Reading Time: < 1 minute அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள நோவாவாக்ஸ் (Novavax) தடுப்பூசி கொரோனா வைரஸூக்கு எதிராக 89.3 வீதமான செயல் திறனை நிரூபித்துள்ளதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகளையும் இந்தத் தடுப்பூசி எதிர்ப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை வரவேற்றுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், நோவாவாக்ஸ் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து பிரிட்டனின் மருந்து நெறிமுறை ஆணையம் மதிப்பிடும் என கூறியுள்ளார். 60 மில்லியன் நோவாவாக்ஸ் தடுப்பூசிகளைப்Read More →

Reading Time: < 1 minute கனடா – யூகோன் பிரதேசத்தில் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதான பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியை ஏமாற்றிப் பெற்றுக்கொண்ட செல்வந்த தம்பதியர் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். சூதாட்ட மையம் ஒன்றின் நிர்வாக அதிகாரியான ரோட்னி பேக்கர் மற்றும் அவரது மனைவி எகடெரினா பேக்கர் ஆகியோர் யூகோன் பிரதேசத்திற்கு வாடகை விமானம் ஒன்றை அமர்திச் சென்றுள்ளனர். அங்கு தம்மை முன்களப் பணியாளர்கள் எனத் தெரிவித்து கொரோனா தடுப்பூசியை அவர்கள் பெற்றுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடா எதிர்பார்த்ததை விட இலட்சக்கணக்கான அளவு குறைந்த பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளையே மார்ச் மாதத்துக்கு பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் மாத இறுதிக்குள் கனடா நான்கு மில்லியன் பைசரின் தடுப்பூசிகளைப் பெற முடியும் என அரசாங்கம் உறுதியளித்தது. எனினும் பல மாகாண முதல்வர்களிடம் இருந்து வெளியான தகவல்களின் பிரகாரம் 3.5 மில்லியன் தடுப்பூசிகளையே கனடா மார்ச்சுக்குள் பெறும் என தெரியவருகிறது. பைசர் தனது தடுப்பூசி ஏற்றுமதியை மட்டுப்படுத்தியுள்ளதால்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 876பேர் பாதிக்கப்பட்டதோடு 131பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 66ஆயிரத்து 103பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 19ஆயிரத்து 664பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 57ஆயிரத்து 020பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 848பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute 28.5 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான மெத்தாம்பேட்டமைனைக் கைப்பற்றியுள்ளதாக கனடா எல்லை சேவைகள் தெரிவித்துள்ளது. கனேடிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, லொரி அல்பர்ட்டா எல்லைக் கடக்கும் கவுட்ஸ் என்ற இடத்தில் நாட்டிற்குள் நுழைய முயன்ற போது, சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் 228.14 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைமருந்துகளின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 28.5 மில்லியன் டொலர்கள். இது கனடா முழுவதும் பதிவுசெய்யப்பட்ட நில எல்லைக் கடப்புகளில் சிபிஎஸ்ஏவின் மிகப்பெரிய மெத்தாம்பேட்டமைன்Read More →

Reading Time: < 1 minute ஊர்வன மற்றும் நிலநீர் வாழ் விலங்குகளை விற்பனை செய்வதை முற்றிலுமாக நிறுத்துமாறு பெட்ஸ்மார்ட்டுக்கு (Pet Smart) உலக விலங்குப் பாதுகாப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பல பில்லியன் டொலர்களை ஈட்டி தரும் தொழில் இதுவென்பது என்ற போதிலும் இது பொது பாதுகாப்புக்கு ஆபத்து என உலக விலங்குப் பாதுகாப்பு தெரிவித்துள்ளது. ஒன்றாரியோ பெட்ஸ்மார்ட்டில், ஒரு கண்ணாடி பெட்டிக்குள் ஒரு பந்து மலைப்பாம்பு இருப்பது போன்ற புகைப்படம் வெளியானதையடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute ஒண்டாரியோ அரசாங்கம் குறைந்த மின் கட்டண முறையை தொடர்ந்து நீடிக்க முடிவு எடுத்துள்ளது. இந்த குறைந்த மின் கட்டண வசதி ஜனவரி 28ம் திகதி அதாவது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அதனை மீண்டும் நீடிக்க ஒண்டாரியோ மாகாண அரசு முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் ஒரு மணித்தியால மின்சார உபயோக கட்டணமாக 8.5 சதம் மணித்தியாலயத்துக்கு Feb 09ம் திகதி வரை அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேடRead More →

Reading Time: < 1 minute ஒண்டாரியோ மாகாணம் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது Covid -19 மருத்துவ சோதனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. கனேடிய மத்திய அரசாங்கம் எல்லைப்பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்துவதில் உள்ள காலதாமதமும் Covid -19 தடுப்பூசிகளின் பற்றாக்குறை மற்றும் London U.K மாற்று வைரஸின் தொற்றுப்பரவல் அதிகரிப்புமே மாகாண அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு காரணம் என தெரிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute நேற்று முன்தினம் Burlington பகுதி QEW பெரும்தெருவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு 20 வயது பெண்கள் கொல்லப்பட்டனர். நேற்று காலை 6 மணியளவில் QEW பெருந்தெருவின் கிழக்கு பக்கமாக உள்ள Brant தெருவில் நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளானது என OPP அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்ட இருவரும் ஒரே வாகனத்தில் மேற்கு திசை நோக்கி பயணித்து கொண்டிருந்ததாகவும் பாதையில் இருந்து விலகி கிழக்கு திசையில் பயணித்துக்கொண்டிருந்த கார் மற்றும் pickRead More →

Reading Time: < 1 minute பிராம்ப்டன் நகரசபை வளாகத்தில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்படுவதற்கான முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. Brampton நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை பிராந்திய உறுப்பினர் Martin Medeiros கடந்த வாரம் முன்வைத்திருந்தார். இந்த முன்மொழிவு ஏகமனதாக நகரசபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த நினைவுத் தூபியின் பெயரை தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி என மாற்றம் செய்யவேண்டும் என ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நேற்று (புதன்கிழமை ) நடைபெற்ற மெய்நிகர்Read More →

Reading Time: < 1 minute பிரதமர் லீ சியென் லூங் (சிங்கப்பூர்) தைப்பூசத் திருவிழாவை கொண்டாடுவோருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியைத் தமது சமூக ஊடகப் பக்கங்கள் வழி பிரதமர் லீ பகிர்ந்து கொண்டார். இன்று தைப்பூசத் திருவிழா, வீரத்தையும் இளமையையும் குறிக்கும் கடவுளான முருகனைக் கொண்டாடும் நாள். பொதுவாகத் தைப்பூசத்தின் போது கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பால் குடங்களையும், வண்ண வண்ணக் காவடிகளையும் பக்தர்கள் எடுத்துச் செல்வது வழக்கம். தற்போது COVID-19Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 205பேர் பாதிக்கப்பட்டதோடு 130பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 61ஆயிரத்து 227பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 19ஆயிரத்து 533பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 57ஆயிரத்து 743பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 872பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →