Reading Time: < 1 minute சர்ரே பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து, இரண்டு மணித்தியால போராட்டத்திற்கு பிறகு முடிவிற்கு வந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்து, சர்ரேயின் பிரிட்ஜ்வியூ பகுதியில் அமைந்துள்ள பழைய வாகன தொழிற்சாலையில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்டது. 1,000 சதுர அடி உலோகத்தால் ஆன கட்டடத்தில் முழுமையாக தீ பரவியதாகவும், 24 தீயணைப்பு வீரர்கள் மற்றும் எட்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியா- லாங்லே பகுதியில் இடம்பெற்ற முதியவர் கொலை தொடர்பாக, மனிதக் கொலை புலனாய்வாளர்கள், விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட 67வயதான முதியவர் டென்னிஸ் ஜான்ஸ்டன் என அதிகாரிகள் அடையாங் கண்டுள்ளனர். ஆரம்பத்தில் இச்சம்பவத்துடன் தொடர்புடையர் என சந்தேகிக்கப்பட்ட ஒருவரை பொலிஸ் காவலில் எடுத்ததாகவும், பின்னர் அவரை விடுவித்ததாகவும் ஒருங்கிணைந்த படுகொலை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, 224 வீதியின் 2900 தொகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரவுRead More →

Reading Time: < 1 minute எட்மண்டனின் குயின் மேரி பார்க் சுற்றுப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, பலநபர்கள் வாகனத்தில் தப்பியோடியதாகவும், அவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். கிறிஸ்மஸ் தினத்தன்று 107ஆவது அவென்யூ மற்றும் 117ஆவது வீதி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகாமையில், காலை 7:20 மணியளவில் இந்தRead More →

Reading Time: < 1 minute நோர்த் யோர்க் பகுதியில் எரியுட்டப்பட்ட குப்பை தொட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக, மனிதக் கொலை பிரிவினர், விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என கூறும் விசாரணையாளர்கள், இதுகுறித்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவரின் விபரங்கள் எதனையும் வெளியிடாத அதிகாரிகள், சந்தேக நபர் குறித்து எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. கீல் ஸ்ட்ரீட் மற்றும் பிஞ்ச் அவென்யூ அருகே 44 ரோம்ஃபீல்ட் டிரைவில் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை 3:45Read More →

Reading Time: < 1 minute வன்கூவர் தீவின் வடக்கு முனையின் மேற்கே பசிபிக் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. எனினும், நேற்று (புதன்கிழமை) உணரப்பட்ட இந்த நிலநடுக்கங்களினால் எவ்வித சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் நிலநடுக்கமானது, காலை 8:30 மணியளவில் பி.டி., மற்றும் போர்ட் ஆலிஸுக்கு மேற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானது. இந்த நிலநடுக்கமானது, 3.6 ரிக்டர் அளவில் பதிவானது. இரண்டாவது நிலநடுக்கமானது, மதியம் 12:45 மணிக்கு முன்பு,Read More →

Reading Time: < 1 minute கனடா, பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ஹார்டி துறைமுகத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹார்டிக் துறைமுகத்தின் மேற்கே 188 கிலோமீற்றர் தொலைவிலும் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஐந்து இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்க கனடாவின் கூற்றுப்படி, முதல் நிலநடுக்கம் அளவு 5.1, இரண்டாவது 5.6, மூன்றாவது 5.8, நான்காவது 6.0, ஐந்தாவது 4.8 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. ஹார்டிக்கின் மேற்கே 175 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புRead More →

Reading Time: < 1 minute டர்ஹாம் பிராந்தியத்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒன்றாரியோ- ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மீது, கடத்தல் நோக்கத்திற்காக நான்கு உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, 14.5 கிலோகிராம் ஃபெண்டானைல், 2.8 கிலோகிராம் கோகோயின் மற்றும் 2.5Read More →

Reading Time: < 1 minute பார்க்டேலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக, ரொறன்ரோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது, சம்பவ இடத்திலிருந்து ஒருவர் தப்பியோடியதாக கூறும் பொலிஸார், அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர். கிங் வீதி மேற்கு மற்றும் ஜேம்சன் அவென்யூவில் உள்ள வளாகத்தில், நேற்று (திங்கட்கிழமை) மதியம் 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர், மருத்துவமனைக்குRead More →

Reading Time: < 1 minute ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் உயிராபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கம் வீதி மற்றும் புரோகிரஸ் அவென்யூ பகுதியில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்திற்கு அதிவேகமே பயணித்து சாரதி கட்டுப்பாட்டை இழந்ததே காரணம் என பொலிஸாரின் அறிக்கை தெரிவிக்கின்றது.Read More →

Reading Time: < 1 minute வன்கூவர்- வெஸ்ட் எண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில், பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. பிராட்டன் வீதி மற்றும் பீச் அவென்யூவின் மூலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் இந்த தீவிபத்து சம்பவித்துள்ளது. 10 மாடி உயர குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு தொகுப்பிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், குடியிருப்பின் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாக, வன்கூவர்Read More →

Reading Time: < 1 minute வன்கூவர் தீவின் மேற்கு கடற்கரையில் விபத்துக்குள்ளான செஸ்னா 172 விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் (சனிக்கிழமை) டோஃபினோ, பி.சி.க்கு புறப்பட்ட விமானம் அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விமானம் விபத்துக்குள்ளானதாக கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விமானத்தின் கலங்கரை விளக்கம் வழியாக விமானத்தின் பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். இதனை கூட்டுRead More →