Reading Time: < 1 minute
Tamil Business Directory
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவுவதை தடுக்க, திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உட்புற திருமண மற்றும் இறுதி சடங்குகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒரு இடத்தின் திறனில் 30 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிப்புற திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 50 பேர் வரை கலந்து கொள்ள ஒன்ராறியோ மாகாணம் அனுமதிக்கும்.
எவ்வாறாயினும், திருமண மற்றும் இறுதி சடங்குகளில் 10 பேரின் வரம்பு இன்னும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




