Reading Time: < 1 minute கொவிட்-19 முடக்கநிலை காரணமாக பல மாதங்கள் மூடப்பட்ட பின்னர், வன்கூவரின் பிரபலமான கோடைகால இடங்கள் சில மீண்டும் திறக்கப்படுகின்றன. வன்கூவரின் பூங்காவுக்கான சபை, கோடைக்கால பார்வையாளர்கள் எங்கு, எப்போது மீண்டும் விளையாடலாம் என்பது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி முதல் நகரம் முழுவதும் 10 spray பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும். எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்குள், நான்கு பொது நீச்சல் தடாகங்கள், நீச்சல் வீரர்களுக்குRead More →

Reading Time: < 1 minute 18 மாதங்களுக்கும் மேலாக சீனாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கனடியர்கள் தொடர்பாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டு, பொறுப்பற்றது என சீனா மறுத்துள்ளது. ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தக தடைகளை மீறியதாக சீனாவைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு பழி வாங்கும் வகையில் சீன அரசு கனடாவைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளது எனும் குற்றச்சாட்டை பிரதமர் ஜஸ்டின் முன்வைத்தார். எனினும், சீன வெளியுறவுத் துறைRead More →

Reading Time: < 1 minute கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக கூடுதல் ஆய்வுகள் மற்றும் மேற்பார்வைக்கான உறுதிமொழிகளைப் பெற்ற பின்னர், கனடாவுக்கு விவசாயத் தொழிலாளர்களை அனுப்புவதை மீண்டும் தொடங்குவதாக மெக்ஸிகோ அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பண்ணைகளில் சமீபத்திய வாரங்களில் குறைந்தது இரண்டு மெக்சிகன் ஆண்கள் இறந்துவிட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொவிட்-19 உடன் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்த நிலைமை தற்காலிகமாக மெக்ஸிகோ தொழிலாளர்கள் கனடாவுக்குச் செல்வதை நிறுத்துவதோடு, வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகம் நம்பியுள்ள விவசாயத் துறைக்கும் பாதிப்பைRead More →

Reading Time: < 1 minute கிரேக்கத்திற்கு வெளியே அயோனியன் கடலில் விபத்துக்குள்ளான சைக்ளோன் ஹெலிகொப்டரில் பயணித்த ஆறு கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்களில், நான்கு பேரின் உடல்பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புத் திணைக்களம் (டி.என்.டி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உடல்பாகங்கள் வியாழக்கிழமை ஒன்ராறியோவின் தலைமை மரணவிசாரணை அதிகாரியால் நன்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. கேப்டன் கெவின் ஹேகன், (பிரிட்டிஷ் கொலம்பியாவின் நானாயிமோவைச் சேர்ந்த ஒரு விமானி), கேப்டன் மாக்சிம் மிரோன்-மோரின், (கியூபெக்கிலுள்ள பெக்கன்கூரைச் சேர்ந்த ஒரு விமான போர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 318பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 20பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 1,337பேர் பாதிப்படைந்ததோடு, 8,430பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 29,021பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 63,886பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,026பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 409பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 46பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 649பேர் பாதிப்படைந்ததோடு, 8,346பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 29,280பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 63,003பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,990பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸின் (கொவிட்-19) பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தடமறிதல் கண்காணிப்பு பயன்பாடு அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தச் செயலியை பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார். அத்துடன், குறித்த செயலியை பயன்படுத்தும் பொதுமக்களின் இரகசியத் தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார். வைரஸுக்கு நேர்மறையானதை சோதிக்கும் எவருடைய சமீபத்திய தொடர்புகளையும் விரைவாகக் கண்டுபிடிப்பதை இந்த பயன்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ சட்ட அமுலாக்க வரலாற்றில் மிகப்பெரிய ஃபெண்டானைல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் தொடர்ச்சியான சோதனைகளால் 120,000இற்க்கும் மேற்பட்ட ஃபெண்டானைல் மாத்திரைகள் மற்றும் 70 கிலோகிராம் தூள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மூன்று ஆண்கள் காவலில் எடுத்து பின்னர் அவர்கள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். கட்டுப்படுத்தப்பட்ட பொருளை உற்பத்தி செய்தல், கட்டுப்படுத்தப்பட்ட பொருளை கடத்தல் மற்றும் குற்றத்தால் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது. இதன்படி, அங்கு 1 இலட்சத்து 220பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 367பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 46பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 8,300பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 29,424பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு,Read More →

Reading Time: < 1 minute புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், தனது இனவெறி குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பிளாக் கியூபெகோயிஸ் தலைவர் யவ்ஸ் ஃபிராங்கோயிஸ் பிளான்செட் கூறியுள்ளார். மேலும், இந்திய வம்சாவளியான ஜக்மீத் சிங், மன்னிப்பு கேட்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்கநேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, ஜக்மீத் சிங் இதற்காக, மன்னிப்பு கேட்பார் என்று நம்புவதாகவும் பிளான்செட் தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையில் அமைப்பு வடிவ இனவெறி தொடர்பில்Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) பயணத் தடையை மீறி 7,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினவர்கள் நாட்டிற்குள் நுழைய முற்பட்டதாக, கனேடிய எல்லை முகவரகம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் எனவும் அனைவரும் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை காரணமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் பார்வையிடல், பொருள் வாங்கல் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக கனடாவுக்குள் நுழைய முயற்சித்ததாக கூறப்படுகின்றது. கடந்த மார்ச் 22ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மிக்கின்றது. இதன்படி, அங்கு 99 ஆயிரத்து 853பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 386பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 41பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 8,254பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 29,582பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு,Read More →