Reading Time: < 1 minute

நியூ பிரன்சுவிக்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவதற்குக் விதிக்கப்பட்டிருந்த தடை, தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இதற்கமைய, எதிர்வரும் வாரம் முதல், தற்காலிகத் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மாகாணத்திற்கு மீண்டும் நுழைய நியூ பிரன்சுவிக் அனுமதிக்கிறது.

பண்ணைகள் மற்றும் மீன் தாவரங்கள் போன்றவற்றை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என்றாலும், இதனால் ஏற்பட்ட தாமதம் சில சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. தாமதத்தின் காரணமாக, மெக்சிகோவிலிருந்து வந்த தொழிலாளர்களின் அனுமதிகள் இரத்து ஆகியுள்ளன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரன்சுவிக்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவதற்குக் கட்டுப்பாடுகள், தடை விதிக்கப்பட்டன. இதனால் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பி இருந்த தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் அரசாங்கம் இந்த தடையினை தற்காலிமாக நீக்கியுள்ளது.