Reading Time: < 1 minute

இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார திட்டங்களின் மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு செயலாளர் தலைமையில் புதுடெல்லியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் பொருளாதார நிலை சாதாரணமட்டத்தை எட்டியுள்ளமையினால் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.