Reading Time: < 1 minute கனடாவில் வாகனமொன்றில் மோதுண்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரிச்மன்ட்ஹில்லின் மெகென்ஸீ மற்றும் யொங் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பெண் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 2009-2011 ஹொண்டா சிவிக் ரக கறுப்பு நிற வாகனமொன்று குறித்த பெண்ணைRead More →

Reading Time: < 1 minute கனேடிய சமஷ்டி அரசாங்கம் ஆடம்பர பொருட்களுக்கு புதிய வரி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆடம்பர கார்கள், ஆடம்பர தனியார் விமானங்கள், படகுகள் போன்றவற்றுக்கு இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட உள்ளது. இந்த மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த வரி அறவீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சமஷ்டி அசராங்கத்தின் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஆடம்பரப் பொருள் வரி குறித்து அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த ஆண்டு ஏப்ரல்Read More →

Reading Time: < 1 minute கனடிய சுகாதார அமைச்சு பெருந்தொகை கோவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது ஒமிக்ரோன் திரிபு மற்றும் அதன் உப திரிபுகளை கட்டுப்படுத்தக்கூடிய புதிய கோவிட் தடுப்பூசி ஒன்று இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இன்றைய தினம் சுமார் 8 லட்சம் மடர்னா கோவிட் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் என சுகாதார அமைச்சர் ஜியான் யுவிஎஸ் டக்ளஸ் தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் 10 தசம் ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்திய பணம் சம்பாதித்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இந்த இருவருக்கும் எதிராக பீல் பிராந்திய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இரண்டு வெவ்வேறு ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்பய்பட்டுள்ளனர். றொரன்டோ பெரும்பாக பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையில் தகாத தொழிலாளியாக கடமையாற்றும் பெண் ஒருவரைRead More →

Reading Time: < 1 minute விருது பெற்ற இந்திய கனேடிய திரைப்பட இயக்குநர் ஒருவர், கனடாவின் சர்ரேயில் கொல்லப்பட்டுள்ளார். மணி அமர் (Manbir (Mani) Amar, 40) என்று அழைக்கப்படும் அந்த இயக்குநர், அக்கம்பக்கத்தவர்களுக்குள் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக மட்டும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். மணி அமர் திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல, ஆசிய இளைஞர்கள் வன்முறை குழுக்களில் இணைந்து கெட்டுப்போவதற்கு எதிராக குரல் கொடுத்து வரும் சமூகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி ஒன்றாரியோவின் லின்ட்ஸே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தையுடன் இருந்த அவரது தந்தையுடன் பொலிஸார் மோதிய போது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 33 வயதான நபர் தனது மகனை கடத்தியதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் குரங்கம்மை தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க கண்டத்தின் வேறும் சில நாடுகளில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும், கனடாவில் இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிவதாக தெரிவித்துள்ளது. உலகின் மொத்த குரங்கம்மை தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளதாகவும், எனினும் கனடாவில் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் உலகRead More →