Reading Time: < 1 minute கனடாவின் வைத்தியசாலைகளில் நோயாளிகள் குவியத் தொடங்கியுள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சளிக்காய்ச்சல் காரணமாக இவ்வாறு நோயாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. மாகாண வைத்தியசாலைகளில் இவ்வாறு நோயாளர் எண்ணிக்கை குவியத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வைத்தியசாலைகளில் வழமையாக மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகளை ரத்து செய்ய நேரிட்டுள்ளது. தங்களது பிள்ளைகள் வைத்தியசாலைகளில் காத்திருக்க நேரிட்டுள்ளமை குறித்து பெற்றோர் கவலை கொண்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ஏட்ரியன் டிக்ஸ் தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைக்கு சத்திரRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஆறு பெண்களில் ஒருவர் கருக்கலைப்பு செய்துள்ளார் என ஒரு புதிய Angus Reid கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது. கருக்கலைப்பு செய்த பல்லாயிரக்கணக்கான கனேடிய பெண்களில், பெரும்பான்மையானவர்கள் இது சரியான முடிவு என்றும் வருத்தம் இல்லை என்றும் கூறுகின்றனர். மேலும் கன்சர்வேடிவ் வாக்காளர்கள் தான் தங்கள் கடந்த காலத்தில் கருக்கலைப்பு செய்திருக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகின்றது. கருத்துக்கணிப்புக்கு பதிலளித்த பதினாறு சதவீத பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஆல்பர்டா பகுதியில், தப்பியோடி தப்பியோடி சாலையில் சுற்றித்திரிந்த 20 நெருப்புக் கோழிகளை பொலிசார், வாகனத்தில் துரத்திப் பிடிக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் 20 நெருப்புக்கோழிகள் வளர்ப்பிடத்தில் இருந்து தப்பித்து, சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற பொலிசார், தப்பியோடிய நெருப்புக்கோழிகளை பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். ஒரு நெருப்புக்கோழி சாலையில் வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.Read More →

Reading Time: < 1 minute கொரோனா பரவல் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான கனேடிய மக்கள் முதல்முறையாக மன அழுத்தத்தில் அவதிப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடாவில் 50 வயதுக்கும் மேற்பட்ட மக்களில் சுமார் 20,000 பேர்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் தொடர்புடைய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மக்களில் முந்தைய மனநலப் பிரச்சினைகள் எதுவும் இல்லாத போதும் மனச்சோர்வின் பரவலான அறிகுறிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. உளவியல் பாதிப்பு ஏதுமற்ற முதியவர்களை பெருந்தொற்று காலம் மிகவும் பாதித்துள்ளதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் 83 வயதான மூதாட்டி ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் மாபெரும் பரிசுத் தொகையை வென்றெடுத்துள்ளார். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த மூதாட்டி 60 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளார். கிழக்கு ஒன்றாரியோவின் வென்கிலிக்ஹில்லைச் சேர்ந்த வெரா பேஜ் என்ற 83 வயதான பெண்ணே இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார். லொத்தர் சீட்டிலுப்பில் பணப்பரிசு வென்றெடுத்தமை குறித்து குடும்பத்தாருக்கு அறிவித்த போதிலும் அவர்கள் அதனை நம்பவில்லை என மூதாட்டி தெரிவித்துள்ளார். மகனுக்கும்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் 1.5 மில்லியன் மக்கள் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாக புதிதாக வெளியான தரவுகளில் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கையும் கனடாவில் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் புற்றுநோய் சமூகம் என்ற அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய தரவுகளில் குறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளின் மொத்த தரவுகளும் இதனால் வெளிவந்துள்ளது. கனடாவில் இதுபோன்ற ஒரு நீண்ட காலத்தின் அடிப்படையிலான தரவுகள் வெளியாவதுRead More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவின் கிழக்கு பீற்றர்பரோ பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நால்வர் கொண்ட ஒரு குடும்பம் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் தாய், தந்தை மற்றும் மகன் மரணமடைந்துள்ள நிலையில், அவர்களது மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், செவ்வாய்க்கிழமை டிரம்மண்ட் லைன் அருகே நெடுஞ்சாலை 7 இல் மாலை 5:15 மணியளவில் குறித்த விபத்து நடந்துள்ளது. இதில், எஸ்யூவி மற்றும் பிக்-அப்Read More →

Reading Time: < 1 minute பணவீக்கத்துக்கு எதிராக போராடுவதற்காகவும், நாட்டின் தொழிலாளர் சந்தையில் காணப்படும் பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காகவும் புலம்பெயர்தலைப் பயன்படுத்திக்கொள்வது எப்படி என்பது குறித்து கனடா வங்கி ஆளுநரான Tiff Macklem சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். கனடா வங்கி ஆளுநரின் உரையில் இடம்பெற்ற கேள்விகள்ஏன் போதுமான பணியாளர்கள் கிடைக்கவில்லை? கனடா பொருளாதார மந்தநிலையை நோக்கிச் செல்கிறதா? பொருளாதார மந்தநிலையால் வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரிக்குமா? இந்த பிரச்சினைகள் விடயத்தில் உதவுவதில் கனடா வங்கியின் பங்கு என்ன? தொழிலாளர்Read More →

Reading Time: < 1 minute எதிர்வரும் 2025ம் ஆண்டளவில் கனடாவில் சுமார் ஐந்து லட்சம் குடியேறிகளை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் ஐந்து லட்சம் குடியேறிகளை குடியேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏதிலிகள் மற்றும் குடியேற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடாவில் நிலவி வரும் கடுமையான ஆளணி வளப் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் தொழில் தகமையுடைய வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு கூடுதல் அளவில் வதிவிட அந்தஸ்து வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.’ ஏதிலிகளுக்கு சந்தர்ப்பம்Read More →

Reading Time: < 1 minute வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றபோது படகு பழுதடைந்ததால் இலங்கையர்கள் 303 வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத பயணம் இந்நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த நபர் யாழ்ப்பாணம் – சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 8ஆம்Read More →

Reading Time: < 1 minute ஜெருசலேமில் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் இரட்டை குண்டுவெடிப்பில் கனேடிய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனியர்கள் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் இது என பொலிசார் சந்தேகிக்கப்படும் இச்சம்பவத்தில் 22 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். முதல் குண்டுவெடிப்பு நகரின் எல்லையில் நெரிசலான பேருந்து நிறுத்தம் அருகே ஏற்பட்டது. இரண்டாவது குண்டுவெடிப்பு அரை மணி நேரம் கழித்து ரமோட் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கனேடிய குடிமகனான 15 வயது Shechopek சிக்கியுள்ளதுடன்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமஸ்டி தேர்தலின் போது சீனா தலையீடு செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என கனேடிய பிரதம தேர்தல் அதிகாரி ஸ்டீபன் பெராலெட் (Stéphane Perrault ) தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின் போது சீன அரசாங்கம் பல வழிகளில் தேர்தலில் தலையீடு செய்ததாகவும் 11 வேட்பாளர்களுக்கு நிதி உதவி வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்துRead More →