Reading Time: < 1 minute

இலங்கைக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய பாடகியும் நடிகையுமான அண்ட்ரியா இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு சென்றிருந்த அவர் அங்கு இறைவழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நல்லூரில் எடுத்த புகைப்படங்களை தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் அவை, வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.