Reading Time: < 1 minute இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்களும் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்தியாவிலிருந்து கனடவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றபோது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாங்கள் இந்திய தேசிய புலனாய்வு குழுவின் விசாரணையில் தாங்கள் ஆட்கடத்தல் காரர்களால் ஏமாற்றப்பட்டுள்ளவர்கள் என அவர்கள் கூறியுள்ளனர். அது உறுதி செய்யப்பட்டுள்ளபோதும், தொடர்ந்தும் முகாமில்Read More →

Reading Time: < 1 minute கனடாவுக்கு சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்டு வியாட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை அகதிகளை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது என வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட இலங்கையர்களில் 76 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் , படகில்Read More →

Reading Time: < 1 minute கனடா லொட்டரியில் பெரிய பரிசை வென்ற இரண்டு ஈழத்தமிழர்கள். லொட்டோ மேக்ஸில் Encore (Lotto Max Encore) $100,000 பரிசு. கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத்தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. Ajaxல் வசிக்கும் விக்னேஸ்வரராஜா Vikneswararajah Amirthalingam மற்றும் பரம்சோதி Paramsothy (Param) Kathirgamu ஆகிய இருவரும் 10 ஆண்டுகால நண்பர்கள் ஆவர். இருவரும் இணைந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில் லொட்டோ மேக்ஸில்Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நான்கு தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர்பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாழினி ராஜகுலசிங்கம் (Yalini Rajakulasingam) வெற்றி பெற்றார். ஸ்காபுறோரூச் பார்க் (Scarborough-Rouge Park) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட அனுRead More →

Reading Time: < 1 minute உலகின் மிகச்சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருது (Booker Prize) மேடையில் நேற்றுத் தமிழ் ஒலித்தது. இலங்கையரான ஷெஹான் கருணாதிலக (Shehan Karunatilaka) இம்முறை இந்த விருதுக்குத் தெரிவாகியிருந்தார். அவரது உரையின் இறுதி வரிகளில் “இலங்கை சொந்தங்களே, நாம் எமது கதைகளைக் கூறுவோம். கூறிக்கொண்டே இருப்போம்” எனத் தமிழிற் கூறி முடித்தார். அதற்கு முன்னர் சிங்களத்திற் சில வரிகளை அவர் தனது உரையிற் சேர்த்திருந்தார். அவரது நன்றியுரை ஆங்கிலத்தில்Read More →

Reading Time: < 1 minute மார்க்கம் நகரில் மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதி சந்திப்பிற்கு அருகில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடந்த வாகனவிபத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து டெனிசன் தெரு மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் இடையே மார்க்கம் சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டது. யோர்க் பிராந்திய காவல்துறையின் விபத்து பிரிவு விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் சம்பந்தப்பட்ட டிரக் சிவப்பு விளக்கை மீறி சென்றதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் Scotiabank அரங்கிற்கு வெளியே டொராண்டோ நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில் தமிழர் ஒருவருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் 26 வயதான தமிழர் கைது செய்யப்பட்டு, புதன்கிழமை டொராண்டோ நீதிமன்ற அறையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக டொராண்டோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை யோர்க் ஸ்ட்ரீட் மற்றும் ப்ரெம்னர் பவுல்வார்டு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இரவு 7.30 மணிக்குப் பின்னர் டொராண்டோRead More →

Bill 104, Tamil Genocide Education Week Act

Reading Time: 2 minutes ஒன்ராறியோவின் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டத்தை சவால் செய்து பல சிங்கள-கனடிய குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டமூலம் 104 -ஐ இதன்மூலம் அரசியலமைப்பின் பிரகாரம் ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் ஏற்று உறுதி செய்துள்ளது. தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டமூலத்தின் நோக்கம் முற்றிலும் “அறிவூட்டல் அல்லது தெளிவுபடுத்தல்” என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.Read More →

Reading Time: 2 minutes இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும்Read More →

Reading Time: < 1 minute கனேடிய நாடாளுமன்றம், மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அறிவிக்கும் பிரேரணையை, நேற்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்ட கனேடிய பாதுகாப்புத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த், ஒரு தமிழ் கனேடியர் என்ற முறையில், கனடா நாடாளுமன்றம், மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அங்கீகரித்ததற்காக தான் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minute இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவடைந்துள்ள இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட26 வருட கால ஆயுதப் போரில் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அத்துடன், போரில் காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், போரால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்த சோகத்தின் வலி, அதிர்ச்சி மற்றும் இழப்புடன் தொடர்ந்து வாழும் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: 2 minutes மறுமணத்துக்காக திருமண தகவல் மையம் மூலம் பெண் தேடிய கனடா வாழ் தமிழர் ஒருவரிடம் பெண் குரலில் பேசி, 1 கோடியே 38 லட்ச ரூபாயை பறித்த சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான். கூகுளில் கிடைத்த பெண் ஒருவரின் படத்தை எடுத்து, தனது தங்கை எனக் கூறி, 2 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊஞ்சமரத்தோட்டம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதானRead More →

Reading Time: < 1 minute இலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள், எரிவாயு, மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த நிலையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் கனடாவில் வாழும் இலங்கையர்கள் ‘எமது தாய்நாட்டைக் காப்பாற்றுங்கள்’ என போராட்டம் நடத்தி வருகின்றனர்.Read More →

Reading Time: < 1 minute இலங்கையில் மோசடையும் பொருளாதார நிலைமை குறித்து கனடா எச்சரிக்கைவிடுத்துள்ளது. இலங்கைக்கான பயண ஆலோசனையில் கனடா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகள், உணவுகள் எரிபொருட்கள் ,போன்ற அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என கனடா தெரிவித்துள்ளது. பொருளாதார ஸ்திரதன்மை இன்மை சுகாதார சேவைகள் உட்பட பொதுச்சேவைகள் பாதிக்கப்படும் நிலைமையை ஏற்படுத்தலாம் என கனடா கூறியுள்ளது. அத்துடன் பொருளாதார ஸ்திரதன்மை வளங்கள் குறைந்தளவில் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தலாம்Read More →

Reading Time: < 1 minute பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் (78) இன்று மாலை உடல்நலக்குறைவால் இன்று (December 26, 2021) காலமானார். அன்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று மாலை காலமானார். 2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் எனRead More →

Reading Time: < 1 minute கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா – ஸ்காபரோவில் மகிஷன் குகதாசன் (19) என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ரொறோண்டோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ரொறோண்டோவைச் சேர்ந்த 19 வயதான அனோஜ் தர்சன் என்ற சந்தேகRead More →