Reading Time: < 1 minute துருக்கி இராணுவம், போர் தொடுத்துள்ள சிரியாவின் வடகிழக்கே அமைந்துள்ள அகதி முகாமில் குறைந்தது 25 கனேடியச் சிறுவர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை பத்திரமாக மீட்டெடுப்பதற்கு கனடா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அனைத்துலக தொண்டூழிய அமைப்பான ‘சேவ் த சில்ட்ரன்’ கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், தற்போது வரை அகதி முகாம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்றும், தாக்குதலுக்கு முன்னதாக அவர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அந்தச் சிறுவர்கள் பெரும்பாலும் பெற்றோரைRead More →

Reading Time: < 1 minute ஸ்பரோ மிட்லான்ட் பார்க் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான 22 வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரிம்லி வீதி மற்றும் லோறன்ஸ் அவனியூ பகுதியில், பிர்க்டேல் வீதியில் நேற்று (வியாழக்கிழமை) முற்பகல் 11:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரதூரமான நிலையில் காணப்பட்ட அவர் உடனடியாகவே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அவர் உயிர் பிழைத்துவிடுவார் என்று நம்பப்படுவதாகவும்Read More →

Reading Time: < 1 minute கனேடியப் பெண் ஒருவரை அமெரிக்காவினுள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய அமெரிக்கருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கரோலினாவைச் சேர்ந்த 41 வயதான ஃபிரட் றூசெல் ஊரே என்பவருக்கே, தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்பேர்ட்டாவைச் சேர்ந்த குறித்த 19 வயது பெண்ணுக்கு, ‘மொடலிங்’ வேலை வாய்பினைப் பெற்றுத்தருவதாக தெரிவித்து கனடாவின் தென்பகுதி எல்லைப் பகுதி ஊடாக அமெரிக்காவினுள் அழைத்துச் சென்ற குறித்த ஆண், அவரையும் கனடாவில் உள்ளRead More →

Reading Time: < 1 minute பிரம்டனில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதசாரி ஒருவர், சிகிச்சைகள் பலனின்றி அங்கு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Steeles Avenue மற்றும் Hurontario Street பகுதியில் நேற்று இரவு 9:30 அளவில் குறித்த அந்த பாதசாரி வாகனத்தினால் மோதுண்டதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உடனடியாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைகள் பலனின்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதிRead More →

Reading Time: < 1 minute 16 வயதுச் சிறுவன் ஒருவரை வேண்டுமென்றே வாகனத்தினால் மோதிக் கொலை செய்த சம்பவம் ஈஸ்ட் யோர்க் பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. Woodbine Avenue மற்றும் O’Connor Drive பகுதியில் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், இது குறித்து நேற்று பிற்பகலில் தகவல் வெளியிட்ட காவல்துறையினர், வாகனத்தால் மோதுண்ட சிறுவன் 16 வயதான மத்தியூ டேவெர் எனவும், வூட்பைன் அவனியூ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம்Read More →

Reading Time: < 1 minute டூர்ஹாம் பிராந்தியத்தின் வடபகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Uxbridge பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும், இந்த வெடிப்பின் போது குறித்த அந்த வீட்டின் யன்னல்கள் சிதறுண்டதாகவும், வெடிப்பு இடம்பெற்ற வேளையில் வீட்டினுள் அந்த வீட்டின் உரிமையாளரும் பாரமரிப்புப் பணியாளரும் இருந்ததாகவும் டூர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டின் வெப்பமாக்கி கருவி ஒன்றினைRead More →

Reading Time: < 1 minute ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Bay Street மற்றும் College Street பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5:45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்தப் பெண் தடப்பேரூந்திலிருந்து வெளியேறும் போது அல்லது உள்நுளைய முயற்சித்த வேளையில் அந்த வழியே வந்த வாகனம் ஒன்றினால் மோதுண்டதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் பாரதூரமானRead More →

Reading Time: < 1 minute வான்கூவரில் சுமார் 59 வருடங்களுக்கு பிறகு கடும் குளிர் உணரப்பட்டுள்ளதாக, கனேடிய சுற்றுச் சுழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு செல்சியஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 1960ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 2.8 செல்சியஸ் வரலாற்றை முறியடித்துள்ளது. தற்போது, எதிர்வரும் நாட்களிலும் இதே நிலை தொடரும் எனவும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கனேடிய சுற்றுச் சுழல் திணைக்களம்Read More →

Reading Time: < 1 minute சாஸ்கடூனில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்கள் இருவருரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறித்த இரு சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர்கள் இருவரும் இருபது வயதுக்குட்பட்டவர்களாக இருக்ககூடுமென சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஒருவர் கருப்பு காற்சட்டை, வெள்ளை ரன்னர்ஸ் மற்றும் சாம்பல் நிற ஜாக்கெட் கொண்ட சிவப்பு ஸ்வெட்டர் அணிந்திருந்ததாகவும், இரண்டாவது சந்தேக நபர் கருப்பு நிற ஆடையில் வெள்ளை நிற கோடுகளுடன் கருப்புRead More →

Reading Time: < 1 minute தென்கிழக்கு கல்கரி வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம், அடையாளங் காணப்பட்டுள்ளதாக கல்கரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 29 வயதான மத்தேயு டேவிட் மணியாகோ என பொலிஸார் இனங் கண்டுள்ளனர். 100ஆவது தொகுதி மவுண்ட். அபெர்டீன் மேனர் மெக்கென்சி ஏரியில் நேற்று (புதன்கிழமை) இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளான நிலையில், மத்தேயு டேவிட் மணியாகோ சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்து ஹோண்டா சிஆர்-வி வெள்ளை மொடல்Read More →

Reading Time: < 1 minute இரண்டு கனேடிய போர்க்கப்பல்களில் தங்கியிருந்த மாலுமிகள் கடந்த வருடம் தங்களை அறியாமலேயே பூஞ்சணம் படிந்த மெத்தைகளில் உறங்கியதற்கான ஆதாரங்கள் வௌியாகியுள்ளன. அது தொடர்பான ஔிப்படங்கள் மற்றும் ஆவணங்களை கனடாவின் சீ.பி.சி. இணையத்தளம் பெற்றுள்ளது. கப்பலில் ஏற்பட்ட இந்த பிரச்சினைக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு மற்றும் பொருள் இருப்பு தொடர்பான ஆய்வுகளின் மூலம் தீர்வுகாணப்பட்டுள்ளது. எச்.எம்.சி.எஸ். செயின்ட் ஜோன்ஸ் மற்றும் எச்.எம்.சி.எஸ் சார்லோட்டவுன் கப்பல்களில் உள்ள குழு உறுப்பினர்கள் பூஞ்சணம் படிந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இந்திய திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்ட இரண்டு திரையரங்குகள் தாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து ஒன்ராறியோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரபல இந்திய நடிகர்களான சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆகியோரின் நடிப்பில் வௌியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படம் திரையிடப்பட்ட கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள இரண்டு திரையரங்கங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.Read More →

Reading Time: < 1 minute கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போலியானர் என்றும், மோசடிகாரர் என்றும் பிரதமர் பதவிக்கான போட்டிக்களத்தில் உள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அன்ரூவ் ஸ்கீர் (Andrew Scheer) குற்றம்சுமத்தியுள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள தேர்தலில் இரண்டாவது தடவையாக பிரதமர் பதவிக்கு போட்டியிட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தீர்மானித்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டாவது விவாதத்தின் போது பிரதமர் ட்ரூடோவை, அன்ரூவ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதேவேளை,Read More →

Reading Time: < 1 minute “இலங்கையைச் சேர்ந்த நான் கனடாவில் வளர்ந்தேன். தமிழக மக்களின் ஆதரவால் இப்போது பிரபலமாகி இருக்கிறேன். இனி தொடர்ந்து தமிழகத்தில் இருக்கவே விருப்பம்” என்று பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சியில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூன்றாவது பாகம் கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில்Read More →