கொரோலா மெட்ரிக்ஸ் 2004, 2005 ரேவ்4எஸ் (2003 and 2004 Corolla and Corolla Matrix models as well as 2004 and 2005 RAV4s.) ரக காரில் காணப்படும் எயார் பேக்கில் (Takata airbag) கோளாறு காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எயார் பேக்குகள் வெடித்துச் சிதறக்கூடியவை எனவும் இதற்குள்ளிலிருந்து சில கூரிய ஆபத்தான பொருட்கள் வெளிப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொயோட்டாRead More →

Reading Time: < 1 minute கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது இன்நிலையில் இந்த வருடத்தின் முதல் 29 நாட்களில் 330-இற்கும் அதிகமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மேலும் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான முனையங்களில் மாத்திரம் கடந்த 29 நாட்களில் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 60.9 வீதத்தால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minute கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தைக் கொண்டு மாணவி ஒருவரை கனடாவுக்கு கல்வி கற்க அனுப்பியது இந்தியக் குடும்பம் ஒன்று. ஆனால், அந்த மாணவி கனேடிய மாகாணம் ஒன்றிற்கு வந்தபோது அவருக்கு ஏமாற்றம் ஒன்று காத்திருந்தது. அந்த மாணவி கல்லூரி ஒன்றில் இணைந்து கல்வி கற்போம் என எதிர்பார்த்து பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கு வந்த நிலையில், அவருக்கு அங்கு ஒன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன, அவர் கல்லூரிக்குச் சென்று கல்வி கற்கRead More →

Reading Time: < 1 minute கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மீது பலஸ்தீன முஸ்லிம் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. கனடிய முஸ்லிம்களுக்கான தேசிய பேரவை இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பலஸ்தீன மக்களை பாதுகாப்பதற்கு ட்ரூடோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. இதனால் பிரதமருடனான சந்திப்பினை ரத்து செய்வதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ட்ரூடோவுடனான சந்திப்பில் எவ்வித பயனும் கிடைக்க்ப போவதில்லை என பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவன் பிறவுண் குறிப்பிட்டுள்ளார். கடந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் வரி அதிகரிப்பு தொடர்பில் நகர மேயர் ஒலிவியா சொள தெரிவித்துள்ளார். ரொறன்ரோவில் பாரியளவில் வரி அதிகரிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ரொறன்ரோவில் இந்த வாரம் மேயர் சௌ, வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார். வாடகை வீடுகளின் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படக் கூடிய தாக்கத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்னதாக அறிவிக்கப்பட்ட தொகையில் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது என அவர் குறிபிட்டுள்ளார். சொத்துக்களுக்கானRead More →

Reading Time: < 1 minute இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய இருநாடுகளுக்கும் இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட விமான சேவைகள் அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேநேரம் இலங்கையின் சுதந்திரதின நிகழ்விற்கு கௌரவ அதிதியாகRead More →

Reading Time: < 1 minute காசா பிராந்தியத்தில் பலஸ்தீன – கனடிய பிரஜை ஒருவர்; காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்சூர் சௌமான் என்ற ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. காசாவில் இடம்பெற்று வரும் மனிதாபிமான நடவடிக்கைகளை பதிவு செய்யும் நடவடி;ககைளில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த பலஸ்தீன கனடிய பிரஜை காணாமல் போயுள்ளார். மன்சூர் சௌமான் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். தென் காசா பிராந்தியத்தின் நாசர்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் புதிய புலம்பெயர்தல் விதிகள், இந்திய மாநிலம் ஒன்றிலுள்ள இளம்பெண்களின் திருமணத்துக்கு தடையாக மாறியுள்ளன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், மனைவியை கனடாவுக்குக் கல்வி கற்க அனுப்பிவிட்டு, அவர்கள் மூலம் கனடா செல்லும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள். கனடாவுக்குச் சென்று கல்வி கற்றதும், கணவனைக் கழற்றிவிட்ட பெண்கள் சிலர் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். வசதியுள்ள ஆண்கள், பெண் பார்த்ததும், மணமகளை கனடாவுக்கு அனுப்பி படிக்க வைப்பதாகவும், அதற்கானRead More →