Reading Time: < 1 minute கனடாவில் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிற் கதவு மூடப்பட்டிருந்த காரணத்தினால் பெண் ஒருவர் வாசலிலேயே குழந்தை பிரசவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தின் டிரம்மோன்ட்வில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் வெளியே சத்தம் கேட்டதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெளியே சென்று பார்த்த போது தாயும் சேயும் இருப்பதனைக் கண்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வைத்தியசாலையின் பிரதான நுழைவாயல் கதவு இரவு நேரத்தில் மூடப்பட்டிருக்கும் எனவும் அவசர சிகிச்சைப்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அவருக்கே கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு இறந்து விட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு இறந்து விட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நிக் பெட்ரோயூரஸ் என்ற நபர் கொஸ்டாரிக்காவிற்கு விடுமுறைக்காக சென்றிருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் விற்பனையாகும் சில எயார் ப்ரையர் (air fryers ) வகைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Insignia பண்டக் குறியைக் கொண்ட சில வகை எயார் ப்ரையர்களே இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளன. இந்த வகை எயார் ப்ரையர்கள் தீப்பற்றிக் கொள்வதாகவும் அதிகளவு வெப்பமாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும், இந்த எயார் ப்ரையர்களினால் எவருக்கும் காயங்கள் இதுவரையில் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த மாடல்களை அந்த நிறுவனம் மீள பெற்றுக்கொள்ளத்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வங்கிகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளனர். கனடாவில் இயங்கி வரும் முன்னணி ஊடக நிறவனமொன்று இது பற்றிய விபரங்களை அம்பலப்படுத்தியுள்ளது, வங்கிப் பணியாளர்கள், வங்கியின் வாடிக்கையாளர்களை பிழையாக வழிநடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய வங்கிகள் பலவற்றில் பணியாற்றி வரும் ஊழியர்கள் இவ்வாறு வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக இரகசிய ஒப்புதல் வழங்கியுள்ளனர். வங்கி நிர்வாகங்கள் அறிவிக்கும் விற்பனை சார் இலக்குகளை எட்டுவதற்காக இவ்வாறு வாடிக்கையாளர்கள் பலிக்கடா ஆக்கப்படுகின்றனர். தங்களதுRead More →

Reading Time: < 1 minute கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைத் தெரியாதவர்கள் குறைவு என்றே கூறலாம். அவரது எளிமையும், கவர்ச்சியும் உலகம் அறிந்தது. ஒருமுறை அரசுமுறைப்பயணமாக இந்தியா சென்றிருந்த ட்ரூடோ அங்கு ஆடிப்பாடி மகிழ்ந்த காட்சிகள் தலைப்புச் செய்தியானது நினைவிருக்கலாம். ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவையும், ஏன், அவரது தந்தையையும் அறிந்த அளவுக்குக்கூட, பலருக்கும் அவரது மனைவியைத் தெரியாது. ஆனால், சமீப காலமாக ட்ரூடோவின் மனைவியைக் குறித்த பரபரப்பு தகவல் ஒன்று ஊடகங்களில் வெளியாகிவருகிறது. ஜஸ்டின் ட்ரூடோவும்,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது மகள் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து சம்பவம் கடந்த 7ம் தேதி நடந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பான தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். பொலிசார் தொடர்ந்து விசாரணைபிராம்டன் பகுதியின் பிக் ஸ்கை வே மற்றும் வான் கிர்க் டிரைவ் பகுதியில் வசித்துRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (17) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இறுதிக் கிரியைகள் இலங்கை நேரப்படி பிற்பகல் 01.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 06 இலங்கையர்கள் கடந்த 07ஆம் திகதி கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் , மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கனடா ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மனநலRead More →

Reading Time: < 1 minute ஹெய்ட்டியில் கடமையில் ஈடுபட்டுள்ள தமது தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த இது தொடர்பில் அறிவித்துள்ளார். தூதரகத்தில் இன்றியமையா பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் நாட்டுக்கு மீள அழைக்கப்பட உள்ளனர். எனினும், ஹெய்ட்டி வாழ் கனடியர்களுக்கு தொடர்ந்தும் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில் ஹெய்ட்டி மக்களுக்கு கனடா உதவிகளை வழங்கும் என அமைச்சர்Read More →

Reading Time: < 1 minute கனேடிய ரொரன்றோவில், கார் திருடர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு பொலிசார் அளித்துள்ள வித்தியாசமான ஆலோசனை ஒன்று விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ரொரன்றோவில் கார் திருடர்கள் திருடவரும்போது, அவர்கள் தாக்குவதிலிருந்து தப்பவேண்டுமானால், கார் சாவியை வீட்டு வாசலிலேயே விட்டு விடுங்கள் என பொலிசார் ஆலோசனை ஒன்றைக் கூறியுள்ளார்கள். அவர்களுக்கு உங்கள் கார்தான் வேண்டும். ஆகவே, அவர்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து கார் சாவியைத் திருட விரும்புகிறார்கள். அவர்களுக்கு வேறொன்றும் தேவையில்லை. ஆகவே,Read More →

Reading Time: < 1 minute 2024ஆம் ஆண்டிற்கான உலகில் சிறந்த முதல் பத்து வைத்தியசாலைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரொரான்ரோ ஜெனரல் வைத்தியசாலை 5 இடத்தில் இருந்து மீண்டும் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2024 World’s Top 10 HospitalsRead More →

Reading Time: < 1 minute கனடாவின் முன்னணி சுப்பர் மார்ட்களில் ஒன்றான Loblaw நிறுவனம் திருட்டைத் தடுக்க புதிய நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோர் ரசீதுகளை காண்பித்தால் மட்டுமே நுழைவாயில் திறக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களில் இடம்பெற்று வரும் திருட்டைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்ட ரசீது இல்லாதவர்கள் நுழைவாயிலை கடக்க முடியாத வகையில் மூடப்பட்டுள்ளது. எனினும், இந்த நடவடிக்கை தொடர்பில் வாடிக்கையாளர்கள் தங்களதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற நபர் ஒருவர், நிச்சயமாக வெற்றி கிடைத்துள்ளதா என்பதனை 13 தடவைகள் உறுதி செய்துள்ளார். கனடாவின் அஜாக்ஸ் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பணியாளர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு லட்சம் டொலர்களை பரிசாக வென்றுள்ளார். கெரி டோலா என்பவர் லொட்டோ மெக்ஸ் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றுள்ளார். பரிசு வெற்றி குறித்த சந்தேகம் காரணமாக தாம் 13 தடவைகள் லொத்தர் சீட்டை ஸ்கேன்Read More →

Reading Time: < 1 minute கனடா வரும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி தெரிவித்துள்ளார். அண்மையில் கனடா ஒட்டவாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபராக இலங்கையை சேர்ந்த இளைஞரொருவரே அடையாளம் காணப்பட்டார். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது எனவும் அனைத்து விண்ணப்பங்களையும் வழமைபோல் பரிசீலிக்கப்படும் எனRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட இரண்டு பேர், நாற்பது ஆண்டுகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் 12 வயதான சிறுவன் ஒருவனை இந்த இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 64 வயதான எட்வர்ட் பாலோசியஸ் மற்றும் 59 வயதான சீன் ஹான்கொக் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுவனை இருவரும் பல சந்தர்ப்பங்களில் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.Read More →