Reading Time: < 1 minute சென்னை: லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஊழியர்கள் பற்றாக்குறையால் அந்த நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள்Read More →

Reading Time: < 1 minute தமிழீழத் தேசிய மாவீரர் நாளில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களது புதல்வி துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்கள், தரவுகளின் அடிப்படையிலும், எமது அவதானங்களின் வழி நின்றும் இம் முடிவினை நாம் எடுத்துள்ளோம். தமிழீழத் தேசியத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் உலகத் தமிழ் மக்கள் தங்கள் இதயங்களில் அன்போடும், மதிப்போடும் வைத்திருக்கின்றார்கள். எனவேதான் அவரது மகளாக வேறுRead More →

Reading Time: < 1 minute ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்பட்ட தமிழ் ஆய்வாளர் சிவபாலசுப்ரமணி காலமானார். அவருக்கு வயது 60. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. குமரி கண்டம், லெமூரிய கண்டம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டவர். ஆமைகள் மூலமாக நீரோட்டத்தை அறிந்து பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டதை அறிந்தவர் ஆவார். திருச்சி உறையூரில் பிறந்தவர் சிவ பாலசுப்ரமணியன். கடலியலில்Read More →

Reading Time: 2 minutes ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மனைவி சோஃபி ட்ரூடோ பிரிந்ததாக அறிவித்தனர்! பிரதமருக்கும் கிரிகோயர் ட்ரூடோவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி கிரெகோயர் ட்ரூடோ இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாக இருவரும் இணையத்தில் வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. “பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்குப் பிறகு, நாங்கள் பிரிவதற்கான முடிவை எடுத்துள்ளோம் என்ற உண்மையை நானும் சோஃபியும் பகிர்ந்துRead More →

Reading Time: < 1 minute இலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், பரிசோதனை நோக்கத்திற்காக தனியார் சீன நிறுவனமொன்றுக்கு, ஒரு இலட்சம் மக்காக் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தகைய கோரிக்கை குறித்து தமக்கு எந்த தகவல்களும் தெரியாதுRead More →

Reading Time: < 1 minute உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, லாவோஸ், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக இந்திய மத்திய கலாசார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் திபேத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவும் பங்கேற்பார் என எதிர்பார்ப்பதாகவும், இன்னும் அவரின் வருகைRead More →

Reading Time: < 1 minute ரஷ்யாவிற்கு எதிராக போரில் சண்டையிட கனடா 8 சிறுத்தை 2 ரக டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு உதவி சமீபத்தில் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரிட MiG-29 ரக போர் விமானங்கள் வழங்க வேண்டும் என போலந்து அறிவித்து இருந்தது. ஆனால் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த MiG-29 ரக போர் விமானங்களை பெறும் நாடுகள் அவற்றை மூன்றாம் நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடும் போது, விற்பனை விதிகளின்படி,Read More →

Reading Time: < 1 minute சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை அவை புழக்கத்திற்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள £5, £10, £20 மற்றும் £50 பணத்தாள்களுக்கு மன்னரின் உருவப்படம் மட்டுமே மாற்றமாக இருக்கும், மேலும் சேதமடைந்த அல்லது பழைய பணத்தாள்களுக்குப் பதிலாக புதிய பணத்தாள்கள் மாற்றப்படும். இருப்பினும், சுய சேவை டில்ஸ் போன்ற இயந்திரங்கள் புதிய படத்தைRead More →

Reading Time: < 1 minute உலகின் மிகச்சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருது (Booker Prize) மேடையில் நேற்றுத் தமிழ் ஒலித்தது. இலங்கையரான ஷெஹான் கருணாதிலக (Shehan Karunatilaka) இம்முறை இந்த விருதுக்குத் தெரிவாகியிருந்தார். அவரது உரையின் இறுதி வரிகளில் “இலங்கை சொந்தங்களே, நாம் எமது கதைகளைக் கூறுவோம். கூறிக்கொண்டே இருப்போம்” எனத் தமிழிற் கூறி முடித்தார். அதற்கு முன்னர் சிங்களத்திற் சில வரிகளை அவர் தனது உரையிற் சேர்த்திருந்தார். அவரது நன்றியுரை ஆங்கிலத்தில்Read More →

Reading Time: 2 minutes இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும்Read More →

Reading Time: < 1 minute கொரோனா என்பது உலகம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) எச்சரித்துள்ளார். கொரோனா போன்று இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரலாம். கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் அதே சமநேரத்தில் அடுத்த பெருந்தொற்று நோய்களை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தியுள்ளார். டிசம்பர் -27 உலக பெருந்தொற்று தயாராதல் தினத்தையொட்டி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் அவர் இதனைக்Read More →

Reading Time: < 1 minute ஒமக்ரோன் மாறுபாடு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலகச் சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. அதைக் கட்டுப்படுத்த நாடுகள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும் அதன் தலைமை பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். இதுவரை ஒமக்ரோன் மாறுபாடு 77 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாறுபாட்டைச் சமாளிக்க அந்நாடுகள் போதுமான அளவு செய்யப்படவில்லை என்றும் கவலை வெளியிட்டார். இதேநேரம் இதற்கு முன்னர் பரவிய கொரோனா மாறுபாடுகளை விடRead More →

Reading Time: 2 minutes ஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்த அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தினை பாராட்டுவதாக  தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்கிறோம் எனத் தெரிவித்துள்ளது. 1915ம் ஆண்டு இளவேனிற்காலம் தொடங்கி 1916 இலையுதிர் காலம் வரையிலும் ஆர்மேனியர்கள் மீது படுகொலைகள், புலப்பெயர்ச்சி, பட்டினி, மோசமான நடத்துமுறை ஆகிய வழிகளில் 1.5 மில்லியன் ஆர்மேனியர்கள் மூர்க்கமான விதத்தில் நேரடியாகவே அழித்தொழிக்கப்பட்டார்கள். மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனதுRead More →

Reading Time: < 1 minute சிறிலங்காவுக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்காக போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளது. தீர்மானம் என அமைந்த முதல் வரைவு தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவாக அமைந்திருந்த நிலையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும்Read More →

Reading Time: < 1 minute உலக அளவில் அதிக கொரோனா மரணங்கள் ஒப்பீட்டு ரீதியில் அதிக உடற்பருமன் கொண்டவர்கள் வாழும் நாடுகளிலேயே பதிவாகியுள்ளதாக உலக உடல் பருமன் கூட்டமைப்பு (World Obesity Federation) அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. தொற்றுநோயின் முதல் ஆண்டில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்களில் 88 சதவிகிதம் போ் அதிக உடற்பருமன் கொண்ட நாடுகளில் வசிப்போர் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50 வீதத்துக்கு மேலானோர் அதிக உடற்பருமன்Read More →

Reading Time: < 1 minute ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்மூலம், அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்றுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. அரை மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் குறித்த புதிய தடுப்பூசி நோய்ப்பரவலை எதிர்த்துப் போராடஉதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 66 விகித செயற்திறன் கொண்ட ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசியைRead More →