Reading Time: < 1 minute

யாழ் நகர முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் காலமானார் !

யாழ் நகர முன்னாள் முதல்வரும், பிரபல சட்டத்தரணியும், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.ராஜா விசுவநாதன் அவர்கள் காலமானார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தந்தையுமாகிய இவர், தனது 94வது வயதில் ஒஸ்றேலியாவின் சிட்னி நகரில் காலமாகினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1979 முதல் 1983 வரை யாழ்பாணத்தின் நகர முதல்வராக இருந்த அமரர் ராஜா விசுவநாதன் அவர்கள், தமிழர்களுடைய உரிமைகளுக்காக பல்வேறு அரசியல் தளங்களில் முன்னின்று உழைத்தவர் மட்டுமன்றி சமூகச் செயற்பாட்டிலும் உழைத்தவராக இருக்கின்றார்.