Reading Time: < 1 minute

இரண்டு கனேடிய போர்க்கப்பல்களில் தங்கியிருந்த மாலுமிகள் கடந்த வருடம் தங்களை அறியாமலேயே பூஞ்சணம் படிந்த மெத்தைகளில் உறங்கியதற்கான ஆதாரங்கள் வௌியாகியுள்ளன.

Tamil Business Directory

அது தொடர்பான ஔிப்படங்கள் மற்றும் ஆவணங்களை கனடாவின் சீ.பி.சி. இணையத்தளம் பெற்றுள்ளது.

கப்பலில் ஏற்பட்ட இந்த பிரச்சினைக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு மற்றும் பொருள் இருப்பு தொடர்பான ஆய்வுகளின் மூலம் தீர்வுகாணப்பட்டுள்ளது.

எச்.எம்.சி.எஸ். செயின்ட் ஜோன்ஸ் மற்றும் எச்.எம்.சி.எஸ் சார்லோட்டவுன் கப்பல்களில் உள்ள குழு உறுப்பினர்கள் பூஞ்சணம் படிந்த படுக்கைகளில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி குறைந்தது ஒரு சுற்றுச்சூழல் மருத்துவ நிபுணரையாவது கவலைப்பட வைத்திருக்கும் என்று சீ.பி.சி குறிப்பிட்டுள்ளது.

“பொதுவாக, பெரிய அளவிலான பூஞ்சை படிந்த பகுதிகளில் யாராக இருந்தாலும் சுவாசிக்கப்படுவது ஆரோக்கியமானதல்ல” என்று பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார மற்றும் பாடசாலை மாணவர் தொகை மதிப்பீட்டு பேராசிரியர் கரேன் பார்ட்லெட் தெரிவித்துள்ளார்.

தனித்தனியாக கசிந்த ஆவணங்கள் மற்றைய கப்பலான எச்.எம்.சி.எஸ் சார்லோட்டவுனில் இதேபோன்ற பிரச்சினை இருக்கின்றமையை கோடிட்டுக் காட்டுகின்றன.

நீர் கசிவை ஏற்படுத்தும் காற்று சீராக்கி காரணமாகவே குறித்த மெத்தைகளில் அடிப்பகுதியில் பூஞ்சணம் ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.