Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய வைரஸ் தொற்றினால் 501பேர் பாதிப்படைந்ததோடு, 27பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 4,722ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 642பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27,783பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 68,347பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,110பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minute மத்திய கனடாவில் வெப்ப அலையுடன் வார இறுதியை நகர்த்த வேண்டியிருக்குமென சுற்றுச்சூழல் திணைக்களம் பொதுமக்களை எச்சரிக்கிறது. தெற்கு மானிடோபா மற்றும் ஒன்றாரியோவின் பெரும்பகுதிக்கு வெப்ப எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏழு நாட்களுக்கு மேல் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவுக்கான வெப்ப எச்சரிக்கை அடுத்த சில நாட்களுக்கு ஒரே இரவில் வெப்பநிலை குறைந்தது 20 டிகிரி இருக்கும் என்று குறிப்பிடுகிறது. மேற்கு கனடாRead More →

Reading Time: < 1 minute நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கனடாவில் ஒரு பெரிய பசுமைக்குடில் பண்ணை, மூடப்பட்டுள்ளது. வார இறுதியில் மூடப்பட்ட குறித்த பண்ணையில் கிட்டத்தட்ட 200பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. லீமிங்டனில் உள்ள நேச்சர் ஃப்ரெஷ் நிறுவனம், சுமார் 360 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 670 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. விண்ட்சர் எசெக்ஸ் கவுண்டி சுகாதார பிரிவினால் குறித்த பண்ணை மூடப்பட்டுள்ளதாக விண்ட்சர் ஸ்டார் செய்தித்தாள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, முதல் முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய வைரஸ் தொற்றினால் 67பேர் பாதிப்படைந்ததோடு, 24பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய கடந்த மார்ச் 14ஆம் திகதிக்கு (54 தொற்றுகள்) பிறகு, முதல் முறையாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ்Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய் முடக்கநிலை காரணமாக, ஏப்ரல் மாதத்தில் கனடிய பொருளாதாரம் மிகப் பெரிய மாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.6 சதவீதம் சரிந்துள்ளதாக, நிதிச் சந்தை தரவு நிறுவனமான ரெஃபினிட்டிவ் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 7.5 சதவீதம் சரிவைத் தொடர்ந்து அத்தியாவசியமற்ற வணிகங்கள் முழு மாதமும் மூடப்பட்டுள்ளன. இதேவேளை,இருப்பினும், புள்ளிவிபர கனடா அதன் ஆரம்ப ஃபிளாஷ் மதிப்பீடுRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் கொவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்காக, உட்புற பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த துணைச் சட்டம் எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலையதிர் கால முதல் நகர சபைக் கூட்டம் வரை இது நடைமுறையில் இருக்கும். இது தற்போது ஒக்டோபர் 1ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், முகக்கவசம் அணிவதைத் தடுக்கும் மருத்துவ நிலை உள்ள எவருக்கும்Read More →

Reading Time: < 1 minute கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு பயணிகள் கனடாவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து பயணங்களும் விதிக்கப்பட்ட தடையும் நீடிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களுக்காக அமெரிக்காவிலிருந்து வருபவர்களுக்கு மாத்திரம் விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் அதேசமயம் கனடாவில் சிக்கியுள்ள மற்ற நாட்டவர்களை அழைத்துச் செல்ல வரும் சிறப்பு விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால் 668பேர் பாதிப்படைந்ததோடு, 44பேர் உயிரிழந்துள்ளனர். அண்மைய தினங்களாக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைவாகவே பதிவாகிவந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 3,918பேர் பாதிப்படைந்ததோடு, 8,566பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 28,174பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 67,178பேர் பூரண குணமடைந்துRead More →

Reading Time: < 1 minute கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாதிருத்தலை தவிர்ப்பதற்காக, கனடிய பொழுதுபோக்கு நிறுவனமான சர்க்யூ டு சோலைல் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்ட பின்னர் 3,500பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளது. சுறுசுறுப்பான சாகசங்களுக்கு மிகவும் பிரபலமான இந்த குழு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடக்கநிலையால், நிகழ்ச்சிகளை இரத்துசெய்து அதன் கலைஞர்களை பணிநீக்கம் செய்ய நிர்பந்தித்ததாகக் கூறியது. சர்க்யூ டு சோலைல் நிறுவனம், 95 சதவீதமான ஊழியர்களை விலக்கி மறுசீரமைக்க முயற்சி செய்யவுள்ளது. ஏற்கனவே மார்ச் மாதத்தில்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவின் கிங்ஸ்டனில் உள்ள அனைத்து உட்புற பொது இடங்களிலும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேயர் பிரையன் பேட்டர்சன் மற்றும் சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கீரன் மூர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மளிகைக் கடைகள், சில்லறை கடைகள், உணவகங்கள், சிகை மற்றும் நக அலங்கார நிலையங்கள், அத்துடன் சமூக மையங்கள், வழிபாட்டு இல்லங்கள், நூலகங்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் வாடகை கார்களுக்குள் செல்லRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால் 218பேர் பாதிப்படைந்ததோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய கடந்த மூன்று தினங்களாகவே ஒற்றை இலக்க உயிரிழப்பே கனடாவில் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 3,250பேர் பாதிப்படைந்ததோடு, 8,522பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கடந்த ஒரு மாதகாலமாக கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரோடர் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான எவரும் அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புதிய நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்பட்டவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மாகாணத்தில் இருந்தியாக அறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளி மே 28 அன்று அடையாளம் காணப்பட்டார் என்றும் இது நாட்டிற்கு வெளியில் இருந்து பயணம் செய்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.Read More →