Reading Time: < 1 minute வாடிக்கையாளர்கள் பயணிப்பதை எளிதாக்கும் நோக்கில் கொரோனா சுய பரிசோதனை திட்டத்தை ஏர் கனடா அறிமுகப்படுத்துகிறது. அதன்படி வெளிநாட்டில் இருந்து கனடாவுக்கு திரும்பும் பயணிகள் ஏர் கனடா விமானங்களில் பயணிப்பதற்கு முன்னர் தாங்களாகவே கொரோனா சுயபரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்விட்ச் ஹெல்த் என்ற திட்டத்தின் மேற்பார்வையின் கீழ் பயணிகள் சுய பரிசோதனை செய்து 45 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவின் மின்னணு அறிக்கையைப் பெறலாம். கனடா அரசாங்கத்தின் சோதனை நுழைவுத்Read More →

Reading Time: < 1 minute ஆல்பர்ட்டா மாகாணத்தில் கட்டாய கொரோனா தடுப்பூசி கொள்கைக்கு எதிராக நான்கு மருத்துவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மேலும், தங்களின் நிலைப்பாட்டை அறிக்கை ஒன்றின் மூலம் கலகரி நீதிமன்றத்தில் குறித்த நான்கு மருத்துவர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர். ஒரு நோயாளியின் முன்அனுமதியின்றி செய்யப்படும் எந்தவொரு மருத்துவ சிகிச்சையும் அவர்கள் மீதான தாக்குதலுக்கு சமம் என்றே குறித்த நான்கு மருத்துவர்களும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆல்பர்ட்டா சுகாதார சேவையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பொதுமக்களின் நலன் கருதிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,087பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 98ஆயிரத்து 123பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 749பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 29ஆயிரத்து 387பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 765பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்,Read More →

Reading Time: < 1 minute கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் விக்டோரியா கடற்கரையில் சரக்குக் கப்பலில் பரவிய தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் அதிலிருந்த ரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்கள் பல கடலுக்குள் வீழ்ந்துள்ளதால் சுற்றுச் சூழல் மாசு குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. எத்தனை கொள்கலன்கள் கலலில் வீழ்ந்தன? என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை என கனேடிய கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் பிரிக்கெட் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். முதலில் 10 கொள்கலன்களுக்கு தீRead More →

Reading Time: < 1 minute வான்கூவரில் Tim Hortons ஊழியரின் முகத்தில் கொதிக்கும் கோப்பியை வீசிவிட்டு மாயமான பெண் தொடர்பில் வான்கூவர் பொலிசார் விசாரித்து வருகின்றனர். பெண்டர் மற்றும் அபோட் தெருவில் அமைந்துள்ள Tim Hortons-ல் புதன்கிழமை பகல் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குறித்த கடைக்குள் பகல் 10 மணிக்கு நுழைந்து கோப்பி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்த நிலையில், பெண் ஊழியர்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் தாய் மற்றும் மகள் மாயமான வழக்கில் 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலை வழக்கும் பதியப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் Whitby பகுதியில் இருந்து தாயார் மற்றும் மகள் இருவரும் இந்த மாத துவக்கத்தில் திடீரென்று மாயமாகினர். 58 வயதான Ava Burton மற்றும் அவரது தாயார் 85 வயதான Tatilda Noble ஆகிய இருவரும் அக்டோபர் 14 முதல் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் டர்ஹாம் பொலிசார் வழக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இளம்பெண் ஒருவர் கூரையே இல்லாத காரை ஓட்டிவந்த நிலையில், அவரை விசாரித்த பொலிசாருக்கு அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. Saskatchewan இலுள்ள Meadow Lake பகுதியில் தாறுமாறாக கார் ஓட்டிய ஒரு 27 வயது இளம்பெண், திருப்பம் ஒன்றில் ட்ரக் ஒன்றின் மீது மோதியுள்ளார். அவர் மோதிய வேகத்தில் அவரது காரின் மேற்கூரை பறந்துபோய்விட்டிருக்கிறது. காரின் முன்பக்கக் கண்ணாடி சிதைந்த நிலையிலும், அந்த பெண் காரை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டேRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் TTC பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பலர் காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் சாலை விபத்து தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வில்சன் அவென்யூ மற்றும் சாம்ப்ளைன் பவுல்வர்டு பகுதியில் பேருந்து ஒன்றுடன் கார் ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அதி வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியதாகவேRead More →

Reading Time: < 1 minute நோவா ஸ்கோடியாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைதாகியுள்ளதாகவும் மூன்றாவது நபரை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, ட்ரூரோ பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் விசாரணையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்தனர். செப்டம்பர் 5ம் திகதி இந்திய மாணவரான Prabhjot Singh Katri (23) பணி முடித்து தமது அறைக்கு திரும்பிய நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது 21 வயதானRead More →

Reading Time: < 1 minute சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை வெங்காயத்தில் சால்மோனெல்லா விஷத்தன்மை கண்டறியப்பட்டுள்ள நிலையில், திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக கனேடிய உணவு ஆய்வு முகமை கூறுகிறது. மெக்சிகன் மாநிலமான Chihuahua-வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயமானது ஒன்ராறியோ, கியூபெக் உள்ளிட்ட மாகாணங்களில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரையில் விற்பனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வெங்காயமானது பல்வேறு பிராண்ட் பெயர்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட வெங்காயத்தை வைத்திருக்கும் நுகர்வோர் அவற்றை வெளியேRead More →

Reading Time: < 1 minute தடுப்பூசி காலக்கெடு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, லண்டனின் முக்கிய மருத்துவமனை ஒன்று 84 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இது தொடர்பில் The London Health Sciences Centre தெரிவிக்கையில், தங்கள் மருத்துவமனையில் 99 சதவீத ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும், பொது நலனுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துள்ள 84 ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உயரிய காரணத்திற்காகவே மருத்துவமனையின் கொள்கையில் இருந்து விலகிய ஊழியர்களை வேலையை விட்டுRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு இவ்வாறு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட உள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் முழு அளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தவறும் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்Read More →