Reading Time: < 1 minute கனடாவில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார். கனடாவில், 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman(44), தம்பதியரின் மகள் Yumna Salman (15), மகன் Fayez Afzal (9)மற்றும் Afzaalஇன் தாயார் ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, Nathaniel Veltman (20)Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் களவாடப்பட்ட 600 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட வாகனங்கள் இவ்வாறு மொன்றியல் துறைமுகத்திலிருந்து மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வாகனங்களில் பெரும்பான்மையானவை கார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் இந்த வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படவிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மொன்றியால் துறைமுகத்தில் அதிகளவான கொள்கலன்கள் ஏற்றி இறக்கப்படுவதனால் சட்டவிரோத வாகன ஏற்றுமதிகளை தடை செய்வதில் சவால்கள் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறெனினும், வாகனங்கள் களவாடப்பட்டு சட்டவிரோதமாக ஏற்றுமதிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இளம் வயதினர் அதிகளவில் போதை மருந்து பயன்பாட்டினால் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மிதமிஞ்சிய அளவில் போதை மருந்து பயன்பாட்டினால் 20 மற்றும் 30 வயதுகளை உடையவர்கள் அதிகம் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்கு தேவையான கொள்கை வகுப்புக்களில் ஆர்வம் காட்டப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் போதைRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தில் ரயிலில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மாகாண முதல்வர் டக் போர்ட் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். GO Transit போக்குவரத்து சேவை வாரந்தம் 300 புதிய ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் இவ்வாறு ரயில் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டின் பின்னர் மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதி கூடிய போக்குவரத்துப்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் வீட்டு விற்பனைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு மார்ச் மாதம் சுமார் 20 வீதத்தினால் வீட்டு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. வட்டி வீதங்கள் குறைவடையும் என மக்கள் காத்திருப்பதனால் வீடுகள் விற்பனை குறைவடைந்துள்ளது என பொருளியல் ஆய்வாளாகள் தெரிவிக்கின்றனர். கனடிய மத்திய வங்கிகடந்த மார்ச் மாதம் 6460 வீடுகள் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் ஹாலிபெக்ஸ் பகுதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹொலிஸ் வீதி மற்றும் டெர்மினால் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய 21 பேரை ஹாலிபெக்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். போராட்ட இடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலைRead More →

Reading Time: < 1 minute இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கனடிய அரசாங்கம் அறிவுரை வழங்கியுள்ளது. ஈரான் மேற்கொண்ட கடுயைமான ட்ரோன் தாக்குதல்கள் தொடர்பில் கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை முறியடித்ததனை இஸ்ரேல் வெற்றியாக கருத வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பதிலுக்கு ஈரான் மீது குண்டுத் தாக்குதல்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்தல்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் சமீப காலமாக உருவாக்கப்பட்டு வருவதை நாம் கவனித்துவருகிறோம். ஆக, புலம்பெயர்தல் கொள்கைகளை மறுசீரமைத்துவிட்டால் வீடுகள் தட்டுப்பாடு குறைந்துவிடுமா? உண்மையாகவே, கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்தல்தான் காரணமா? இந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளிக்கும் பேராசிரியர் Paul Kershaw, வீடு தட்டுப்பாடு பிரச்சினையின் பின்னால் ஒரு மோசமான ரகசியம் உள்ளது என்கிறார். 2005ஆம் ஆண்டு, ஜனவரி மாத நிலவரப்படி, சராசரியாகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் 400 கிலோ கிராம் எடையுடைய தங்கம் காணாமல் போய் ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. எனினும், இதுவரையில் காணாமல் போன பொருட்களுக்கு என்ன நேர்ந்தது என்பது கண்டு பிடிக்கப்படவில்லை. சுவிட்சர்லர்நதின் சூரிச் நகரிலிருந்து கனடாவிற்கு இந்த தங்கம் மற்றும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் ரொக்கம் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தRead More →

Reading Time: < 1 minute இஸ்ரேலின் மீது ஈரானிய படையினர் நடத்திய தாக்குதல்களை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வன்மையாக கண்டித்துள்ளது. பிரதமர் ட்ரூடோ இந்த கண்டனத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதலான மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் போர் ஏற்படக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதல்களின் மூலம் ஈரானிய அரசாங்கம் பிராந்திய வலயத்தின் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் உதாசீனம் செய்வது புலனாகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மருத்துவமனையில் இடமில்லை, கோஸ்டாரிகாவில் சிக்கித் தவிக்கும் கனடியர்! கனடாவில் மருத்துவமனை வசதியில்லா காரணத்தினால், ஒன்றாரியோவைச் சேர்ந்த ஒருவர் கொஸ்டாரிக்காவில் நிர்க்கதியாகியுள்ளார். கொஸ்டாரிக்காவில் திடீரென உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட ஒன்றாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவர் இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார். ஒன்றாரியோவின் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவமனை படுக்கைகளுக்கு (hospital beds) பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவின் கலாபோகி பகுதியைச் சேர்ந்த கிரான்ட் றைஸ் என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். 69Read More →

Reading Time: < 1 minute கனடாவின் வான்கூவார் சானிச் பகுதியில் மலைச்சிங்கமொன்று சுற்றித் திரிவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சானிச் பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். வீடொன்றின் கொள்ளைப்புறத்தில் மலைச் சிங்கத்தை கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்ற போதிலும் மலைச் சிங்கத்தை கண்டு பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த சிங்கம் அடுத்து எங்கு சென்றது என்பது பற்றிய தெரியவில்லை எனவும் இதனால் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைச் சிங்கம் பூனைRead More →