Reading Time: < 1 minute தைவானுக்குச் செல்ல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளார்கள். தைவானுக்குச் சென்றால் பயங்கர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீனா கனடாவை எச்சரித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிவாக்கில், வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் தைவானுக்குச் செல்ல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், தைவானுக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல திட்டமிட்டுள்ள விடயம் சீனாவை எரிச்சலூட்டியுள்ளது. எனவே, தைவான் விடயத்தில் தலையிட்டால், சீனா கனடா மீது பயங்கர நடவடிக்கைகள் எடுக்கும் எனRead More →

Reading Time: < 1 minute டொரன்டோ பெரும்பாக பகுதியில் டொரன்டோவில் அதிகூடிய வாடகை தொகை பதிவாகியுள்ளது,’ கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு டொரன்டோவின் வாடகை தொகை 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. டொரட்டோ பெரும்பாக வாடகை அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. டொரட்டோவின் வாடகை தொகை 2267 டாலர்கள் என பதிவாகியுள்ளது, இது கடந்த மாதத்தை விடவும் 155 டொலர்கள் கூடுதல் தொகை என்பதுடன் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தத்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில கைது செய்பய்பட்டுள்ளார். இரண்டாண்டு காலமாக பல்வேறு நபர்களை குறித்த நபர் ஏமாற்றியுள்ளார் என பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். வீடுகளை புனரமைத்துக் கொடுப்பதாக முற்பணம் பெற்றுக் கொண்டு குறித்த நபர் மக்களை ஏமாற்றியுள்ளார். மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 58 வயதான மெலின்டிஜே ஜொகோவிக் என்ற நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோ பெரும்பாக பகுதியில் பலRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தின் ஸ்டார்ட்போர்ட்டில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. பேர்த் வீதி 109க்கும் பேர்த் வீதி 110க்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விமான விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆண் ஒருவர் இந்த விமானத்தை செலுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது, எனினும் உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஸ்டார்ட்போர்ட் விமானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பொதுப் போக்குவரத்து சேவையான ரீ.ரீ.சீயில் டிக்கட் இன்றி பயணிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிக்கட் இன்றி பயணம் செய்வோருக்கு 425 டொலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கட் இன்றி பயணம் செய்பவர்களினால் வருடாந்தம் பல மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுவதாக ரீ.ரீ.சீ.யின் பேச்சாளர் ஸ்டுவர்ட் கிறீன் (Stuart Green) தெரிவித்துள்ளார். கட்டணம் செலுத்த தவறும் பயணிகளினால் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 70 மில்லியன் டொலர்கள் வருமான இழப்புRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இருந்து ஐரோப்பாவிற்கு நேரடியாக திரவ இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். ஜேர்மனி ஆட்சித் தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவரை நேற்று கியூபெக் – மொன்றியலில் ட்ரூடோ சந்தித்துப் பேசினார். தொடர்ந்து இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின்போதே ட்ரூடோ இவ்வாறு தெரிவித்தார். குறுகிய காலத்தில் திறன்களை அதிகரிப்பதன் மூலம் உலகளாவிய வலுசக்தி விநியோகத்திற்கு பங்களிக்க எங்களால்Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் 9 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய தங்கம் மற்றும் வெள்ளியை தொடர்புடைய வங்கியே வாங்க மறுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒன்ராறியோவை சேர்ந்த லிண்டா கேட்ஹவுஸ் என்பவர் கடந்த 2013ல் ஸ்கோடியவங்கியில் இருந்து வாங்கிய தங்கம் மற்றும் வெள்ளியையே தற்போது குறித்த வங்கி திரும்ப வாங்க மறுத்துள்ளது. வங்கியின் செயலால் அதிர்ச்சியில் இருந்து மீளாத குறித்த பெண்மணியிடம் தற்போது விலைமதிப்பற்ற உலோக வணிகத்தில் வங்கி ஈடுபடவில்லை எனவும், அடகு வியாபாரம்Read More →

Reading Time: < 1 minute ஸ்காப்ரோவில் கடந்த வாரம் கடத்தப்பட்ட பெண்ணை தேடிக் கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது. றொரன்டோ பொலிஸார் குறித்த பெண் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கில்ட்வுட் பார்க்வே மற்றும் கிங்ஸ்டன் வீதிக்கு அருகாமையில் நடந்து சென்றிருந்த வேளையில் நபர் ஒருவர் வாகனத்தில் குறித்த பெண்ணை வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணை வழி மறித்து கடத்திச் சென்றுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute இந்த சம்பவம் கட்டடமொன்றின் வரவேற்பறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. க்ளென் எவரஸ்ட் மற்றும் கிங்ஸ்டன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இருந்த நபரை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த கத்தி குத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம்பெற்று வரும் மோசடி சம்பவமொன்று குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சில நபர்கள் தீயனைப்புப் படையினர் என்ற போர்வயில் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். போலியான பாதுகாப்பு கருவிகள் (safety kits) விற்பனை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். கனடாவின் ஹால்டன் பகுதியில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹால்டனின் பர்லிங்டன் தீயனைப்புப் பிரிவினர் பாதுகாப்பு கருவிகளை விற்பனை செய்யவில்லை எனவும் மோசடி கும்பல் ஒன்று போலியாக விற்பனைRead More →

Reading Time: < 1 minute நாட்டில் கடந்த ஆண்டு ஜுலை மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. கடந்த மாதம் நாட்டின் பணவீக்க வீதம் 7.6 வீதமாக காணப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நாற்பது ஆண்டுகளில் பதிவான அதி கூடிய பணவீக்க வீதமாக 8.1 வீத பணவீக்கம் பதிவாகியிருந்தது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக ஓராண்டுக்கு முன்னர் இந்த பண வீக்கத்தை விடவும் குறைந்தளவு பணவீக்கம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 2021ல் மருத்துவ உதவியுடன் கருணைக் கொலைக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை பத்தாயிரம் தாண்டியுள்ளதாக பெடரல் ஆண்டு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 2020ல் இருந்து குறித்த எண்ணிக்கையானது 32% அதிகரித்துள்ளதாகவும் பெடரல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் 2021ல் பதிவான இறப்பில் 3.3 சதவீதம் (10.064) மருத்துவ ரீதியான கருணைக் கொலை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிராந்திய ரீதியாக கியூபெக்கில் 4.7% எனவும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 4.8% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →