Reading Time: < 1 minute

கல்கரிக்கு மேற்கே உள்ள சூட்டினா எனும் பூர்வ குடிகள் வாழும் பகுதியில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சில்லரை விற்பனை நிறுவனமான ‘கொஸ்கோ’ (Costco) பல்பொருள் அங்காடி எதிர்வரும் 2020ஆம் ஆண்டு கோடையில் திறக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Tamil Business Directory

150,000 சதுர அடி. தென்மேற்கு கல்கரி ரிங் வீதி மற்றும் 130ஆவது அவென்யூவின் மூலையில் இதற்கான நிர்மாணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல பில்லியன் டொலர்கள் மதிப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த கொஸ்கோ, கனடாவின் பூர்வ குடிகள் வாழும் பகுதியில் நிர்மானிக்கப்படும் முதல் கொஸ்கோ பல்பொருள் அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொஸ்கோவில், சில்லறை விற்பனை நிலையங்கள், பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் வளாகங்கள், ஒரு ஆராய்ச்சி வளாகம் மற்றும் சுகாதார மற்றும் ஆரோக்கிய கூறுகளைக் கொண்ட அலுவலக மேம்பாடுகள் ஆகியன அடங்குகின்றன.