Reading Time: < 1 minute உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊடாக கனடாவிற்கு வருகை தந்துள்ளனர். ரஸ்யாவினால் போர் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் உக்ரைன் பிரஜைகள் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சுமார் 306 உக்ரைன் பிரஜைகள் விசேட விமானம் ஒன்றின் மூலம் கனடாவின் மென்ட்ரயல் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஏற்கனவே உக்ரைன் ஏதிலிகளுடன் விமானமொன்று கனடாவிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உக்ரைன் ஏதிலிகளை தாங்கிய மற்றுமொரு விமானம் எதிர்வரும் ஜூன்Read More →

Reading Time: < 1 minute தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர் பற்றிய தகவல்களை கனேடிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமான சேவை நிறுத்தப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. விமானம் தாமதமான காரணத்தினால் மணப்பெண் விமான நிலையத்திலேயே உறங்க நேரிட்டதுடன், நிகழ்வில் பங்கேற்க முடியாது போயுள்ளது. றொரன்டோவிலிருந்து பொனிக்ஸ் நோக்கிப் பயணிக்க வேண்டிய விமானம் இவ்வாறு தாமதமாகியுள்ளது. முன்னதாக விமானம் தாமதமாக பயணம் செய்யும் எனRead More →

Reading Time: < 1 minute அமெரிக்காவில் 21பேரின் உயிரைக் காவுக்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் அண்மைய நாடான கனடா, கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அறிவித்துள்ளது. கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிறைவேற்றப்பட்டு சட்டம் அமுலுக்கு வரும் போது, கைத்துப்பாக்கிகளை வாங்க, விற்க இறக்குமதி செய்ய முடியாது. விளையாட்டு மற்றும் வேட்டைக்கு மட்டும் கைத் துப்பாக்கிகளை பயன்படுத்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவுக்கு நெருக்கமான பஞ்சாப் பாடகர் ஒருவர் கும்பல் ஒன்றால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சித்து மூஸா வாலா என்ற பிரபல பாடகர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் கனேடிய கும்பல் ஒன்று சித்து மூஸா கொலையில் தொடர்பிருக்கலாம் என கூறப்படுகிறது. 28 வயதான சித்து மூஸா ஹம்பர் கல்லூரியில் சர்வதேச மாணவராக பயின்றார். மட்டுமின்றி ரொறன்ரோவில் தமது பல இசை வீடியோக்களைRead More →

Reading Time: < 1 minute கனடா நாட்டில் சில பகுதிகளில் ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் (Strawberry Fruit) மூலமாக ஹெப்படைடிஸ் என்னும் நோய் பரவுவதாக வெளியான தகவலையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காச்சுவான் மாகாணங்களில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, இறக்குமதி செய்யப்பட்ட ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் இந்த நோய் பரவலின் பின்னணியில் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஹெப்படைடிஸ் நோய் உருவாகும் முன் பலரும் தாங்கள் இந்த இறக்குமதிRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ வில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்துச் சம்பவம் விக்டோரியா பார்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கட்டடத்தின் எட்டாம் மாடியில் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தீயனைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். குடியிருப்பில் தனியாக வாழ்ந்து வந்த 60 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தீயனைப்புப் படையினர் விரைந்து செயற்பட்ட காரணத்தினால் கட்டடத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீRead More →

Reading Time: < 1 minute பணி-வாழ்க்கைச் சமனிலையான உலகின் மிகச் சிறந்த நகரங்களின் வரிகையில் மூன்று கனேடிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. ஒட்டாவா, வான்கூவார் மற்றும் றொரன்டோ ஆகிய நகரங்கள் இவ்வாறு குறித்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 2022ம் ஆண்டுக்கான பணி – வாழ்க்கைச் சமனிலை சுட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பணி மற்றும் வாழ்க்கைக்கு இடையில் மிகச் சிறந்த சமனிலையை தங்களது பிரஜைகளுக்கு வழங்கும் நகரங்கள் எவை என்பது குறித்து ஆய்வு நடாத்தப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது. அமெரிக்காவின்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒன்லைன் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக தர்ஹாம் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இளைஞர் எனவும், அவர் ஒன்ராறியோ மாகாணத்தவர் அல்ல எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பில் ஆதாரங்கள் திரட்டி வருவதாகவும், அவரது கணினி உட்பட மொபைல்போன் என அவர் பயன்படுத்தியுள்ள பொருட்களை மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே,Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட ரஷ்யாவின் மிகப்பெரிய விமானத்திற்கு பெருந்தொகை பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்று பிப்ரவரி 27ம் திகதியில் இருந்தே ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில் உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் கனேடிய அரசாங்கம் ரஷ்ய விமான சேவைகளுக்கு அனுமதி மறுத்துள்ளதுடன், மறு உத்தரவு வெளியாகும் வரையில் கனடாவில் இருந்து வெளியேறவும் தடைRead More →

Reading Time: < 1 minute கனடா- ஒன்ராறியோ மாகாணம், ரொரண்டோ நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு சமீபமாக துப்பாக்கி ஏந்தியவாறு நடமாடிய இளைஞன் ஒருவரை ரொரண்டோ பொலிஸார் சுட்டுக் கொன்றனர். கனடா நேரப்படி வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த பாடசாலைகள் அச்சம் காரணமாக உடனடியாக மூடப்பட்டன. பாடசாலைக்கு முன்பாக துப்பாக்கியுடன் நடமாடிய நபரை பொலிஸார் எதிர்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் என ரொரண்டோRead More →

Reading Time: < 1 minute கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்தும் கியூபெக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோயின் பரவல் குறித்த சமீபத்திய புதுப்பிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தல் சோதனைக்காக கனடாவின் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகம் பல அதிகார வரம்புகளிலிருந்து மாதிரிகளை தொடர்ந்து பெற்று வருவதாக அறிக்கை கூறுகிறது. இந்த நேரத்தில், குரங்கு காய்ச்சலின் வழக்குகள் உள்ளூர் சுகாதார நிலையங்களால் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனRead More →

Reading Time: < 1 minute கனடாவில் 15 பேர் குரங்கு குனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்து, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பத்துக்கும் மேற்பட்டோர் H5N1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் சவுதி அரேபியாவில் சில வழக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக, கனடாவில் பத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களில் 15 பேருக்குRead More →

Reading Time: < 1 minute உக்ரைனில் ரஷ்ய துருப்புக்கள் முன்னெடுத்த பாலியல் குற்றங்களை விசாரிக்கும் பொருட்டு சர்வதேச சமூகத்திற்கு உதவ கனடா 1 மில்லியன் டொலர் கூடுதலாக வழங்க உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு கனடா கூடுதல் நிதியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் உதவிகள் வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. உக்ரேனிய மக்களுக்கு எதிராகRead More →

Reading Time: 2 minutes இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும்Read More →