Reading Time: < 1 minute

பிரித்தானியாவிலிருந்து ஐ எஸ் அமைப்புக்கு பிரித்தானிய பெண்களைக் கடத்தும் ஆபரேஷனில் கனேடிய உளவுத்துறைக்கு பங்கு இருப்பதாக, கைது செய்யப்பட்டுள்ள உளவாளி ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய பள்ளி மாணவியான ஷமீமா பேகம் ஐ எஸ் அமைப்பில் சேருவதற்காக லண்டனிலிருந்து தனது சக மாணவிகள் இருவருடன் சிரியாவுக்கு ஓடினார். இப்போது, தான் பிரித்தானியாவுக்கு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார் அவர். அவரது சட்டத்தரணி, ஷமீமா சிரியாவுக்குக் கடத்தப்பட்ட ஒரு அப்பாவிப் பெண். அவள் கனேடிய உளவாளி ஒருவரால் கடத்தப்பட்டவர் என்று சொல்லி புதிய விடயம் ஒன்றை சொல்லியுள்ளார்.

ஆனால், அவர் சொல்வது உண்மையோ என்று என்று எண்ணும் வகையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம், ஷமீமா சிரியாவுக்குச் சென்றதைத் தொடர்ந்து, அவர் சிரியாவுக்கு செல்வதற்கு உதவி செய்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய பெயர் மொஹமத் அல் ரஷீத் (Mohammed Al Rasheed). அவர் துருக்கியில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கூறியுள்ள விடயங்கள் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ரஷீத், புகலிடம் கோருவதற்காக ஜோர்டானிலுள்ள கனேடிய தூதரகத்துக்குச் சென்றாராம். அப்போது அங்குள்ள கனேடிய அதிகாரிகள், ஐ எஸ் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு தகவல்கள் கொடுத்தால் அவருக்கு கனேடிய குடியுரிமை பெற்றுத் தருவதாக கூறினார்களாம்.