Reading Time: < 1 minute ஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர்த்து, 14 கைதிகள் புதன்கிழமை காலை ஒட்டாவா-கார்லேடன் தடுப்பு மையத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். கைதிகள் முன்வைத்திருந்த கோரிக்கைகள், நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததாக சொலிசிட்டர் ஜெனரல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது 14 கைதிகளும் அதிகபட்ச பாதுகாப்புRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 139பேர் உயிரிழந்ததோடு, 641பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,637ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,726ஆக அதிகரித்துள்ளது. மேலும், 34,350பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 51,739பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,727பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கும் உதவித் தொகை, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கு 500 டொலர் வரை ஒரு முறை செலுத்துதல் தொகைக்காக கூட்டாட்சி அரசாங்கம், 2.5 பில்லியன் டொலர்கள் நிதியை ஒதுக்கியுள்ளது. முதியோர் பாதுகாப்பு நலனுக்காக தகுதி பெற்றவர்கள் 300 டொலர் வரிவிலக்கு செலுத்த தகுதியுடையவர்கள்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 103பேர் உயிரிழந்ததோடு, 675பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,498ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,085ஆக அதிகரித்துள்ளது. மேலும், 34,539பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 51,048பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,721பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute அதிகமான மக்கள் தற்போது மிதிவண்டிகளை பயன்படுத்தும் நிலையில், ரெட் டீர் பொலிஸார் அவர்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். அதிகமான மக்கள் உடற்பயிற்சி செய்ய அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக நேரத்தைச் செலவிட முயல்வதால் வீதிகளில் அதிகமான மிதிவண்டி ஓட்டுநர்கள் உள்ளனர். இந்தநிலையில் மிதிவண்டிகள் திருட்டு அதிகரித்துள்ளதாக ரெட் டீர் நகர்ப்புறப் பிரிவின் படைத்துறை அலுவலர் (கார்ப்பொரல்) டுவைன் ஹனுசிச் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தூண்டில் கார்களைப் போலவே,Read More →

Reading Time: < 1 minute அமெரிக்காவில் நடப்பதைத் தாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இது மக்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களின் குரல்களைக் கேட்பதற்குமான நேரம் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தனது காலால் அழுத்தியமையினால் அவர் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பை அடுத்து நீதி கோரி பலர் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்ததுடன் அமெரிக்காவில்Read More →

Reading Time: < 1 minute அல்பேர்ட்டாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 13 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இறப்பு சம்பவிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 7,057 பேரில் 377 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவருகின்றனர். அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அல்பேர்ட்டாவில் இறப்புகளின் எண்ணிக்கை 143 ஆக உள்ளது அத்தோடு இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,057Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் தினசரி உயிரிழப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 758பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 31பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கடந்த ஏப்பரல் மாதத்திற்கு பிறகு தற்போது குறைவான தினசரி உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஏப்ரல் 4ஆம் திகதி 23பேர் உயிரிழந்திருந்தனர். மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91,705ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,326ஆக உள்ளது. மேலும், 34,653பேர் மருத்துவமனைகளில்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை மேலும் 28 நாட்களுக்கு நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தனது அரசாங்கம் பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடும் திட்டத்தில் தீவிரமாகச் செயற்படுகின்றோம். பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டால், நாம் மற்ற கட்டங்களைப் பார்ப்போம். நான் பொருளாதாரம் செல்ல விரும்புகிறேன். ஆனால் நாங்கள் அதை பாதுகாப்பாக செய்ய வேண்டும்’ என கூறினார். குயின்ஸ் பார்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்,Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 13.85 டொலரிலிருந்து 14.60 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து, குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு 15 டொலராக உயர்த்துவதாக மாகாணம் வாக்குறுதி அளித்தது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால், ஊதிய உயர்வு கட்டம் கட்டமாக இருந்தாலும், சில வணிக நிறுவனங்கள் இது சரியான நேரம் இல்லையெனRead More →

Reading Time: < 1 minute நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டம், கனடாவிலும் இடம்பெற்றுள்ளது. மொன்றியலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இப்போராட்டம், மோதலுடன் முடிவுக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொன்றியல் நகரத்தின் வழியாக பதுங்கியிருந்த போராட்டக்காரர்கள் இரவு வேளையிலும் அதே இடத்தில் இருந்ததாலேயே போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் வெடித்தது. மொன்றியல் பொலிஸார் கூட்டத்தை சட்டவிரோதமாக அறிவித்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் அங்கு இருந்தால் மிளகு தெளிப்புRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நாளொன்றுக்கு உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 757பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 222பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் கனடாவில் பதிவான அதிகூடிய உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். இதற்கமைய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,947ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,295ஆக உளளது. மேலும், 34,773பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு,Read More →