Reading Time: < 1 minute

சென். கிளாயர் தெற்கு பகுதியில், சுமார் 800 ரொறன்ரோ ஹைட்ரோ வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த தடை இன்று நள்ளிரவு வரையில் நீடிக்கக்கூடும் என்றும் ரொறன்ரோ ஹைட்ரோ நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சென். கிளாயர் தென் மேற்கிலிருந்து பிளட் வீதி வரையிலுமான பகுதிகள், மற்றும் டப்பரின் வீதி கிழக்கிலிருந்து பாத்ரூஸ்ட் வரையிலுமான பகுதிகள் இந்த மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலக்கீழ் விநியோக வழியில் உள்ள சாதனம் ஒன்றில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக ரொறன்ரோ ஹைட்ரோ தெரிவித்துள்ளது.

திருத்த வேலைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எனினும் பணியாளர்கள் திருத்த வேலைகளில் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும், நிலத்திற்கு கீழே மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த திருத்த வேலைகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.