Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி, இறுதி புள்ளிவிபர அறிக்கைபடி, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,711ஆக உள்ளது. அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில், வைரஸ் தொற்றுக்கு 121பேர் உயிரிழந்ததோடு, 1,012பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,545ஆக உயர்ந்துள்ளது. மேலும், 34,528பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 44,638பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minute நாடு முழுவதும், ஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் ஒரு பொறுப்புள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதும் உடல் ரீதியான தூரத்தைக் கடைபிடிக்க வேண்டுமென அவர்களை வலியுறுத்தியுள்ளார். ரொறன்ரோவின் டிரினிட்டி பெல்வுட்ஸ் பூங்காவை வார இறுதியில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் உடல் ரீதியான விலகல் விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பொருளாதாரம் மீண்டும்Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில், 12 பேருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதாக கியூபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 20ஆம் திகதி, மான்ட் ட்ரெம்ப்லாண்ட் ஸ்கை ரிசோர்ட்டுக்கு அருகே சமூக ரீதியாக விலகல் பின்பற்றாத பிறந்தநாள் கொண்டாட்டத்தில், இவர்கள் கலந்துக்கொண்டதாலேயே இவர்கள் இந்த அபராதத்தினை எதிர்கொள்ளவுள்ளனர். இவர்கள், மொன்றியல், ஒட்டாவா மற்றும் நியூயோர்க்கைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் என்ன அபராதம் விதிக்கப்படலாம் என்பதைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 69பேர் உயிரிழந்ததோடு, 1,078பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 18ஆம் திகதிக்கு பிறகு கனடாவில் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,424ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84,699ஆக அதிகரித்துள்ளது. மேலும், 34,290பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 43,985பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minute வடக்கு சஸ்காட்செவன் ஆற்றுக்கு செல்லவேண்டாமென அப்பகுதி மக்களுக்கு, தீயணைப்பு மீட்பு சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. வால்டர்டேல் பாலம் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஒரு நாயை மீட்டப்பின்னர், எட்மண்டன் தீயணைப்பு மீட்பு சேவைகள் (ஈ.எஃப்.ஆர்.எஸ்) குடியிருப்பாளர்களை வடக்கு சஸ்காட்செவன் ஆற்றில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆற்றில் நீர் மட்டங்கள் விரைவாக உயரும்போது, அதில் மிதக்கும் குப்பைகளின் அதிகரிப்புடன், யாரும் அருகில் இருப்பதும் பாதுகாப்பற்றது என அவர்கள் கூறியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute நோவா ஷ்கோட்டியாவின் போர்ட்டர்ஸ் ஏரிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான வெளியேற்ற உத்தரவு நீக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தற்போது மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். நேற்று முன் தினம் (சனிக்கிழமை) பிற்பகல், மதியம் 12.20 மணியளவில் பரவத் தொடங்கிய காட்டுத்தீயினால், 1,000இற்க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அத்துடன், கேண்டி மவுண்டன் வீதியில் வசிப்பவர்கள் உட்பட, அவர்கள் வெளியேற்றத்திற்கு தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கும் மையமாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 105பேர் உயிரிழந்ததோடு, 1,141பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,355ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,621ஆக அதிகரித்துள்ளது. மேலும், 33,961பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 43,305பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தடமறிதல் கண்காணிப்பு பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய கூட்டாட்சி அரசு விரைவில் கடுமையாக பரிந்துரைக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சமீபத்திய கூட்டாட்சி தொற்றுநோய்க்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) தெளிவுப்படுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஒரு நாளைக்கு 3,600 தொடர்பு தடமறிதல் அழைப்புகளை மேற்கொள்ளக்கூடிய கூட்டாட்சி ஊழியர்களுக்கு மத்திய அரசு பயிற்சிRead More →

Reading Time: < 1 minute கனடாவின் கிழக்கு மாகணமாகிய நோவா ஷ்கோட்டியாவின் போர்ட்டர்ஸ் ஏரிப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறியுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) மதியம் 12:20 மணியளவில், வெஸ்ட் போர்ட்டர்ஸ் லேக் வீதிக்கு அருகிலுள்ள நோவா ஷ்கோட்டியாவின் போர்ட்டர்ஸ் ஏரியில் நெடுஞ்சாலை 107இல் இருந்து காட்டுத்தீ பிடித்ததை தொடர்ந்து, ஹாலிஃபாக்ஸ் தீயணைப்புக் குழுவினர் அழைக்கப்பட்டனர். எனினும், அதிக காற்று போன்ற நிலைமைகளால் தீ வேகமாகப் பரவி, நெடுஞ்சாலையின் 107இன்Read More →

Reading Time: < 1 minute நியூ பிரன்சுவிக்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவதற்குக் விதிக்கப்பட்டிருந்த தடை, தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் வாரம் முதல், தற்காலிகத் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மாகாணத்திற்கு மீண்டும் நுழைய நியூ பிரன்சுவிக் அனுமதிக்கிறது. பண்ணைகள் மற்றும் மீன் தாவரங்கள் போன்றவற்றை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என்றாலும், இதனால் ஏற்பட்ட தாமதம் சில சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. தாமதத்தின் காரணமாக, மெக்சிகோவிலிருந்து வந்த தொழிலாளர்களின் அனுமதிகள் இரத்து ஆகியுள்ளன. கொரோனாRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 98பேர் உயிரிழந்ததோடு, 1,156பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,250ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82,480ஆக அதிகரித்துள்ளது. மேலும், 33,636பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 42,594பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute பழங்குடியினரின் நல்வாழ்வுக்காகவும் கொரோனா வைரஸ் நோய்ப்பரவலை தடுப்பதற்காகவும் பழங்குடி சமூக ஆதரவு நிதியில் 75 மில்லியன் டொலர்களை அதிகரித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மேலும் கூறுகையில், “பழங்குடி சமூக மக்கள் தொகையை இலக்காகக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்கான அதிக தேவையை அனுபவித்து வருவதால், பாதுகாக்கப்பட்ட பகுதியில் இல்லாத மற்றும் நகர்ப்புற மையங்களில் வாழும் பழங்குடி சமூகங்களுக்கான நிதியை முதலிடம் பெறுவது அவசியம்.Read More →