Reading Time: < 1 minute

கனடா அதன் சைபர் அச்சுறுத்தல் எதிரிகளின் பட்டியலில் முதன்முறையாக இந்தியாவின் பெயரை வெளியிட்டுள்ளது.

Tamil Business Directory

இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் இராஜதந்திர மோதலுக்கு மத்தியில், கனடாவின் தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 (என்.சி.டி.ஏ 2025-2026) அறிக்கையில் இந்தியாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இப்பட்டியலில் சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கனடாவின் சைபர் பாதுகாப்பு மையத்தின் சமீபத்திய அறிக்கையில், “கனடா அரசின் நெட்வொர்க்குகளில் உளவுத்தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்திய அரசின் ஆதரவுள்ள சைபர் மிரட்டல் இயக்கங்கள் செயல்படுகின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவை நோக்கி சுட்டிக்காட்டியுள்ள NCTA 2025-2026 அறிக்கை, இந்தியா தனது தேசிய பாதுகாப்பு குறிக்கோள்களை முன்னேற்றுவதற்கும், உளவு மற்றும் எதிர்ப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சைபர் திறன்களை மேம்படுத்துவதற்கு உறுதியாக இருக்கிறதென்று குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளின் உறவுகளில் நிலவும் சிக்கல்கள் காரணமாக இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியாவின் சைபர் நடவடிக்கைகள் கனடா மீது அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.