Reading Time: < 1 minute

கனடா- பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வங்கி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது கனேடிய பொலிஸார் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர் மற்றும் ஆறு அதிகாரிகள் காயமடைந்தனர்.

Tamil Business Directory

மேலும், வங்கிக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர்களுடன் தொடர்புடைய வாகனத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவத்தையடுத்து அருகிலுள்ள வீடுகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

வெடிபொருள் அகற்றும் பிரிவு, சாதனங்களை ஒரு வாகனத்திலிருந்து உள்ளூர் நிலப்பகுதியான ஹார்ட்லேண்ட் லாண்ட்ஃபில் ஃபேசிலிட்டிக்கு மாற்றி நேற்று (புதன்கிழமை) அவற்றை அழிக்க முடிந்தது பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு ஆபத்து இருப்பதாக அவர்கள் நம்பவில்லை என்றாலும், மூன்றாவது சந்தேக நபரின் சாத்தியக்கூறு குறித்து பொலிஸார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணியில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெடிகுண்டுகளின் தன்மை, துப்பாக்கிச் சூட்டில் என்னென்ன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன, துப்பாக்கிச் சூடு நடந்தபோது வங்கியில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த கூடுதல் விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

வன்கூவர் தீவு ஒருங்கிணைந்த பெரிய குற்றப்பிரிவு, இப்போது விசாரணைக்கு பொறுப்பேற்றுள்ளது.