Reading Time: < 1 minute இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கோவில்களை இடிப்பதற்கும், இந்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதிர்ப்;பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பழமையான வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இந்து கோவில்களை இடித்து, இந்து தமிழ் சமூகத்தின் கலாசார இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் செய்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர். இதுபோன்ற செயற்பாடுகள் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் வேலை வாய்ப்பு நிலையில் சாதக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கனடிய பொருளாதாரத்திற்கு 35,000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களாக தொடர்ச்சியாக வேலையற்றோர் வீதம் 5 வீதமாக காணப்படுகின்றது. தனியார் துறைகளில் அதிகளவில் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, வர்த்தகம், களஞ்சியப்படுத்தல், நிதி, ரியல் எஸ்டேட், வாடகை மற்றும் குத்தகை துறைகளில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சொந்த வீடு வாங்கும் திட்டத்தை பலர் கைவிட்டு விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த 2022 ஆண்டு வீட்டு விலை குறிப்பிடத்தக்களவு அளவில் குறைந்த போதிலும், வீடு விற்பனை எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டுள்ளது. வீடு ஒன்றை கொள்வனவு செய்யும் இயலுமை மக்கள் மத்தியில் வெகுவாக குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சொந்த வீடு கொள்வனவு செய்யும் கனவுடன் இருந்த 63 வீதமானவர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடா எல்லையில் இந்தியர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்போவதில்லை என இந்திய பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 30.3.2023 அன்று, பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்‌ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) ஆகியோர் உட்பட எட்டு பேர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக மீட்கப்பட்டார்கள்.ஷ இந்நிலையில், கனடா எல்லையில் இந்தியர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்போவதில்லை என இந்திய பொலிசார்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் உணவு வகைகளுக்கான விலைகள் இந்த ஆண்டிலும் தொடர்ந்து உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இறைச்சி, மரக்கறி வகைகள் மற்றும் பால்பொருள் உற்பத்திகளில் போன்றவற்றின் விலைகள் கூடுதல் அளவில் உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 7 வீதம் வரையில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனாவின் உணவுப் பொருள் விலை குறித்த அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நான்கு பேரைக் கோண்டRead More →

Reading Time: < 1 minute றொரன்டோவில் சுமார் நான்கு லட்சம் மக்கள் மருத்துவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. ரொறன்ரோவில் குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு உயர்வடைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் றொரன்டோவைச் சேர்ந்த சுமார் நான்கு லட்சம் மக்கள் குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022 மார்ச்Read More →

Reading Time: < 1 minute கனடாவிலிருந்து திருமணக் கனவுடன் இந்தியா சென்ற இளம்பெண்ணைக் காதலன் கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த நீலம் (23) என்ற பெண், கனடாவில் வேலைக்காகச் சென்ற நிலையில் தன்னுடைய காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீட்டைவிட்டு வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை என கூறப்படுகின்றது. காதல் தொடர்பு நீலம், சுனில் என்பவரைக் காதலித்துவந்தார்.Read More →

Reading Time: < 1 minute இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக, ஜம்மு – காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள கமான் அமன் சேது அமைதிப் பாலம் திறக்கப்பட்டுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் உரி செக்டரில் காலின்-டா-காஸ் நல்லாவின் நதி மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் இந்தியப் பக்கத்தில் இந்தியக் கொடியையும், எதிர்புறத்தில் பாகிஸ்தான் கொடியையும் தாங்கி நிற்கிறது. ஜம்மு – காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காகவும், எல்லையோர கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்குRead More →

Reading Time: < 1 minute பொருளாதார மேம்பாட்டுக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்களுக்குRead More →

Reading Time: < 1 minute பேரிடர் காலங்களில் தனித்து அல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய போதே பிரதமர், நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். நெருக்கமான உலகில் ஒரு பிராந்தியத்தில் நேரிடும் பேரழிவு, மற்றொரு பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவிடும் வகையில், உள்கட்டமைப்புகள் அமைய வேண்டும்Read More →

Reading Time: < 1 minute ருமேனிய குடும்பத்தினர், கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம் காரணமாகவே மிக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது. கனடிய அமெரிக்க எல்லை பகுதியில் அண்மையில் படகு ஒன்று கவிழ்ந்து இரண்டு சிறார்கள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இளம் தந்தை ஒருவர் ருமானியாவிற்கு நாடு கடத்தப்படக்கூடிய நெருக்கடியை எதிர்நோக்கிய காரணத்தினால் அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு செல்ல முயற்சித்துள்ளார். இவரது 2Read More →

Reading Time: < 1 minute கனடாவில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் அறிவித்துள்ளனர். பிணையில் விடுதலை செய்யப்படும் நபர்களினால் வன்முறைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாண முதல்வர்களுடன் அவசர சந்திப்பு ஒன்று நடாத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளது. அவசர சந்திப்பு ஒன்றுக்கு அனுமதி வழங்குமாறு மாகாண பொலிஸ் பிரதானிகள், மாகாண முதல்வர்களிடம் எழுத்து மூலம் கோரியுள்ளனர். அண்மைய நாட்களாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள்Read More →