Reading Time: < 1 minute

கடந்த இரண்டு ஆண்டுகளில் 144,000 கனடியர்களுக்கு சொந்தமான தனிப்பட்ட தகவல்களை, கூட்டாட்சி துறைகள் அல்லது முகவர் நிலையங்கள் தவறாக கையாண்டுள்ளன

Tamil Business Directory

ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் இல் தாக்கல் செய்யப்பட்ட புதிய புள்ளிவிபரங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டீன் அலிசன் கடந்த மாதம் பிற்பகுதியில் தாக்கல் செய்த உத்தரவு காகித கேள்விக்கு, மத்திய அரசு அளித்த பதிலில் புதிய புள்ளிவிபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதிக்கு இடையில் 3,005 இற்க்கும் மேற்பட்ட தனித்தனி சம்பவங்கள் 60,000 கனேடியர்களை பாதித்துள்ளன.

இதேவேளை, கனடா வருவாய் நிறுவனம், மீறல்களில் முன்னணியில் உள்ளது. தவறாக வழிநடத்தப்பட்ட அஞ்சல், பாதுகாப்பு சம்பவங்கள் மற்றும் ஊழியர்களின் தவறான நடத்தை ஆகியவற்றின் மீறல்களை திணைக்களம் குற்றம் சாட்டுகிறது.