Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் பெற்றோலின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022ம் ஆண்டின் பின்னர் பதிவான அளவிற்கு விலை ஏற்றம் பதிவாகும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கனடிய மலிவு சக்தி வள அமைப்பின் தலைவர் டேன் மெக் டியாகு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 14 சதங்களாக உயர்த்தப்பட உள்ளது. ஒன்றாரியோவில் ஒருRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இந்த நிதியாண்டக்கான பாதீட்டுப் பற்றாக்குறை தொகை 39.2 பில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் நேற்றைய தினம் பாதீட்டுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்து. நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் சமர்ப்பித்திருந்தார். அதிகளவு வருமானம் ஈட்டுவோரிடம் கூடுதல் வரி அறவீடு செய்யும் யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. நாட்டின் வீடமைப்புத் திட்டங்களையும் சமூக நலன்புரித் திட்டங்களையும் முன்னெடுப்பதற்காக இவ்வாறு கூடுதல் வரி அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியRead More →

Reading Time: < 1 minute பிரபல நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்ட விடயத்தில், அது தொடர்பில் கனடாவில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 5.00 மணியளவில், மும்பையிலுள்ள நடிகர் சல்மான் கான் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை பொலிசார் இரண்டு பேரைக் கைது செய்துள்ளார்கள். அவர்கள் சல்மான் கானை பயமுறுத்துவதற்காகவே சுட்டதாகவும், அவர்கள் நோக்கம் சல்மான் கானைத் தாக்குவது அல்லRead More →

Reading Time: < 1 minute கனடாவில் சுமார் 400 கிலோ கிராம் எடையுடைய தங்கக் கொள்ளையுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்னதாக ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தங்கம் மற்றும் அமெரிக்க டொலர்கள் களவாடப்படடிருந்தன. விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் பணம் அடங்கிய பெட்டி களஞ்சியச்சாலையில் வைக்கப்பட்டதன் பின்னர் களவாடப்பட்டிருந்தது. தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தின் மொத்தப் பெறுமதி சுமார் 21.1 மில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளைச்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும், பிரதிப் பிரதமருமான கிறிஸ்டியா ப்ரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பதவி விலகல்கள்Read More →

Reading Time: < 1 minute ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்காக, மத்திய அரசாங்கத்திடம் ஒட்டாவா நகரம் உதவி கோரியுள்ளது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 32.6 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரியுள்ளது. ஒட்டாவா நகர முதல்வர் மார்க் சுட்கிளிப் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக இந்த உதவி கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நகரத்திற்குள் வரும் ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு அதிகளவில் உதவிகள் வழங்கப்படக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நீண்டRead More →

Reading Time: < 1 minute கனடிய பெண் ஒருவர் 20 நிமிட டாக்ஸி பயணத்திற்காக ஏழாயிரம் டொலர் கட்டணத்தை செலுத்த நேரிட்டுள்ளது. சட்டவிரோதமான டாக்ஸி நிறுவனமொன்றின் சேவையை பெற்றுக்கொண்டதனால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. அன்டார்டிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்ட போது இவ்வாறு குறித்த பெண் ஏமாற்றப்பட்டுள்ளார். பெட் செக்லெடி என்ற பெண்ணே இவ்வாறு மோசடி நிறுவனமொன்றிடம் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் சன்டியாகோ விமான நிலையத்தில் டாக்ஸி ஒன்றை பெட் செக்லெடி மற்றும் அவரது நண்பிRead More →

Reading Time: < 1 minute கனடாவில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார். கனடாவில், 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman(44), தம்பதியரின் மகள் Yumna Salman (15), மகன் Fayez Afzal (9)மற்றும் Afzaalஇன் தாயார் ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, Nathaniel Veltman (20)Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் களவாடப்பட்ட 600 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட வாகனங்கள் இவ்வாறு மொன்றியல் துறைமுகத்திலிருந்து மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வாகனங்களில் பெரும்பான்மையானவை கார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் இந்த வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படவிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மொன்றியால் துறைமுகத்தில் அதிகளவான கொள்கலன்கள் ஏற்றி இறக்கப்படுவதனால் சட்டவிரோத வாகன ஏற்றுமதிகளை தடை செய்வதில் சவால்கள் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறெனினும், வாகனங்கள் களவாடப்பட்டு சட்டவிரோதமாக ஏற்றுமதிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இளம் வயதினர் அதிகளவில் போதை மருந்து பயன்பாட்டினால் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மிதமிஞ்சிய அளவில் போதை மருந்து பயன்பாட்டினால் 20 மற்றும் 30 வயதுகளை உடையவர்கள் அதிகம் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்கு தேவையான கொள்கை வகுப்புக்களில் ஆர்வம் காட்டப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் போதைRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தில் ரயிலில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மாகாண முதல்வர் டக் போர்ட் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். GO Transit போக்குவரத்து சேவை வாரந்தம் 300 புதிய ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் இவ்வாறு ரயில் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டின் பின்னர் மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதி கூடிய போக்குவரத்துப்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் வீட்டு விற்பனைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு மார்ச் மாதம் சுமார் 20 வீதத்தினால் வீட்டு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. வட்டி வீதங்கள் குறைவடையும் என மக்கள் காத்திருப்பதனால் வீடுகள் விற்பனை குறைவடைந்துள்ளது என பொருளியல் ஆய்வாளாகள் தெரிவிக்கின்றனர். கனடிய மத்திய வங்கிகடந்த மார்ச் மாதம் 6460 வீடுகள் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும்,Read More →