Reading Time: < 1 minute கனடாவில், விமான நிலையத்தின் அருகில் சிறிய ரக விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொன்றியலின் (Montreal) மேற்கும் பகுதியில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. Cessna-150 என்ற இரண்டு இருக்கைகளைக் கொண்ட சிறிய ரக விமானம் அங்கிருந்த விமான நிலையம் அருகில் பறந்துசென்றபோது திடீரென கீழே விழுந்து நொருங்கியது. இதில் விமானத்தில் இருந்த 20Read More →

Reading Time: < 1 minute பிராண்ட்ஃபோர்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, கனடா முழுவதும் கைது உத்தரவு கொண்டுள்ள நிலையான முகவரி இல்லாத 32 வயதான ஜேமி ட்ரைடன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஹாமில்டனில் உள்ள அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு பெண்ணை கேடயமாகப் பயன்படுத்தியதாகவும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிகவும் ஆபத்தானவர் என கருதப்பட்ட இவர், இரண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மக்கள் வீதத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நகரமாக லண்டன் மாறியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2018-19ஆம் ஆண்டில் லண்டனின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 2.3 சதவீதமாக உள்ளது. கனடாவில் கிச்சனர்-வாட்டர்லூவுக்கு 2.8 சதவீதமாக உள்ளது. லண்டனின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பெருநகரப் பகுதியின் மக்கள் தொகை 2019ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி 545,441 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இது அரை மில்லியன் மக்களைத் தொட்டுவிட்டது. இந்த அபரீதRead More →

Reading Time: < 1 minute கடந்த இலையுதிர்காலத்தில் கேம்ரோஸ் அருகே இடம்பெற்ற சிறிய தனியார் விமான விபத்து குறித்து, கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு சபை (டி.எஸ்.பி.) அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த விமானம் ஸ்தம்பித்து மின் இணைப்புகளைத் தாக்கியதாக, போக்குவரத்து பாதுகாப்பு சபை (டி.எஸ்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், ‘என்ஜின், ப்ரொபல்லர் மற்றும் விமானக் கருவிகளின் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன, அவை இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் எந்த தோல்விகளையும் காட்டவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute லண்டன் நகரின் கிழக்கு முனையில் பிரான்சிஸ் வீதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 60 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு லண்டன் பகுதியிலுள்ள 1031 ஃபிரான்சஸ் செயின்ட் வீதியிலுள்ள சொந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை காலை 9:47 மணியளவில், குறித்த வீட்டில் தீ பரவியதாக லண்டன் தீயணைப்புத் துறை படைப்பிரிவுக்கு அவசர அழைப்புRead More →

Reading Time: < 1 minute வடக்கு யோர்க் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் கொள்ளையடித்த நபரை கண்டுபிடிக்க பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கீல் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ தெற்கு பகுதியில் உள்ள கட்டிடத்தின் முற்பகுதியில், மதியம் 2 மணியளவில் நுழைந்த குறித்த இனந்தெரியாத நபர், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த 87 வயது பெண்ணை கீழே விழுத்திவிட்டு வீட்டிலுள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். முன் கதவு வழியாக அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்வதற்கு முன்னர்Read More →

Reading Time: < 1 minute பாடசாலை பேருந்துகளில் ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்த திட்டமொன்றை, கனடாவின் போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ முன்வைத்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஆசனப் பட்டியை கொண்ட பேருந்துகள், சட்பெரி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அரிதான ஆனால் தீவிரமான பாடசாலை பேருந்து மோதல்களில் ஆசனப் பட்டியை அணிவதன் மூலம், கூடுதல் பாதுகாப்பை வழங்க முடியும் என்பதை பணிக்குழு அறிக்கை உறுதிப்படுத்துகிறது. சரியானRead More →

Reading Time: < 1 minute விண்ட்சரில் பெண் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களை, திறமையான வர்த்தக வேலைகளுக்கு ஈர்க்கும் நோக்கில் புதிய திட்டமொன்றினை, மத்திய தொழிலாளர் அமைச்சர் பிலோமினா டாஸ்ஸி அறிவித்துள்ளார். கூட்டாட்சி திறமையான வர்த்தக விழிப்புணர்வு மற்றும் தயார்நிலை திட்டத்தின் ஒரு பகுதியான இத்திட்டத்திற்கு, 728,000 அமெரிக்க டொலர்களை மத்திய அரசு முதலீடு செய்யவுள்ளது. இதுகுறித்து மத்திய தொழிலாளர் அமைச்சர் பிலோமினா டாஸ்ஸி கூறுகையில், ‘பில்ட் எ ட்ரீம் உடனான இந்த திட்டத்திற்கு எங்கள் அரசாங்கத்தின்Read More →

Reading Time: < 1 minute ஒரு வருடமாக காணாமல் போன ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க வின்னிபெக் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோருகின்றனர். சிந்தியா பாரிசியன் என்ற பெண்னே இவ்வாறு காணமல் போயுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி வின்னிபெக்கில் 845 லீலா அவென்யூவில் உள்ள ஹோம் டிப்போவில் அவர் இறுதியாக காணப்பட்டுள்ளார். பாரிசியன், ஐந்து அடி மூன்று அங்குல உயரம் கொண்டவரெனவும், சற்று பருமனான தோற்றம், பழுப்பு நிற முடி மற்றும் பழுப்புRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் காரணமாக, சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து திரும்பும் அனைவரும் நீண்ட காலத்திற்கு சுய கண்காணிப்பு செய்ய வேண்டும் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. அதேபோல, சீன மாகாணமான ஹூபேயில் இருந்து திரும்பும் எவரும் இரண்டு வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் பொது சுகாதார நிறுவனம் கூறுகின்றது. இதேவேளை, இந்த வாரம் பதினைந்து பேரிடம், மனிடோபாவில் உள்ள கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கும்Read More →

Reading Time: < 1 minute கடந்த இரண்டு ஆண்டுகளில் 144,000 கனடியர்களுக்கு சொந்தமான தனிப்பட்ட தகவல்களை, கூட்டாட்சி துறைகள் அல்லது முகவர் நிலையங்கள் தவறாக கையாண்டுள்ளன ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் இல் தாக்கல் செய்யப்பட்ட புதிய புள்ளிவிபரங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டீன் அலிசன் கடந்த மாதம் பிற்பகுதியில் தாக்கல் செய்த உத்தரவு காகித கேள்விக்கு, மத்திய அரசு அளித்த பதிலில் புதிய புள்ளிவிபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம்Read More →

Reading Time: < 1 minute இரகசிய முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் (கிளியர்வியூ ஏஐ) பயன்படுத்தியதாக ரொறன்ரோ பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சில பொலிஸ் அதிகாரிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதாக செய்தித் தொடர்பாளர் மீகன் கிரே ஒரு மின்னஞ்சலில், குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த முறைமை எதற்காக அல்லது எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்று அவர் தெளிவுப்படுத்தவில்லை. சக்திவாய்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய முக அங்கீகார தொழில்நுட்பமான (கிளியர்வியூ ஏஐ), இணையத்திலிருந்து பில்லியன் கணக்கான படங்களைRead More →