Reading Time: < 1 minute கனடாவில் தன் பேத்தியை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்ற இந்தியர் ஒருவர் 17 முறை கத்தியால் குத்தப்பட்ட விடயம், அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. கனடாவின் கிரேட்டர் ரொரன்றோ ஏரியாவில் வாழ்ந்துவந்த தனது மகன் குடும்பத்தைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து வந்துள்ளார் திலீப் குமார் ( Dilip Kumar Dholani, 66). அஹமதாபாதைச் சேர்ந்த திலீப் குமார், தன் மகனுடைய குழந்தையான தனது ஒன்றரை வயது பேத்தியுடன்Read More →

Reading Time: < 1 minute கனடிய மக்கள் உளவியல் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவான கோபம், அதிருப்தியான மன நிலை மற்றும் மன உளைச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளினால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் சில மாகாணங்களிலும் நிலவிவரும் காட்டுத்தீ அனர்த்தம், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் மக்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணர்வு ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சில அழுத்தங்களை மக்களினால் தாங்கிக்Read More →

Reading Time: < 1 minute றொரான்டோவில் சாரதிகள் வருடமொன்றுக்கு சுமார் 199 மணித்தியாலங்கள் வீதியில் காத்திருக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. போக்குவரத்து நெரிசல்களினால் இவ்வாறு காத்திருக்க நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதிய கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் கார் ரென்டல் என்னும் நிறுவனத்தினால் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் நிலை காணப்படும் உலக நகரங்களின் வரிசையில் றொரன்டோ 13ம் இடத்தை வகிக்கின்றது. அதிகபட்ச போக்குவரத்து நெரிசல்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் களவாட சென்ற சந்தேக நபர் ஒருவர் தனது காற்சட்டை மற்றும் பாதணிகள் என்பனவற்றை இழந்து வீதியில் ஓடிய வினோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஆபரண கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Azalea Avenue மற்றும் Burkholder Drive ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. ஆபரணங்கள் பலவந்தமாக அபகரிப்புஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதுRead More →

Reading Time: < 1 minute பிரித்தானியர்கள் உட்பட பல பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் TomRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரதான வீதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட குழியினால் சாரதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கனடாவின் மிஸ்ஸசாக பகுதியைச் சேர்ந்த சாரதி ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். கனடாவின் தென் மேற்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள பாதை ஒன்றில் ஏற்பட்ட குழி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பாதையில் பாரிய ட்ரக் வண்டி ஒன்றை செலுத்திச் சென்ற குறித்த சாரதி திடீரென குழியில் வாகனம் வீழ்ந்த காரணத்தினால் உயிரிழந்துள்ளார். 59 வயதானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் சுமார் 3.3 தொன் எடையுடைய சட்டவிரோத மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் இரண்டு மாத காலப்பகுதியில் இவ்வாறு பாரிய அளவில் சட்டவிரோத மருந்து பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய எல்லை சேவை முகவர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனேகமான சட்டவிரோத மருந்து பொருட்கள் ஆசியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆசியRead More →

Reading Time: < 1 minute முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஒன்றாரியோ அரசாங்கத்தின் பசுமை பகுதி வீடமைப்பு திட்டம் தொடர்பில் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த வீடமைப்பு திட்டத்தின் போது ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாண வீடமைப்பு அமைச்சின் பிரதம அதிகாரி ரயன் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குறிப்பாக வீடமைப்பு திட்டத்திற்கான கட்டுமான நிறுவனங்களைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற இந்தியர் ஒருவர் இந்தியா வந்த நிலையில், அவரை ட்ராக் செய்த பொலிசார் டெல்லியில் அவர் தங்கியிருந்த இடத்தில் வைத்து அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ராகுல் (Rahul Gangal). ராகுல், 2019ஆம் ஆண்டு கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளார். அவரது மனைவியும் பிள்ளைகளும் கனேடிய குடிமக்கள். ரொரன்றோவில் வாழ்ந்து வரும் ராகுல், ஜேர்மன் நிறுவனம் ஒன்றில்Read More →

Reading Time: < 1 minute போலியான கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்வதற்கு முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் நேற்றைய தினம் (24.08.2023) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் எனத் தகவலறியப்பட்டுள்ளது. இவர் பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இவரது கனேடிய விசா தொடர்பில் சந்தேகமடைந்தRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. பல மாதங்களாக தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைவடைந்து சென்ற நிலையில் மீண்டும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுகளிலும் இவ்வாறு பருவ மாற்றங்களின் போது கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு பதிவாகி இருந்தது என தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது ஈஜி5 என்னும் ஒமிக்ரோன் திரிபு வகை ஒன்று அதிக அளவு பரவி வருவதாகவும் இது வீரியமான ஓர் கோவிட்Read More →

Reading Time: < 1 minute ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த ஷிவானி (Shivani Sharma, 29), கனடாவில் உயர் கல்வி கற்று, நல்ல ஒரு வேலையில் அமர்ந்து, தன் கணவரையும் குழந்தையையும் கனடாவுக்கு அழைத்துக்கொள்ளும் ஆசையில், கனேடிய கல்லூரி ஒன்றிற்கு விண்ணப்பித்துள்ளார். அவர் விண்ணப்பித்தது Vancouver Community College (VCC) என்னும் கல்லூரிக்கு. ஆனால், Anil Kumar Sharma என்னும் இந்திய ஏஜண்ட், ஷிவானியை வான்கூவரிலுள்ள Granville College என்னும் கல்லூரியில் சேருமாறு அறிவுறுத்தியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வேகமாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் அந்நாட்டு பிரதி பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா பரிலாண்டுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தமக்கு சொந்தமாக ஒரு கார் இல்லை என ஃப்ரீ லேண்ட் தெரிவித்துள்ளார். 273 டாலர்கள் அபராதம்வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அல்பர்ட்டா மாகாண அதிகாரிகள் ப்ரீலாண்டுக்கு 273 டாலர்கள் அபராதம் விதித்துள்ளனர். மணிக்கு 132 கிலோ மீட்டர் வேகத்தில காரை செலுத்தியதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் இந்த இருவரையும் கைது செய்துள்ளது. போலியாக தயாரிக்கப்பட்ட கனடிய நிரந்தர பதிவிட அட்டைகளுடன் குறித்த நபர்களிடம் சமூக காப்புறுதி அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. பெருந்தொகை அட்டைகள் இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் துறைமுக நுழைவாயில் இந்த இருவரையும் எல்லை பாதுகாப்பு பிரிவினர் கைது இந்த சந்தேக நபர்களிடமிருந்து பல்வேறு போலி ஆவணங்கள்Read More →