Reading Time: < 1 minute கனடாவில் உள்ள நோர்த் யார்க் பகுதியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ரொறெண்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இரவு 7 மணியளவில் பிஞ்ச் அவெனியு வெஸ்ட் மற்றும் ஜெய்செல் டிரைவ் ஆகிய இடங்களை இணைக்கும் பகுதியில் இடம்பெற்றுள்ளது அடையாளம் தெரியாத ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குRead More →

Reading Time: < 1 minute எட்மன்டனுக்கு வடமேற்கே ஒரு சிறிய குக்கிராமத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்த விசாரணையில் சந்தேகம் இல்லை எனவும் குற்றச் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பத விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் குறித்த வீட்டில் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் அடங்கிய குடும்பம் உயிரிழந்தது. கடந்த வியாழன் கனடா நேரப்படி மாலை 4Read More →

Reading Time: < 1 minute பிரபல பொலிவூட் நடிகரான அக்‌ஷய் குமார் கனடா நாட்டை சேர்ந்தவர். இவர் இந்தியர் கிடையாது என்ற சர்ச்சை தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்‌ஷய்குமார் அதிரடி முடிவு எடுத்துள்ளார். பொலிவூட் உலகில் தன்னுடைய வித்தியாசமான படம் மூலம் அதிக இரசிகர்களை கொண்டவர் அக்‌ஷய்குமார். குறிப்பாக நாட்டுப்பற்று இருக்கும் வகையில் பல படங்களில் இவர் நடித்தாலும், அவரை கனடா நாட்டுக்காரர் எனவும் இந்தியன் கிடையாது என்றும்Read More →

Reading Time: < 1 minute ஓரினச் சேர்க்கை தாயார் ஒருவர் கனடாவில் இருந்து தமது பிள்ளைகள் இருவரை பிரித்தானியாவுக்கு கடத்திய சம்பவத்தின் பின்னணி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. கனடாவில் தனது மனைவி, பிள்ளைகள் இருவரை இரகசியமாக கடத்தியதாக கணவனால் முறையிடப்பட்ட ஓரினச் சேர்க்கை தாயார் விவகாரத்தில் கனேடிய அதிகாரிகள் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியிருந்தனர். இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரை கடந்த ஜூலை மாதம் பொலிஸார் கைது செய்தனர்.Read More →

Reading Time: 2 minutes லைக்கா புரொடக்ஷன் நிறுவனத் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுக்க பிரபல இயக்குனர்கள் இருவர் விருப்பம் வெளியிட்டுள்ளனர். லைக்கா புரொடக்ஷன் மற்றும் லைகா மொபைல்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் நிறுவனராக லைக்கா குழுமத்தின் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஸ்கரன் விளங்குகிறார். இந்தநிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை – 06.12.19) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கோரமெண்டல் சொகுசு விடுதியில் சுபாஸ்கரன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தRead More →

Reading Time: < 1 minute ஸ்கார்பரோ நெடுஞ்சாலை 401இல், நான்கு வாகனங்கள் தொடர்புபட்ட விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் ஒரு பெண் ஆபத்தான காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை 401 மற்றும் வார்டன் அவென்யூ பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்து குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விபத்தில் காயமடைந்துள்ள இரண்டு குழந்தைகளும் ஐந்துRead More →

Reading Time: < 1 minute தெற்கு வின்ட்சரில் உள்ள பாடசாலை வளாகத்திற்கு துப்பாக்கிகளைக் கொண்டு வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வின்சென்ட் மாஸ்ஸி மேல்நிலை பாடசாலையிலேயே நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன்போது, குறித்த இருவரும் பாடசாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும், இதன்பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட போது, அவ்விருவரும் அவ்விடத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களை கைதுசெய்ய தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த பொலிஸார், ஒரு வீட்டிலிருந்துRead More →

Reading Time: < 1 minute வன்கூவரில் டிரான்ஸ்லிங்க் பேருந்தில் தவறாக நடந்துக்கொண்ட பயணியொருவரை, பொலிஸார் பொலிஸ் காவலில் வைத்துள்ளனர். நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) பேருந்தில், ஒரு பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு உறுப்பினர்கள் பேருந்திற்க்கு அழைக்கப்பட்டனர். இதன்போது தவறாக நடந்துக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பயணியை, அதிகாரியொருவர் அணுகிய போது அவர் பொலிஸ் அதிகாரியின் முகத்தில் குத்தியதாகவும், அதிகாரியின் தடியை எடுக்க முயன்றதாகவும் பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்துRead More →

Reading Time: < 1 minute தென்கிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் நெடுஞ்சாலையொன்றை போக்குவரத்து அமைச்சகம் மூடியுள்ளது. அப்பகுதியில் ஏற்பட்ட பாறை சரிவே இதற்கு காரணம் எனவும், இந்த வீதிப் பகுதி மூடப்படுவதால் மாற்று வழிப் பாதையை பயன்படுத்துமாறும் போக்குவரத்து அமைச்சகம் கோரியுள்ளது. நெடுஞ்சாலை 93, கிரான்ப்ரூக்கின் வடக்கே உள்ள இந்த வீதிப் பகுதியே நேற்று (வியாழக்கிழமை) மூடப்பட்டது. டச்சு க்ரீக் ஹூடூஸ் என்று அழைக்கப்படும் கிரான்ப்ரூக், பி.சி.க்கு வடக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள நெடுஞ்சாலைRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ-ஓக்வில்லில் உள்ள ராணி எலிசபெத் வேயில் இடம்பெற்ற விபத்தில், பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹாமில்டனில் டொர்வால் வீதி- நெடுஞ்சாலைப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவபிரிவினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் 20 வயது மதிக்கதக்கவர் என தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார், இதுகுறித்தRead More →

Reading Time: < 1 minute மனிடோபாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி கிறிஸ்மஸ் தாத்தா, பொம்மைகளை வழங்கி மகிழ்வித்துள்ளார். புனித ஜோன்ஸ் ஆங்கிலிகன் தேவாலயத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற வருடாந்திர நோர்த் எண்ட் சமூக கிறிஸ்மஸ் விருந்தில் இந்த பொம்மைகள், வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது தன்னார்வலர்கள் 600 இற்குக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் வின்னிபெக்கின் நார்த் எண்டில் உள்ள குடும்பங்களிலுள்ள 400 குழந்தைகளுக்கு பொம்மையும் வழங்கப்பட்டது. இதுகுறித்து கிறிஸ்மஸ் தாத்தா கூறுகையில், ‘கிறிஸ்மஸ் என்பதுRead More →

Reading Time: < 1 minute தென் கிழக்கு கல்கரியின் அப்பிள்வுட் பகுதியில் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிழந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அப்பிள்வுட் டிரைவ் எஸ்.இ. மற்றும் 68 வீதி எஸ்.இ. பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இவ் விபத்தில் காயமடைந்த ஒரு வாகனத்தின் சாரதி, உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்தனர். இதேவேளை, இந்த விபத்தில்Read More →