Reading Time: < 1 minute

உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊடாக கனடாவிற்கு வருகை தந்துள்ளனர்.

ரஸ்யாவினால் போர் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் உக்ரைன் பிரஜைகள் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சுமார் 306 உக்ரைன் பிரஜைகள் விசேட விமானம் ஒன்றின் மூலம் கனடாவின் மென்ட்ரயல் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஏற்கனவே உக்ரைன் ஏதிலிகளுடன் விமானமொன்று கனடாவிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ஏதிலிகளை தாங்கிய மற்றுமொரு விமானம் எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் திகதி கனடாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்று விமானங்களின் மூலம் சுமார் 900 உக்ரைன் ஏதிலிகள் கனடாவிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.